search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்- அதிகாரி தகவல்
    X

    விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்- அதிகாரி தகவல்

    • மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33,000 கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.
    • ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு இலவசமாக வழங்கபடும்.

    சீர்காழி:

    சீர்காழி வேளாண்துறை உதவி இயக்குனர் ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது :-

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண் நிலங்களில் பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தில் 2022- 23 க்கான மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33,000 கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.

    வரப்பில் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் 160 கன்றுகள் 1 ஹெக்டர் வரப்புபரப்பிற்கு வழங்கப்படும்.

    ஒரு விவசாயிக்கு2 ஹெக்டர் வரை வழங்க ப்படும். அதேபோல் வயல் முழுவதும் நடவு செய்வதற்கு 500 மரக்கன்றுகள் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு இலவசமாக வழங்கபடும்.

    விவசாயிகள் தாங்களே உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×