என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Adventure"
- வீடியோ வெளியிட்டு டெல்லி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார்.
பைக்கில் சாகசம் செய்வது இளைஞர்களுக்கு பிடித்த விஷயமாகி போனாலும், சில நேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்துவிடும். எனவே தான் போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், ஒரு காதல் ஜோடி பைக்கில் சாகசம் செய்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. பைக்கில் வேகமாக செல்லும் இளைஞரை பின்னால் இருக்கும் அவரது காதலி கட்டிப்பிடித்து கொண்டிருக்கிறார். அப்போது வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த காட்சிகள் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை வைத்து போலீசார் அந்த ஜோடியை அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் மூலமாகவே விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டனர். அதில், நாங்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்துக்கு உள்ளானோம். எனவே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
- மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
கல்லாகுளம் ஊராட்சி யில் அமைக்கப்பட்ட, புகைப்படக் கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு, சுதந்திர திருநாளை யொட்டி தலைமை செயலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்குவதன் தொடக்க விழா நிகழ்ச்சி, நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோவில் பணியாளர் களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவி வழங்கியதன் புகைப் படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.
இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ் நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.
- சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.
- இதற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் வருகிற ஜூலை 14 -ந்தேதி வரை வரவேற்கப்படு கின்றன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். இதைத்தவிர சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாடி வருகின்றனர். மேலும் பலர் சமூக சேவை புரிந்து வருகின்றனர்.
தேசிய விருது
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சாசகத்துடன் தொடர்புடையவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், இளைஞர்களிடையே கூட்டாக செயல்படும் உணர்வை மேம்படுத்தவும், சவாலான சூழ்நிலைகளில் விரைந்து செயல்படுவதை ஊக்கப்படுத்தவும், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் டென்சிங் நார்கே தேசிய சாசக விருதினை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக டென்சிங் நார்கே தேசிய சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் வருகிற ஜூலை 14 -ந்தேதி வரை வரவேற்கப்படு கின்றன. இந்த விருதுக்கான விதிமுறைகளை இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுக்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் அறியலாம்.
ரூ.15 லட்சம்
இந்த விருது ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசையும், வெண்கல பதக்கம், சான்றிதழையும் கொண்டது. வழக்கமாக இந்த விருது 4 வகைகளில் வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக நிலம், கடல், வான் சாகசங்களுக்கு விருது வழங்கப்படுவதோடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
- சோழவந்தான் அருகே தி.மு.க. இளைஞரணி சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
- ராயபுரம், திருமால்நத்தம் ஆகிய கிளைக்கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே ரிஷபம் ஊராட்சி ராயபுரம் கிராமத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தி.மு.க. ஆட்சியின் 2 சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரிஷபம் சிறுமணி, திருவேடகம் பழனியம்மாள், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றதுணைத்தலைவர் கேபிள்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பால் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர் அலெக்சாண்டர், நிர்வாகிகள் பெரியகருப்பன், சந்தானலட்சுமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வனிதா ரங்கநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன் ஆகியோர் பேசினர். ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகாவீரபாண்டி, கார்த்திகாஞானசேகரன், தென்கரை சோலைராஜன், மேலக்கால் பன்னீர்செல்வம், ராஜா, ஒன்றிய இளைஞரணி ரிஷபம், ராயபுரம், திருமால்நத்தம் ஆகிய கிளைக்கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள்
- மதுரையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தபோது வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
- மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.
மதுரை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி நாகஜோதி (48). இவர்கள் அதிக வெப்பம் காரணமாக இரவில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிய நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ.47 ஆயி ரத்து 500 மற்றும் செல்போனை திருடி கொண்டு தப்பினார்.
இது குறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு திருட்டு
சிலைமான் செல்வராஜ் நகர் புவனேஸ்வரி காலனியை சேர்ந்த வேலு மகன் சுந்தர் (34). இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்று வாங்குவதற்காக கதவை திறந்து வைத்திருந்த போது வீடு புகுந்த மர்ம நபர் 8 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.5 ஆயிரத்தை திருடி கொண்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து திருடியவர் கைது
மதுரை துரைசாமி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் சரண்ராஜ் (36). சம்பவத் தன்று மாலை இவர் வெளியே சென்றார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக் கொண்டு தப்ப முயன்றார்.
இந்த நேரத்தில் வெளியே சென்ற சரண்ராஜ் அந்த மர்ம நபரை பொதுமக்களு டன் சேர்ந்து விரட்டி பிடித்தார். பின்னர் அவர் எஸ்.எஸ்.காலணி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கீழவெளி வீதி லட்சுமிபுரம் 8-வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அகிலன் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- பைக் ஓட்டி சாகசம் செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை சொக்கிகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் சிறுவன் உள்பட 3 வாலிபர்கள் பைக் ஓட்டி சாகசம் செய்து கொண்டிருந்தனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியதால் இதுகுறித்து பொதுமக்கள், தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட காமராஜ் நகர் ஷரீப் மகன் நியாஸ் (வயது25), செல்லூர் சக்தி மாரியம்மன் கோவில் தெரு, குருநாதன் மகன் மீனாட்சி சுந்தரம் (21), மற்றும் 17 வயது சிறுவன்ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் ஓட்டிச்சென்ற 2 பைக்குகளையும், அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை அணி வென்றது.
- வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மதுரை
மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தில் மாவட்ட டேபிள் டென்னிஸ் மேம்பாட்டு சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான 4 நாள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதனை தேசிய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் முதல் முறையாக 22 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் வித்யாசாகர், மதுரை மாவட்ட டேபிள் டென்னிஸ் வளர்ச்சி சங்க செயலாளர் நாகராஜன் கணேசன், விளையாட்டு இயக்குனர் நாகராஜன், கௌரவ உறுப்பினர் பிரகதீஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
- இந்தப்பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரமக்குடி
தமிழகம் முழுவதும் வெளியான பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் மாணவி தீபிகா முதலிடத்தையும், சவிதா 2-ம் இடத்தையும், கோபிகா 3-ம் இடத்தையும் பெற்றனர்.
வணிகவியல் பாடத்தில் மாணவி கோபிகா, விலங்கியல் பாடத்தில் தீபிகா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். 99 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தாளாளர் சாதிக் அலி, தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
சவுராஷ்டிரா பள்ளி
சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் கார்த்திகேயன், 2-ம் இடம் பிடித்த மாணவி பிரித்திகா, 3-ம் இடம் பிடித்த மாணவன் பார்த்த சாரதி ஆகியோரை கல்வி குழு தலைவர் நாகநாதன், உப தலைவர் நாகநாதன், தாளாளர் அமரநாதன், இளநிலை பள்ளி தாளாளர் ராஜன் ஆகியோர் பாராட்டினர். இந்தப் பள்ளியில் 96 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி லக்சிதா ஸ்ரீ முதலிடமும், மாணவர்கள் அதீஸ்வரன் 2-ம் இடமும், பாலாஜி 3-ம் இடமும் பெற்றுள்ளனர். மாணவிகள் தனுஸ்ரீ, துர்கா கணிப்பொறியியல் பாடத்திலும் 100 மதிப்பெண்களும், இந்திரஜித் என்ற மாணவன் தாவரவியல், பிரியா என்ற வணிகவியல் பாடத்திலும் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
மாணவ - மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுச்சாமி, பள்ளியின் தாளாளர் லெனின் குமார், ஆயிர சபை செயலாளர் செல்வராஜ், கௌரவ செயலாளர் வக்கீல் செந்தில்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியை சுமதி, கல்வி குழு உறுப்பினர்கள் சுதர்சன், பூபாலன் உள்பட ஆசிரியர்கள்பாராட்டினர்.
இந்தப் பள்ளியில் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுப கீர்த்தி முதலிடமும், கீர்த்திகா இரண்டாம் இடமும், அர்ஜுன் மூன்றாம் இடம் பெற்றனர். இவர்களை பள்ளியின் தாளாளர் முருகானந்தம், இணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர்
- அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை
தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். வல்லபாய் மெயின் ரோட்டில் 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டி ருந்தனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 5 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்கள் ஜம்புரோபுரம் பெருமாள்சாமி தெரு, அர்ஜுனன் மகன் சுப்பிரமணியராஜ் ( 20), பழனி மகன் பிரகாஷ் (20), செல்லூர் பாரதி தெரு சையதுஅலி மகன் அசாருதீன் (20), கோரிப் பாளையம் சோமசுந்தரம் தெரு சீனி சுல்தான் மகன் முகமது உமர் பாரூக் (23), செல்லூர் தியாகி பாலு தெரு தன பாண்டியன் மகன் ராமமூர்த்தி (19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல சிந்தாமணி-பழைய குயவர்பாளையம் ரோடு சந்திப்பில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற காமராஜர்புரம், முத்துராமலிங்கம் தெரு சின்ன முனீஸ் மகன் சண்முகவேலை (19) கீரைதுறை போலீசார் கைது செய்தனர்.
- மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 9 பேர் சிக்கினர்.
- தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.
மதுரை
தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டிருந்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 9 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அவர்கள் பரசுராம்பட்டி சிலோன் காலனி கனக சுந்தரம் மகன் ஜீவரஞ்சன் (வயது21), புதூர் வீரகாளி கோவில்தெரு சுரேஷ் மகன் வினோத் கமார்(20), செல்லூர் எலி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், மாட்டுத்தாவணி கருப்பையா மகன் விஜயசாரதி (21), நரிமேடு ஜீவா குறுக்குத்தெரு முத்துப்பாண்டி மகன் வினோத் (18), செல்லூர் 50 அடி ரோடு சரவணன் மகன் பிரதீப் (21), நரிமேடு, ஜீவா தெரு, செந்தில் குமார் மகன் மனோஜ் (19), அவரது சகோதரர் வேல் பிரபாகரன் (22), சுயராஜ்யபுரம் ராஜா மகன் நிரஞ்சன் (19) என்பது தெரியவந்தது. 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார்.
- வீட்டில் வந்து ஸ்கூட்டியை திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனைக் கண்டு அப்துல் ரஷித் அதிர்ச்சியடைந்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் பள்ளி வாசல் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார். பணத்தை கைப்பையில் வைத்து வங்கியிலிருந்து வெளியில் வந்தார். அங்கு நிறுத்தியிருந்த அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார்.இவரது வங்கி கணக்குப் புத்தகத்தை வங்கியிலேயே வைத்து விட்டு வந்தது அப்போது தான் அவருக்கு நினைவுக்கு வந்தது. மீண்டும் வங்கிக்குள் சென்று வங்கி புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டில் வந்து ஸ்கூட்டியை திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனைக் கண்டு அப்துல் ரஷித் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக திருவெண்ணைய்நல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி சம்பவ நடந்த இந்தியன் வங்கிக்கு போலீசார் விரைந்து வந்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் வங்கி வாசலில் பணம் கொள்ளை போன சம்பவம் திருவெண்ணைநல்லூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்