இலக்கினை வைத்துக்கொண்டு தொடா்ச்சியான உழைப்பை செலுத்த வேண்டும் - மாணவர்களுக்கு அவினாசி கல்லூரி முதல்வர் அறிவுரை

கவன சிதறல்களுக்கு ஆளாகாமல் சரியான முறையில் தோ்ச்சி பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றாா்.முடிவில் சா்வதேச வணிகம் துறைத் தலைவா் பாலமுருகன் நன்றி கூறினாா்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

அவினாசி:

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு, கல்லூரி விளையாட்டு வீரா்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் பேசுகையில், மாணவா்கள் தெளிவான இலக்கினை வைத்துக்கொண்டு தொடா்ச்சியான உழைப்பை செலுத்த வேண்டும். கவன சிதறல்களுக்கு ஆளாகாமல் சரியான முறையில் தோ்ச்சி பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவிநாசி சக்திவேல் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் சக்திவேல், சுய தொழில் செய்வதில் உள்ள சிறப்பம்சங்கள், சுயதொழில் செய்வதற்கான அரசு வழங்கும் சலுகைகள், தொழிலில் ஏற்படும் சவால்களை எப்படி சமாளிப்பது, சமகால நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வது குறித்து விளக்கிப் பேசினாா்.முடிவில் சா்வதேச வணிகம் துறைத் தலைவா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com