search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalabhavan mani"

    • ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து
    • ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர்.

    பிரபல மோகினியாட்டக் கலைஞர் ராமகிருஷ்ணனை தரக்குறைவாக விமர்சித்த பரத நாட்டியக் கலைஞர் கலமண்டலம் சத்யபாமா மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருவனந்தபுரத்தில் நாட்டியப் பள்ளி நடத்தி வரும் மூத்த மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார்.

    அதில், "மோகினியாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்களின் கால்களைச் சற்று அகலமாக விரித்து வைத்து ஆட வேண்டியதிருக்கும். ஒரு ஆண் இவ்வாறு கால்களை விரித்து வைத்துக் கொண்டு மோகினியாட்டம் ஆடினால் அது பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.

    ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர். அவர் அருவருப்பான மோகினியாட்டத்தைத்தான் ஆடி வருகிறார்" என்று சத்யபாமா அந்த நேர்காணலில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

    மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா தனது நேர்காணலில் குறிப்பிட்ட அடையாளங்கள், ஆர்.எல்.வி ராமகிருஷ்ணனை தான் என கேரளாவைச் சேர்ந்த பலரும் தெரிவித்தனர்.

    இவரது இந்த பேச்சு கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு கேரள அமைச்சர்கள் சஜி செரியன், ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மோகினியாட்ட கலைஞரான ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் மோகினியாட்டம் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கேரளாவில் மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிரஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மரணமடைந்த கலாபவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
    • அவரது மரணம் கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது.

    தமிழ், மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கலாபவன் மணி. ஜெமினி, மழை, பாபநாசம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி திடீரென மரணமடைந்தார்.அவரது மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்களும் , சர்ச்சை களும் அப்போது எழுந்தது. 45 வயதில் மரணமடைந்த கலாபவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.



    எனவே அவரது மரணம் கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கலாபவன் மரணம் பற்றி விசாரித்து வந்த சி.பி.ஐ. கேரள உயர் நீதிமன்றத்தில் 35 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. இதில் விசாரணை குழுவைச் சேர்ந்த உன்னிராஜன் என்ற போலீஸ் அதிகாரி சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.



    அந்த தகவலின் படி, கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பாட்டில் பீர் குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இதுவே அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. கல்லீரல் பாதித்து, ரத்தவாந்தி எடுத்த போதும், கட்டுபாடின்றி பீர் குடிப்பதை அவர் கைவிடவில்லை. மரணமடைந்த அன்று 12 பாட்டில் பீர் குடித்துள்ளார் என்றும் அதில் மெத்தல் ஆல்கஹால் கலந்துள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலாபவன் மணி இறப்புக்கு முதல் நாள் அவர் வீட்டுக்கு வந்து சென்ற நண்பர்கள் ஜாபர், இடுக்கி, தரிக்கிட காபு ஆகியோரிடம் இது குறித்து விரிவான வாக்குமூலம் பெறப்பட்டது. கலாபவன்மணி தனது மரணத்தை தானே தேடிக்கொண்டார் என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ×