search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு லட்சம் பனை விதை நடும் பணி தொடங்கியது
    X

    பனை விதைகள் நடும்பணி தொடக்கவிழா நடைபெற்றது.

    ஒரு லட்சம் பனை விதை நடும் பணி தொடங்கியது

    • தமிழ்நாடு முழுவதும் 10 கோடி பனை விதை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பனை மரத்தை தேவையில்லாமல் வெட்டி அழிப்பதை தடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் டெல்டா பனை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒரு இலட்சம் பனை விதை நடும்பணி தொடக்கவிழா நடைப்பெற்றது.

    நகர்மன்ற நியமன குழு உறுப்பினர்பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில், மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையேற்று பனைவிதை நடும்பணியை தொடங்கிவைத்தார்.

    ஒரு லட்சம் பனை விதை நடும் திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்முசிறி விதையோகநாதன் கூறும்போது, திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் நவம்பர் மாதம் வரை இப்பணி நடைப்பெறும், மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும். அடுத்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பத்து கோடி விதை நடஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    பனையின் பயன் குறித்து இயற்கை வேளாண் பயிற்றுனர் பாலம் செந்தில்குமார் பேசும் போது, பனை தமிழ் நாட்டின் மரம். அதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படுவதால் கற்பகதரு என்றழைக்கப்படுகிறது,.எந்த தட்பவெப்ப நிலையிலும் தழைத்து உயிர்வாழக்கூடியது. தனது சல்லிவேர்கள் மூலம் மழைநீரை பூமிக்குள் சேமிக்ககூடியது. மண் அரிப்பை தடுக்கும், ஒரு பனைமரம் ஆண்டிற்கு 180 லிட்டர் பதனீர், 25 கிலோ பனைவெல்லம்,16 கிலோ பனஞ்சீனி, 11 கிலோ தும்பு, 3 கிலோ ஈக்கி, 10 கிலோவிறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் , 100 கிலோ பனங்கிழங்கு என இதன் பயன் அளவிடமுடியாது. இப்படி பல்வேறு நன்மைகளை தரும் பனைமரத்தை தேவையில்லாமல் வெட்டி அழிப்பதை தடுக்கவும், மீண்டும் இதை அதிகளவு நட்டு வளர்த்து நமது சந்ததிகளுக்கு வளமான பூமியைவிட்டு செல்வோம் என இந்நாளில் உறுதியேற்போம் என்றார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரவி, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம் ,

    பாரத மாதா நிறுவனர் எடையூர் மணிமாறன், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ், ரோட்டரிகாளிதாஸ், ரோட்டரி சங்க தலைவர் மாணிக்கம், அரிமா சங்க தலைவர் சின்னதுரை, நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், நூற்றாண்டு லயன்ஸ் சங்க தலைவர் கார்த்தி, தோட்டகலை, நீர் வள ஆதார துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கோமதி செந்தில்குமார், வசந்த், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி சரவணம் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார்.

    Next Story
    ×