search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலக்கு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.

    போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.

    • தமிழ்நாடு முழுவதும் 10 கோடி பனை விதை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பனை மரத்தை தேவையில்லாமல் வெட்டி அழிப்பதை தடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் டெல்டா பனை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒரு இலட்சம் பனை விதை நடும்பணி தொடக்கவிழா நடைப்பெற்றது.

    நகர்மன்ற நியமன குழு உறுப்பினர்பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில், மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையேற்று பனைவிதை நடும்பணியை தொடங்கிவைத்தார்.

    ஒரு லட்சம் பனை விதை நடும் திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்முசிறி விதையோகநாதன் கூறும்போது, திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் நவம்பர் மாதம் வரை இப்பணி நடைப்பெறும், மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும். அடுத்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பத்து கோடி விதை நடஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    பனையின் பயன் குறித்து இயற்கை வேளாண் பயிற்றுனர் பாலம் செந்தில்குமார் பேசும் போது, பனை தமிழ் நாட்டின் மரம். அதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படுவதால் கற்பகதரு என்றழைக்கப்படுகிறது,.எந்த தட்பவெப்ப நிலையிலும் தழைத்து உயிர்வாழக்கூடியது. தனது சல்லிவேர்கள் மூலம் மழைநீரை பூமிக்குள் சேமிக்ககூடியது. மண் அரிப்பை தடுக்கும், ஒரு பனைமரம் ஆண்டிற்கு 180 லிட்டர் பதனீர், 25 கிலோ பனைவெல்லம்,16 கிலோ பனஞ்சீனி, 11 கிலோ தும்பு, 3 கிலோ ஈக்கி, 10 கிலோவிறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் , 100 கிலோ பனங்கிழங்கு என இதன் பயன் அளவிடமுடியாது. இப்படி பல்வேறு நன்மைகளை தரும் பனைமரத்தை தேவையில்லாமல் வெட்டி அழிப்பதை தடுக்கவும், மீண்டும் இதை அதிகளவு நட்டு வளர்த்து நமது சந்ததிகளுக்கு வளமான பூமியைவிட்டு செல்வோம் என இந்நாளில் உறுதியேற்போம் என்றார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரவி, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம் ,

    பாரத மாதா நிறுவனர் எடையூர் மணிமாறன், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ், ரோட்டரிகாளிதாஸ், ரோட்டரி சங்க தலைவர் மாணிக்கம், அரிமா சங்க தலைவர் சின்னதுரை, நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், நூற்றாண்டு லயன்ஸ் சங்க தலைவர் கார்த்தி, தோட்டகலை, நீர் வள ஆதார துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கோமதி செந்தில்குமார், வசந்த், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி சரவணம் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். 

    • ஆண்டுக்கு ரூ.740 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6,585 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவத்தில் இதுவரை 78 ஆயிரத்து 486 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டிலும் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டதால் வரலாற்று சாதனையாக கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி பரப்பை நமது மாவட்டம் எட்டியுள்ளது.

    குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானியங்களில் கேழ்வரகு, பயிறு வகை பயிர்க ளில் உளுந்து, எண்ணெய் வித்துப்பயிர்களில் நிலக்கடலை ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    சம்பா பருவத்திற்கு ஏற்ற நீண்ட மற்றும் மத்தியகால நெல் விதைகள் இதுவரை 311 டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 389 டன் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 7,827 டன்னும், டி.ஏ.பி. 2,823 டன்னும், பொட்டாஷ் 1,858 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 3,694 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், தார்பாய்கள், ஜிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.2023-24-ம் ஆண்டுக்கு ரூ.740 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 22-ந் தேதி வரை ரூ.101 கோடியே 84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6,585 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.

    மேற்கண்ட தகவலை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் பேசினார்.

    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100 அலகுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • மானியமாக ரூ.4 ஆயிரத்து 800 பயனாளியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 2022-23-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கயிறு மூலமாக கடற்பாசி வளர்த்தல் மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100 அலகுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.1 பயனாளிக்கு 2 அலகு வீதம் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப டுகின்றன.

    இந்தத் திட்டத்தின் படி 1 அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.8000-ல் 60 சதவீதம் மானியமாக ரூ.4800 பயனாளியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

    எனவே தஞ்சாவூர் மாவட்டமானது கடற்பாசி வளர்ப்பிற்கு உகந்த பகுதியாக அமைந்துள்ளதால் மீனவ மகளிரின் மாற்று வாழ்வாதாரமாக கடல்பாசி வளர்ப்பு மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரத்தில் உள்ள மீன்துறை சார் ஆய்வாளர் அலுவலகங்களை (தொலைபேசி எண் - 9952226545, 7339349630 ) நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க புதிய உறுப்பினர் சேர்க்கைக்காண படிவங்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், ஒன்றிய கழக செயலாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். புதிய உறுப் பினர்கள் படிவங்களை அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். ராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலா ளர்கள் வெற்றி செழியன், கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியண்ணன், பகுதி செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், வக்கீல் ஜீவானந்தம், அவனியாபுரம் முருகேசன், சரவணன், பன்னீர்செல்வம், மாவட்ட கலை பிரிவு செயலாளர் அரசு, மேலூர் சரவணகுமார் ,மற்றும் மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத் தலைவர் கவுரி சங்கர், சேனாபதி, ஒத்தக்கடை ராஜேந்திரன், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

    இந்த இயக்கத்தின் ஆணி வேர்கள் தொண்டர்கள் தான். அம்மா இருந்தபோது ஒன்றரை கோடி தொண் டர்கள் இருந்த இந்த இயக்கத்தை, 2 கோடி தொண்டர்களாக உருவாக்கிட எடப்பாடியார் திட்டங்களை வகுத்து வருகிறார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங் குன்றம், மேலூர், மதுரை கிழக்கு ஆகிய 3 தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைவரும் இந்த இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஒவ் வொரு தொகுதிகளிலும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நிர்ணயித்து, 3 தொகுதிகளிலும் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உருவாக்க சிறப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரக்கன்றுகள் நட்டு அதனை முறையாக பராமரிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
    • ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் நிர்வாகம், மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினமான 22-4-22 அன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் முதல் மரக்கன்றை நட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டு வந்தார்.

    இந்த நிலையில் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது. அதன்படி இன்று தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 லட்சமாவது மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி 1 லட்சமாவது மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது இந்த திட்டம் வெற்றிகரமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிவடைந்ததை முன்னிட்டு அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் இன்று 1 லட்சமாவது மரக்கன்று நடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பசுமை பரப்பு மற்றும் வனப்பரப்பினை அதிகப்படுத்துவது , பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொது மக்களிடம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இதனால் வரை வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோவில் வளாகங்கள், மருத்துவமனை வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்று படுகைகள், மற்றும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், பள்ளிகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், கல்லூரிகள் சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும், இதர அரசுத்துறைகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தில் நடப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி இணை செயல்பாடுகளின் பொறுப்பாளர்களும் , அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

    திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இசைவனம், அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய வனம், சமுத்திரம் ஏரியில் பறவைகள் வனம், மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆழி வனம் ஆகவே சிறப்புக்குரியதாகும்.

    மரக்கன்றுகள் நடுவதோடு அதனை முறையாக பராமரிப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இயற்கையை பராமரித்து மேம்படுத்த வேண்டும். 99 சதவீத மரங்கள் நல்ல உயிர்ப்புடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், டாக்டர் சிங்காரவேல், ரெட் கிராஸ் டாக்டர் வரதராஜன், பொறியாளர் முத்துக்குமார், மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சங்கரநாராயணன், தாசில்தார் சக்திவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33,000 கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.
    • ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு இலவசமாக வழங்கபடும்.

    சீர்காழி:

    சீர்காழி வேளாண்துறை உதவி இயக்குனர் ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது :-

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண் நிலங்களில் பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தில் 2022- 23 க்கான மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33,000 கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.

    வரப்பில் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் 160 கன்றுகள் 1 ஹெக்டர் வரப்புபரப்பிற்கு வழங்கப்படும்.

    ஒரு விவசாயிக்கு2 ஹெக்டர் வரை வழங்க ப்படும். அதேபோல் வயல் முழுவதும் நடவு செய்வதற்கு 500 மரக்கன்றுகள் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு இலவசமாக வழங்கபடும்.

    விவசாயிகள் தாங்களே உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவன சிதறல்களுக்கு ஆளாகாமல் சரியான முறையில் தோ்ச்சி பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றாா்.
    • முடிவில் சா்வதேச வணிகம் துறைத் தலைவா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

    அவினாசி:

    அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு, கல்லூரி விளையாட்டு வீரா்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் பேசுகையில், மாணவா்கள் தெளிவான இலக்கினை வைத்துக்கொண்டு தொடா்ச்சியான உழைப்பை செலுத்த வேண்டும். கவன சிதறல்களுக்கு ஆளாகாமல் சரியான முறையில் தோ்ச்சி பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றாா்.

    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவிநாசி சக்திவேல் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் சக்திவேல், சுய தொழில் செய்வதில் உள்ள சிறப்பம்சங்கள், சுயதொழில் செய்வதற்கான அரசு வழங்கும் சலுகைகள், தொழிலில் ஏற்படும் சவால்களை எப்படி சமாளிப்பது, சமகால நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வது குறித்து விளக்கிப் பேசினாா்.முடிவில் சா்வதேச வணிகம் துறைத் தலைவா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

    • 300 ஹெக்டர் பரப்பளவில் பாமாயில் மரம் வைக்க ேதாட்டக்கலை துறைக்கு இலக்கு நிர்ணயம்.
    • பாமாயில் மர சாகுபடி செய்துள்ள சில விவசாயிகள் தங்கள் அனுபவங்கள் குறித்து பேசினர்.

    தஞ்சாவூர்:

    தேசிய சமையல் எண்ணை திட்டம் - எண்ணை பனை(பாமாயில் மரம் ) மூலம் நடப்பாண்டிற்கு ( 2022-23) தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஹெக்டர் பரப்பளவில் பாமாயில் மரம் சாகுபடி செய்வதற்காக தோட்டக்கலைத் துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்க–ப்பட்டுட்டுள்ளது. இதனை அடுத்து கோத்ரேஜ் அக்ரோவேட் நிறுவனத்தின் சார்பில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் தஞ்சை அடுத்த ஒரத்தநாடு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு பாமாயில் மர சாகுபடி தொழில்நுட்பம் குறித்து மத்திய மாநில அரசுடன் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்தும் கோத்ரெஜ் அக்ரோவேட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி - (மார்க்கெட் டெவலப்மென்ட் ) முத்துச்செல்வன் விளக்கினார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் கோத்ரேஜ் நிறுவன அதிகாரிகளும், கள பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தோட்டக்கலை அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர்.

    மேலும் பாமாயில் மரம் சாகுபடி செய்துள்ள சில விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்கள் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் 2037 -ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகள் அடைகின்ற பலனையும், பாதுகாப்பையும் விளக்கினார்கள். அதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஒரத்தநாடு அருகில் உள்ள வடக்கூர் கிராமத்தில் பாமாயில் மரம் சாகுபடி செய்து மகசூல் பெற்று வருகின்ற காத்தலிங்கம் என்கின்ற விவசாயியின் வயலை பார்வையிட்டனர்.

    அப்போது தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் இம்மரத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், அரசின் மானிய திட்டங்கள் குறித்தும் விளக்கினார். இந்த வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாமாயில் மர சாகுபடி இலக்கினை முழுமையாக எட்டுவோம் என்று உறுதியளித்தனர்.

    • குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிர்ணயம்
    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது.

    கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள் முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவா ளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.

    தற்போதைய காலத்திற் கேற்ற வகையில் புதிய யுக்தி களை கையாண்டு பல வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், குமரி மாவட்டத்தில் உள்ள 4 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் ரூ.2.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு ரூ.4.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல் படுத்தி வருகிறது. இதில் மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களி டம் இருந்து பெறப்பட்டு 11-வது மற்றும் 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    நிகழ்ச்சியில் கோ-ஆப் டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், முதுநிலை மேலாளர்(தணிக்கை) இசக்கிமுத்து, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலாவாணி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பத்மராஜ் செய்திருந்தார்.

    • தீபாவளி பண்டிகையையொட்டி, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் கதா் விற்பனையைத் தொடங்கியுள்ளோம் என்று கூறினார்.
    • 52 நெசவாளா்களுக்கு நேரடியாகவும், சுமாா் 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது

    திருப்பூர்:

    திருப்பூா் குமாா் நகா் கதா் அங்காடி வளாகத்தில் காந்தியடிகள் பிறந்தநாள் விழா மற்றும் கதா் சிறப்பு விற்பனை தொடக்கவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர், காந்தியடிகளின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அனைத்து கதா், பட்டு மற்றும் பாலியஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

    பல ஆயிரம் கிராமங்களைக் கொண்ட நமது நாட்டில், விவசாயத் தொழிலில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முடிகிறது. மீதமுள்ள நாள்களில் உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு நூல் நூற்பு, நெசவு மற்றும் சோப்பு தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தச்சு உள்ளிட்ட கிராமத் தொழில்களில் வருவாய் ஈட்டவும், கிராமப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் காந்தியடிகளால் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த கதா் கிராமத் தொழில் திட்டங்கள்.

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் 7 கதா் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 346 பெண் நூற்பாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ப்பட்டு, ரூ. 60.89 லட்சம் மதிப்பிலான கதா் மற்றும் பாலியஸ்டா் நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், 52 நெசவாளா்களுக்கு நேரடியாகவும், சுமாா் 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 1.27 கோடி மதிப்பிலான கதா் மற்றும் பாலியஸ்டா் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் மற்றும் அவிநாசியில் செயல்படும் 2 காதி கிராப்ட்கள் மூலம் 2021- 22 ஆம் ஆண்டுக்கு ரூ. 2.53 கோடி கதா் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், ரூ. 1.76 கோடிக்கு கதா் பட்டு மற்றும் பாலியஸ்டா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாவட்டத்தில் 2022- 23 ஆம் ஆண்டில் ரூ. 2.53 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் கதா் விற்பனையைத் தொடங்கியுள்ளோம் என்று கூறினார். நிகழ்ச்சியில், கதா் கிராம தொழில்கள் உதவி இயக்குநா் வி.வி. ரவிக்குமாா், மொழிப்போா் தியாகிகளின் வாரிசுதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • புதிய வடிவமைப்புகளில் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • நடப்பாண்டு தீபாவளிக்கு ரூ.13 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் கூட்டு றவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சீபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டு உள்ளன.

    தஞ்சாவூர் வைரைம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2022 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    கடந்த தீபாவளி 2021 பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ.7 கோடியே 49 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.13 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளிக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 23-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.1 கோடியே 70 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு, 11- வது மற்றும் 12 -வது மாத சந்தா தொகையை கோ- ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி,

    மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்எம்.அ ன்பழகன் ,அரசு அலுவல ர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்கள் எம்.ஸ்ரீதர், ஆர்.சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×