என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமக்குடி பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
- பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
- இந்தப்பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரமக்குடி
தமிழகம் முழுவதும் வெளியான பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் மாணவி தீபிகா முதலிடத்தையும், சவிதா 2-ம் இடத்தையும், கோபிகா 3-ம் இடத்தையும் பெற்றனர்.
வணிகவியல் பாடத்தில் மாணவி கோபிகா, விலங்கியல் பாடத்தில் தீபிகா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். 99 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தாளாளர் சாதிக் அலி, தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
சவுராஷ்டிரா பள்ளி
சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் கார்த்திகேயன், 2-ம் இடம் பிடித்த மாணவி பிரித்திகா, 3-ம் இடம் பிடித்த மாணவன் பார்த்த சாரதி ஆகியோரை கல்வி குழு தலைவர் நாகநாதன், உப தலைவர் நாகநாதன், தாளாளர் அமரநாதன், இளநிலை பள்ளி தாளாளர் ராஜன் ஆகியோர் பாராட்டினர். இந்தப் பள்ளியில் 96 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி லக்சிதா ஸ்ரீ முதலிடமும், மாணவர்கள் அதீஸ்வரன் 2-ம் இடமும், பாலாஜி 3-ம் இடமும் பெற்றுள்ளனர். மாணவிகள் தனுஸ்ரீ, துர்கா கணிப்பொறியியல் பாடத்திலும் 100 மதிப்பெண்களும், இந்திரஜித் என்ற மாணவன் தாவரவியல், பிரியா என்ற வணிகவியல் பாடத்திலும் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
மாணவ - மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுச்சாமி, பள்ளியின் தாளாளர் லெனின் குமார், ஆயிர சபை செயலாளர் செல்வராஜ், கௌரவ செயலாளர் வக்கீல் செந்தில்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியை சுமதி, கல்வி குழு உறுப்பினர்கள் சுதர்சன், பூபாலன் உள்பட ஆசிரியர்கள்பாராட்டினர்.
இந்தப் பள்ளியில் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுப கீர்த்தி முதலிடமும், கீர்த்திகா இரண்டாம் இடமும், அர்ஜுன் மூன்றாம் இடம் பெற்றனர். இவர்களை பள்ளியின் தாளாளர் முருகானந்தம், இணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்