search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர்
    X

    மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர்

    • மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர்
    • அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். வல்லபாய் மெயின் ரோட்டில் 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டி ருந்தனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 5 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் ஜம்புரோபுரம் பெருமாள்சாமி தெரு, அர்ஜுனன் மகன் சுப்பிரமணியராஜ் ( 20), பழனி மகன் பிரகாஷ் (20), செல்லூர் பாரதி தெரு சையதுஅலி மகன் அசாருதீன் (20), கோரிப் பாளையம் சோமசுந்தரம் தெரு சீனி சுல்தான் மகன் முகமது உமர் பாரூக் (23), செல்லூர் தியாகி பாலு தெரு தன பாண்டியன் மகன் ராமமூர்த்தி (19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல சிந்தாமணி-பழைய குயவர்பாளையம் ரோடு சந்திப்பில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற காமராஜர்புரம், முத்துராமலிங்கம் தெரு சின்ன முனீஸ் மகன் சண்முகவேலை (19) கீரைதுறை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×