search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து நகை-பணம் திருட்டு
    X

    வீடு புகுந்து நகை-பணம் திருட்டு

    • மதுரையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தபோது வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
    • மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி நாகஜோதி (48). இவர்கள் அதிக வெப்பம் காரணமாக இரவில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிய நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ.47 ஆயி ரத்து 500 மற்றும் செல்போனை திருடி கொண்டு தப்பினார்.

    இது குறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு திருட்டு

    சிலைமான் செல்வராஜ் நகர் புவனேஸ்வரி காலனியை சேர்ந்த வேலு மகன் சுந்தர் (34). இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்று வாங்குவதற்காக கதவை திறந்து வைத்திருந்த போது வீடு புகுந்த மர்ம நபர் 8 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.5 ஆயிரத்தை திருடி கொண்டு தப்பினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடு புகுந்து திருடியவர் கைது

    மதுரை துரைசாமி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் சரண்ராஜ் (36). சம்பவத் தன்று மாலை இவர் வெளியே சென்றார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக் கொண்டு தப்ப முயன்றார்.

    இந்த நேரத்தில் வெளியே சென்ற சரண்ராஜ் அந்த மர்ம நபரை பொதுமக்களு டன் சேர்ந்து விரட்டி பிடித்தார். பின்னர் அவர் எஸ்.எஸ்.காலணி போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் கீழவெளி வீதி லட்சுமிபுரம் 8-வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அகிலன் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×