search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girls molested"

    • முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
    • இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2007-ல் இறந்தார்.

    கணவர் இறந்த பிறகு தனது தாய் மாமன் சதீஷ்குமார் (வயது 43) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு தனது 2 மகள்களையும் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் சேர்த்து அங்கேயே தங்க வைத்தார்.

    முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

    2-வது திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார் சில மாதங்களுக்கு பிறகு தனக்கு குழந்தை பெற்று தர வேண்டும். இல்லையென்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வேன் என அடம்பிடித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதிலாக என்னுடைய மகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள் என கூறினார்.

    இதையடுத்து விசாகப்பட்டினத்திற்கு வந்த இளம்பெண் அங்கு 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மூத்த மகளை 2-வது கணவரிடம் ஒப்படைத்தார். சிறுமியின் கடும் எதிர்ப்பையும் மீறி சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார்.

    இதனால் சிறுமி கர்ப்பமானார். சிறுமி கர்ப்பமான விஷயம் வெளியே தெரிந்தால் அவதூறாக பேசுவார்கள் என கூறி டாக்டரிடம் அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்.

    ஆனால் மீண்டும் சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது சதீஷ்குமார் தனக்கு பெண் குழந்தை தேவையில்லை. ஆண் குழந்தை தான் வேண்டும் என அடம் பிடித்தார்.

    இதையடுத்து விசாகப்பட்டினம் சென்ற இளம்பெண் தனது 2-வது மகளை அழைத்து வந்தார். அவரையும் சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் கருவிலேயே இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இறந்த நிலையில் பிறந்த குழந்தையை தூக்கிச் சென்று கால்வாயில் வீசி விட்டனர்.

    இதனால் இளம்பெண்ணிற்கும் சதீஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனது 2 மகள்களையும் சதீஷ்குமாரிடம் விட்டு விட்டு இளம்பெண் விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் சதீஷ்குமார் மற்றும் சிறுமிகளை அழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார். இது குறித்த தகவல் அறிந்த இளம்பெண் ஏலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் அவருக்கு துணையாக இருந்த சிறுமியின் தாய் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    சிறுவயதிலேயே குழந்தை பெற்ற சிறுமிகள் தவித்து வருகின்றனர்.

    • சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து விட்டு தலைமறைவானார்.
    • வாலிபர் பெற்றோர் இல்லாத சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுடன் சமூக வலைதளங்களில் பழகி, பின்பு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கஜக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு, மலப்புரம் அருகே உள்ள பெரிந்தால் மன்னா வெங்காடு பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது20) என்ற வாலிபருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அதன் மூலம் பேசி வந்த இருவரும் நேரிலும் சந்தித்து பழகி வந்துள்ளனர். அப்போது வாலிபர் கோகுல் காதலிப்பதாக கூறி சிறுமியை பல இடங்களுக்கு காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். அவ்வாறு அழைத்துச் செல்லும் போது, சிறுமியை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து விட்டு தலைமறைவானார். இது குறித்து கஜக்கூட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கருநாக பள்ளி பகுதியில் அவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை பல முறை பலாத்காரம் செய்ததும், நகைகளை பறித்ததும் உறுதியானது. மேலும் அவர் இது போன்று பல சிறுமிகளை காதலிப்பதாக கூறி தனது வலையில் வீழ்த்தி உள்ளார்.

    அவர் பெற்றோர் இல்லாத சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுடன் சமூக வலைதளங்களில் பழகி, பின்பு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கோகுலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிகளை தனிமையில் சந்தித்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்து சென்று வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சமீபத்தில் வாலிபர் மாணவி ஒருவரை வெளியே அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த போது அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசில் புகார் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கல் தோட்டத்து வீட்டை சேர்ந்தவர் நீரஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன் இன்ஸ்டாகிரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார்.

    பின்னர் அந்த மாணவிகளை தனிமையில் சந்தித்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சமீபத்தில் அவர் இதுபோல மாணவி ஒருவரை வெளியே அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த போது அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் நீரஜை பிடித்து விசாரித்த போது அவர் இதுபோல பல மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து நீரஜை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருவனந்தபுரம் அருகே மயக்க மருந்து கொடுத்து பல சிறுமிகளை கற்பழித்த நடன ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 19).

    இவர் அந்த பகுதியில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார். இங்கு நவீன நடனப்பயிற்சி அளித்து வந்தார். இவரது கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் ஏராளமான வாலிபர்களும், இளம் பெண்களும் இந்த நடனப் பள்ளியில் இணைந்து நடனம் கற்றனர். பல சிறுமிகளும் இவரிடம் நடனம் பயின்று வந்தனர்.

    ராகுலிடம் நடனம் கற்று வந்த கழக்கூட்டம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் நடனப்பள்ளிக்கு சென்றபோது மாயமானார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி நடனப்பள்ளிக்கு சென்றனர். அவர்களிடம் ராகுல் அந்த சிறுமி நடனம் கற்க வரவில்லை என்று கூறிவிட்டார். இதனால் உறவினர்கள் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். அந்த சிறுமிபற்றி எந்த தகவலும் கிடைக்காததால் கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினார்கள். மேலும் போலீசார் நடனப்பள்ளிக்கு சென்று ராகுலிடம் விசாரணை நடத்தினார்கள். அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

    அப்போது அந்த நடனப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அதுபற்றி ராகுலிடம் விசாரித்த போது அந்த சிறுமிக்கு அவர் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து ராகுலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அந்த சிறுமியை போல மேலும் பல சிறுமிகளை அவர் மயக்கமருந்து கொடுத்து கற்பழித்தது தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் லேப்-டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    ×