search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் உள்பட 3 பேர் கைது
    X

    சிறுவன் உள்பட 3 பேர் கைது

    • பைக் ஓட்டி சாகசம் செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை சொக்கிகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் சிறுவன் உள்பட 3 வாலிபர்கள் பைக் ஓட்டி சாகசம் செய்து கொண்டிருந்தனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியதால் இதுகுறித்து பொதுமக்கள், தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட காமராஜ் நகர் ஷரீப் மகன் நியாஸ் (வயது25), செல்லூர் சக்தி மாரியம்மன் கோவில் தெரு, குருநாதன் மகன் மீனாட்சி சுந்தரம் (21), மற்றும் 17 வயது சிறுவன்ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் ஓட்டிச்சென்ற 2 பைக்குகளையும், அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×