search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்று சிக்கிய பெண்ணுக்கு மேலும் சிலருடன் தொடர்பு
    X

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்று சிக்கிய பெண்ணுக்கு மேலும் சிலருடன் தொடர்பு

    • பஸ்சில் ஒன்றாக ஏறி மாயமானவரை பிடிக்க தனிப்படை
    • பிடிபட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை

    நாகர்கோவில்:

    பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை-பணம் ஜேப்படி செய்யப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஸ் நிலை யங்களில் சாதாரண உடை களில் போலீசார் சுற்றி வரு கின்றனர்.

    இந்த நிலையில்அண்ணா பஸ் நிலையம் வந்த ஒரு பஸ்சில் இருந்து இறங்கிய மூதாட்டி திடீரென திருடி..திருடி..என கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு பஸ்சில் வந்தவர்களும், பஸ் நிலையத்தில் நின்றவர்களும் திரும்பி பார்த்த போது, ஒரு பெண் அங்கிருந்து ஓடுவது தெரிய வந்தது. அவர் மூதாட்டி கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் செல்வது தெரிய வந்ததும் பலரும் அந்தப் பெண்ணை விரட்டிச் சென்றனர்.

    பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த பெண், செம்மாங்குடி சாலை வழியாக குறுக்குச் சாலை பகுதியில் சென்றபோது பொது மக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. முதலில் நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் எனக் கூறிய அவர், அதன் பிறகு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்தார். இதனை போலீசாரும் உறுதிப்படுத்தினர்.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி னர். அப்போது அவருக்கு மேலும் சிலருடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது.

    இவர்கள் கும்பலாக வந்து பின்னர், ஒன்றிரண்டு பேராக சேர்ந்து ஜேப்படியில் ஈடுபடுவார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே பிடிபட்ட பெண்ணுடன் தொடர்புடைய கும்பல் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் பிடிபட்ட பெண், புத்தேரி பகுதியில் தான் பஸ் ஏறி உள்ளார். அப்போது அவருடன் மேலும் ஒரு பெண்ணும் ஏறி உள்ளார். ஆனால் அவர் திருட்டு சம்பவம் பொதுமக்களுக்கு தெரிந்து கூச்சல்-குழப்பம் ஏற்பட்டதால், அங்கிருந்து நைசாக நழுவி விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர் எங்கே சென்றார்? வேறு பயணிகளிடம் கை வரிசை ஏதும் காட்டி உள்ளாரா? என போலீ சாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    எனவே அந்தப் பெண்ணை பிடிக்கவும், அவருடன் தொடர்பு டைய கும்பலை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்க ப்பட்டு உள்ளன.

    இந்த தனிப்படையினர் பஸ் நிலையத்தில் பிடி பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×