search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvananthapuram"

    • கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் காணப்பட்டது.
    • உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் அங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வரும் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் இந்த முன்பதிவை பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையில் சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவும் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த 2 முறைகளால் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் காணப்பட்டது.

    இதனால் தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது. இதுகுறித்து கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த சீசனில் உடனடி முன்பதிவு மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வெளியான தகவல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் உடனடி தரிசன முன்பதிவு முறையை ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இனி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் விரை வில் மூடப்படுகிறது.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.

    கூட்டம் முடிந்ததும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறுகையில், சபரிமலையில் இனி வரும் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் அறிக்கை வருகிற 23-ந் தேதி ஐகோர்ட்டில் சமர்பிக்கப்படும். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக அப்பம், அரவணைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும்,அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கும் ரோப் கார் பயன்படுத்தப்படும் என்றார்.

    • மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ்.
    • இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம், மே.5-

    மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ். இவர் மீது கவர்னர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சி.வி. ஆனந்தபோஸ், கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலுவா வழியாக சென்றார். அப்போது அவருக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    • கடும் வெப்பம் காரணமாக மாநிலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
    • மின்நுகர்வுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. கேரள மாநிலத்திலும் அதிக வெப்பம் காணப்படுவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக மாநிலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

    இதனை தொடர்ந்து மண்டல வாரியாக மின் கட்டுப்பாடு நடவடிக்கையை கேரள மாநில மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

    அதன்படி மின் நுகர்வு அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள், இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

    வணிக நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு பிறகு அலங்கார விளக்குகள் மற்றும் விளம்பர பலகைகளை அணைக்க வேண்டும். வீட்டு உபயோகிப்பாளர்கள் 26 டிகிரிக்கு மேல் ஏ.சி.களை அமைக்க வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

    முதல் கட்டமாக பாலக்காடு மின்வட்டத் திற்குபட்ட பகுதிகளில் இரவு 7 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மின்சாரம் ஒழுங்குபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிரிப்பாலா, ஓட்டப்பாலம், ஷோரனூர், செர்புளச்சேரி துணை மின் நிலையங்களில் மின் விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    இந்த நேரத்தில் மின் நுகர்வுகளை முடிந்தவரை தவிர்த்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேரள மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.

    • ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து
    • ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர்.

    பிரபல மோகினியாட்டக் கலைஞர் ராமகிருஷ்ணனை தரக்குறைவாக விமர்சித்த பரத நாட்டியக் கலைஞர் கலமண்டலம் சத்யபாமா மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருவனந்தபுரத்தில் நாட்டியப் பள்ளி நடத்தி வரும் மூத்த மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார்.

    அதில், "மோகினியாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்களின் கால்களைச் சற்று அகலமாக விரித்து வைத்து ஆட வேண்டியதிருக்கும். ஒரு ஆண் இவ்வாறு கால்களை விரித்து வைத்துக் கொண்டு மோகினியாட்டம் ஆடினால் அது பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.

    ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர். அவர் அருவருப்பான மோகினியாட்டத்தைத்தான் ஆடி வருகிறார்" என்று சத்யபாமா அந்த நேர்காணலில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

    மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா தனது நேர்காணலில் குறிப்பிட்ட அடையாளங்கள், ஆர்.எல்.வி ராமகிருஷ்ணனை தான் என கேரளாவைச் சேர்ந்த பலரும் தெரிவித்தனர்.

    இவரது இந்த பேச்சு கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு கேரள அமைச்சர்கள் சஜி செரியன், ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மோகினியாட்ட கலைஞரான ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் மோகினியாட்டம் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கேரளாவில் மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிரஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது.
    • ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகிறார்.

    தன்னை மரத்தில் மறைத்து வைத்து, உயிரைக் காத்த கிருஷ்ணனுக்கு, மன்னன் மார்த்தாண்டவர்மா அமைத்த ஆலயம், புனிதம் மிக்க அம்மச்சிபிலா மரம் உள்ள கோவில், நெய்யாற்றங்கரையில் அமைந்த சிறப்பு மிக்க தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்யாற்றங்கரை கிருஷ்ணசுவாமி கோவில்.

    தலவரலாறு

    திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் முடிசூட்டும் தகுதி, அந்த மன்னனின் சகோதரியின் வாரிசுகளுக்கே வழங்கப்படும். மன்னரின் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. மன்னர் அனுஷம் திருநாள் காலத்தில் யுவராஜாவாக இருந்தவர், மார்த்தாண்ட வர்மா. அப்போது மன்னர் குடும்பத்தில் குழப்ப சூழ்நிலை இருந்தது. அதேநேரம் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு பகைவர்களாக விளங்கிய எட்டுவீட்டு பிள்ளைமார்கள், யுவராஜனை கொல்ல திட்டமிட்டனர்.

    இதனால் யுவராஜா மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மாறுவேடத்தில் வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சமயம் நெய்யாற்றங்கரைப் பகுதிக்கு வந்தபோது, பகைவர்கள் கொடிய ஆயுதங்களோடு இவரை பின்தொடர்ந்தனர். யுவராஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், நிலையை உணர்ந்து, அருகில் இருந்த பலாமரத்தின் பொந்தில் யுவராஜாவை மறைந்து கொள்ளச் சொன்னான். யுவராஜாவும் மறைந்து கொண்டார்.

    பகைவர்கள் அந்த இடம் வந்ததும், சிறுவனை விசாரித்தனர். சிறுவன் வேறு திசையைக் காட்டி மன்னரைக் காத்தான். மன்னர் உயிர் பிழைக்க வைத்த அந்த மரத்தை `அம்மச்சிபிலா' என்று அழைத்தனர்.

    யுவராஜனாக இருந்த மார்த்தாண்டவர்மா, பல தடைகளைக் கடந்து மன்னனாக முடிசூட்டிக் கொண்டார். ஆனால் அவருக்கு தன்னைக் காத்த மரமும், சிறுவனும் மறந்துபோயினர். இதற்கிடையில் மன்னன் மார்த்தாண்டவர்மா, தன் எதிரிகளான எட்டு வீட்டுப்பிள்ளைமார்கள் வம்சத்தை பூண்டோடு அழித்தார்.

    ஒரு நாள் கனவில் தோன்றிய கிருஷ்ணர், `அன்று மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து உன் உயிர் காத்தது நான்தான். என்னை மறந்து விட்டாயே. இனியும் தாமதிக்காமல் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பு" என்றார்.

    தன் தவறை உணர்ந்த மன்னர், தன் உயிர்காத்த அந்த மரத்தையே ஆதாரமாக வைத்து, ஆலயம் எழுப்ப தீர்மானித்தார். அருகே உள்ள ஒரு ஊரில் சிலை உருவாக்கப்பட்டது. கல்லால் உருவான அந்த கிருஷ்ணன் சிலையை அவ்வூரில் இருந்து படகில் ஏற்றி வந்தனர். ஆனால் அச்சிலையோ ஆலயம் வர விரும்பாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. பிரசன்னம் பார்த்தபோது `ஐம்பொன் சிலையே வேண்டும்' என உத்தரவு வந்தது. அதன்படியே ஒன்றரை அடி உயர ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அச்சிலை, மன்னரின் கனவில் கிருஷ்ணர் தோன்றிய வடிவில் அமைக்கப்பட்டது. இவரே இன்று நெய்யாற்றங்கரை ஶ்ரீகிருஷ்ணசுவாமி என அழைக்கப்படுகிறார். கி.பி. 1755-ம் ஆண்டில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னரைக் காத்த அந்த பலாமரமும் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

     ஆலய அமைப்பு

    தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உயரமான நுழைவு வாசலின் மேற்புறத்தில் கீதை உபதேசக் காட்சி, சுதை வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. நீண்ட நடைப்பந்தல், அடுத்து தங்கக் கொடிமரம் வரவேற்கின்றது. பலிக்கல், நமஸ்கார மண்டபம், படிகள், கதவுகள், சுவர்கள் அனைத்தும் பித்தளைத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளன. `ஶ்ரீகோவில்' எனப்படும்

    கருவறையானது, சதுர வடிவில் அமைந்துள்ளது. கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. கருவறைக்குள் ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகின்றார். இரு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகள் தாங்கி, விரித்த தலைமுடியுடன் அருள் காட்சி வழங்குகின்றார். கருவறையை சுற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. வேட்டைக்கு ஒரு மகன், தர்மசாஸ்தா, நடராஜர், ராமர் பட்டாபிஷேகம், நரசிம்மர், கணபதி, மகாலட்சுமி, கிராத மூர்த்தி படங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் கிருஷ்ணன் மீது சாத்திய வெண்ணெய், நோய் தீர்க்கும் அருமருந்தாக கருதப்படுகிறது.

    தினமும் அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில், பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரியும் நல்லமுறையில் கொண்டாடப்படுகிறது.

    அமைவிடம்

    திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நெய்யாற்றங்கரை. இங்கு செல்ல கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ரெயில் வசதிகள் உள்ளன.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது
    • நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.

    நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.

    அதில், "சேச்சி... சேட்டன்மார்... ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்ங்க" என்று விஜய் மலையாளத்தில் பேசினார்.

    விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை பயிற்சி போட்டியில் பங்கு பெற திருவனந்தபுரம் வந்தது.
    • மழை காரணமாக பயிற்சி ஆட்டம் நடைபெறவில்லை.

    திருவனந்தபுரம்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி உலக கோப்பை பயிற்சி போட்டியில் பங்கு பெறுவதற்காக கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. மழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சி ஆட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் சப்போர்ட்டிங் ஸ்டாப்ஸ் ஆகியோர் திருவனந்தபுரம் என்ற பெயரை திணறி, திணறி உச்சரித்தனர். கடைசியில் சரியான முறையில் உச்சரித்தனர்.

    திருவனந்தபுரம் என்ற பெயரை வீரர்கள் உச்சரித்ததுடன், சரியாக சொன்னோமா என சிரிப்புடன் காட்சி அளிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    • கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்.
    • புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இரவு வழக்கம் போல் 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

    வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு, சபரிமலை தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல், பம்பையில் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்த போதிலும் கோவிலில் கட்டுப்பாடு இல்லை. எனவே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யப்பனை தரிசனம் செய்ய காத்திருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. எனினும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் சரண கோஷம் முழங்க அய்யப்பனை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

    திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவற்றை அதிகாரிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். #LokSabhaElections2019 #ThiruvananthapuramConstituency #KanyakumariConstituency
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தையொட்டி குமரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் கேரளாவின் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி என்று 2 தொகுதியிலும் பல வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தின் பாறசாலை நெய்யாற்றின் கரை, கோவளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் குமரி மாவட்டத்தின் களியக்காவிளை, விளவங்கோடு, ஈச்சவிளை, கோழிவிளை, பனச்சமூடு, ஊரம்பு, காக்க விளை பகுதிகளில் இது போன்ற இரட்டை பதிவுகள் இடம் பெறுகிறது.

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர் பட்டியலை அதிகாரிகள் சரி பார்க்கும்போது அவர்களுக்கு இது பெரும் தலைவலியாக இருக்கும். அவர்கள் இதுபோல 2 தொகுதிகளில் பெயர் உள்ளவர்களை சரிபார்த்து அவர்களது முகவரி அடிப்படையில் ஒரு தொகுதியில் இருந்து பெயரை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.



    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சரிபார்க்கும் பணி நடந்தபோது, திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். #LokSabhaElections2019 #ThiruvananthapuramConstituency #KanyakumariConstituency

    திருவனந்தபுரம் அருகே மயக்க மருந்து கொடுத்து பல சிறுமிகளை கற்பழித்த நடன ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 19).

    இவர் அந்த பகுதியில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார். இங்கு நவீன நடனப்பயிற்சி அளித்து வந்தார். இவரது கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் ஏராளமான வாலிபர்களும், இளம் பெண்களும் இந்த நடனப் பள்ளியில் இணைந்து நடனம் கற்றனர். பல சிறுமிகளும் இவரிடம் நடனம் பயின்று வந்தனர்.

    ராகுலிடம் நடனம் கற்று வந்த கழக்கூட்டம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் நடனப்பள்ளிக்கு சென்றபோது மாயமானார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி நடனப்பள்ளிக்கு சென்றனர். அவர்களிடம் ராகுல் அந்த சிறுமி நடனம் கற்க வரவில்லை என்று கூறிவிட்டார். இதனால் உறவினர்கள் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். அந்த சிறுமிபற்றி எந்த தகவலும் கிடைக்காததால் கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினார்கள். மேலும் போலீசார் நடனப்பள்ளிக்கு சென்று ராகுலிடம் விசாரணை நடத்தினார்கள். அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

    அப்போது அந்த நடனப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அதுபற்றி ராகுலிடம் விசாரித்த போது அந்த சிறுமிக்கு அவர் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து ராகுலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அந்த சிறுமியை போல மேலும் பல சிறுமிகளை அவர் மயக்கமருந்து கொடுத்து கற்பழித்தது தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் லேப்-டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு இன்று பூஜை நடக்கிறது.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலுக்கும், எதிரே அவுஷதகிரி மலையில் உள்ள ஹயக்கிரீவரை வழிபடுவதற்காகவும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நை-பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி இன்று தேவநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தேவநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. பின்னர் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். காலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் வெளி பிரகாரத்தில் கழிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டபோது எடுத்த படம்.


    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள். எனவே கோவில் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலின் வெளி பிரகாரத்தில் கழிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் கண்காணிக்கும் வகையில் உயர்கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மொட்டையடிப்பதற்காக கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், புதுப்பாளையம் ராஜகோபால் சுவாமி, புதுக்குப்பம் கஜேந்திர வரதராஜபெருமாள், பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள், அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார், விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபால சுவாமி, சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. 
    கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கலை போலீசார் இன்று கொச்சியில் கைது செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார்.



    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது. 

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று அறிவித்தது. 

    இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பிராங்கோ முல்லக்கலிடம்  போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    ×