search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 வாலிபர்கள் கொலை வழக்கில் தொடர்பு
    X

    3 வாலிபர்கள் கொலை வழக்கில் தொடர்பு

    • அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
    • கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம் நெரிக்கல்மேடு பகுதியில் ஒரு கும்பல் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக கருங்கல்பாளையம் சிந்தன்நகரை சேர்ந்த வேல்முருகன் (28), ராஜகோபால் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (30), அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற செந்தில் நாகராஜன் (36) காவேரி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(26), சொக்காய் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரகு (24) என தெரிய வந்தது.

    இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

    Next Story
    ×