search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர்பு"

    • முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலாளி சரவணன்
    • கணவன் -மனைவிக்கும் அடிக்கடி தகராறு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரசிங்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. தொழிலாளி அடிக்கடி குடித்து விட்டு வருவதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அப் பெண் பக்கத்து வீட்டை சேர்ந்த முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலாளி சரவணன் (47) என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் இருந்து வந்த அப் பெண் வேறு ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

    இந்த விவகாரம் கள்ளக்காதலன் சரவணனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், கள்ளக்காதலியை கொள்ளுகாரன் குட்டைக்கு வரவழைத்துள்ளார்.

    கொள்ளுகாரன்குட்டை பகுதியில் உள்ள முந்திரி தோப்புக்கு அழைத்துச் சென்று யாருடன் மணி கணக்கில் போனில் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப் பெண்ணை சரவணன் தன் கையில் வைத்திருந்த சுத்தியால் காலிலும், தலையிலும் அடித்துள்ளார்.

    இதில் காயம் அடைந்தஅப் பெண் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.
    • போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் கடந்த 29-ம் தேதி சுவர் ஏறி குதித்து புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு உண்டி யலை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஆலய பக்தர் சங்க நிர்வாகி ராஜேஷ், தேவசம் போர்டு ஸ்ரீகாரியம் முத்தமிழ் செல்வன் ஆகியோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பல்வேறு இடங்களில் உண்டியலை தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மறுநாள் (30-ந்தேதி) மாலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உண்டியல் கண்டெடு க்கப்பட்டது. ஆனால் அதில் இருந்த காணிக்கை பணம் ெகாள்ளை போயிருந்தது.

    இதையடுத்து கொள்ளை யர்களை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கொள்ளை நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் டிப்- டாப் தோற்றத்துடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி கோயி லுக்கு வந்துள்ளனர்.

    அவர்கள் வெளியே சுற்றி திரிந்ததை பார்த்த கோயில் மேல் சாந்தி, ஆலய காம்பவுண்டுக்குள் வந்து சாமி தரிசனம் செய்யுங்கள் என கூறியுள்ளார். இதை எதிர்பார்த்து இருந்த கொள்ளையர்கள் ஆல யத்தின் உள்ளே சட்டையை கழற்றி விட்டு வந்து அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்வது போன்று நோட்மிட்டுள்ளனர்.

    இதை பார்த்த ஆலய மேல் சாந்தி பிரசாதம் வாங்கும்படி கூறியுள்ளார். ஆனால் பிரசாதம் வாங்காமல் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தனி படை போலீசார் கோவில் கொள்ளையர்களின் போட்டோக்களை கொண்டு வந்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் மேல் சாந்தியிடம், அடையாளம் காட்டும் படி கூறியுள்ளனர்,

    அதில் பார்த்தபோது வட இந்தியாவில் உள்ள பிரபல கொள்ளையனின் ஒருவன் அடையாளம் காட்டப்பட்டது, மேலும் மற்றொரு கொள்ளையன் நாகர்கோயிலை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது,

    கோயிலை கொள்ளை யடிக்க வடநாட்டு கொள்ளை யர்கள் நோட்ட மிட்டு உண்டியலை கொள்ளை யடித்து சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம்.
    • போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் வந்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது குடும்பத்தினர் 16 பவுன் நகை, புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சீதனமாக கொடுத்தனர்.

    ஆனால் திருமணமான 2 மாதத்திலேயே எனது கணவர் என்னை தாக்கி அடித்து துரத்தி விட்டார். எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவ ருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம் ஆகும்.

    எனது கணவர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

    ஆனால் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.

    எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து மீட்டுத் தாருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பஸ்சில் ஒன்றாக ஏறி மாயமானவரை பிடிக்க தனிப்படை
    • பிடிபட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை

    நாகர்கோவில்:

    பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை-பணம் ஜேப்படி செய்யப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஸ் நிலை யங்களில் சாதாரண உடை களில் போலீசார் சுற்றி வரு கின்றனர்.

    இந்த நிலையில்அண்ணா பஸ் நிலையம் வந்த ஒரு பஸ்சில் இருந்து இறங்கிய மூதாட்டி திடீரென திருடி..திருடி..என கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு பஸ்சில் வந்தவர்களும், பஸ் நிலையத்தில் நின்றவர்களும் திரும்பி பார்த்த போது, ஒரு பெண் அங்கிருந்து ஓடுவது தெரிய வந்தது. அவர் மூதாட்டி கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் செல்வது தெரிய வந்ததும் பலரும் அந்தப் பெண்ணை விரட்டிச் சென்றனர்.

    பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த பெண், செம்மாங்குடி சாலை வழியாக குறுக்குச் சாலை பகுதியில் சென்றபோது பொது மக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. முதலில் நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் எனக் கூறிய அவர், அதன் பிறகு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்தார். இதனை போலீசாரும் உறுதிப்படுத்தினர்.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி னர். அப்போது அவருக்கு மேலும் சிலருடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது.

    இவர்கள் கும்பலாக வந்து பின்னர், ஒன்றிரண்டு பேராக சேர்ந்து ஜேப்படியில் ஈடுபடுவார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே பிடிபட்ட பெண்ணுடன் தொடர்புடைய கும்பல் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் பிடிபட்ட பெண், புத்தேரி பகுதியில் தான் பஸ் ஏறி உள்ளார். அப்போது அவருடன் மேலும் ஒரு பெண்ணும் ஏறி உள்ளார். ஆனால் அவர் திருட்டு சம்பவம் பொதுமக்களுக்கு தெரிந்து கூச்சல்-குழப்பம் ஏற்பட்டதால், அங்கிருந்து நைசாக நழுவி விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர் எங்கே சென்றார்? வேறு பயணிகளிடம் கை வரிசை ஏதும் காட்டி உள்ளாரா? என போலீ சாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    எனவே அந்தப் பெண்ணை பிடிக்கவும், அவருடன் தொடர்பு டைய கும்பலை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்க ப்பட்டு உள்ளன.

    இந்த தனிப்படையினர் பஸ் நிலையத்தில் பிடி பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
    • கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம் நெரிக்கல்மேடு பகுதியில் ஒரு கும்பல் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக கருங்கல்பாளையம் சிந்தன்நகரை சேர்ந்த வேல்முருகன் (28), ராஜகோபால் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (30), அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற செந்தில் நாகராஜன் (36) காவேரி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(26), சொக்காய் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரகு (24) என தெரிய வந்தது.

    இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

    ×