search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்புக்கொடி போராட்டம்"

    திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்படும் என்று அவைத்தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். #Vaiko #PMModi
    திருப்பூர்:

    ம.தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அரசு விழா மற்றும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பூர் வருகிறார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்படும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை பிரதமர் பார்க்க வரவில்லை. ஆனால் அரசு விழா என்ற பெயரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். எங்களது கருப்புக்கொடி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #PMModi
    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக-வினர் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தமிழகத்துக்கு எதிராகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களை வஞ்சிக்கும் அவர் மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும்போது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மதிமுக கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடும் என்று வைகோ அறிவித்தார்.

    அறிவிப்பை தொடர்ந்து மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை அருகே இன்று காலை முதலே மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் கறுப்புக்கொடியுடன் திரண்டனர்.

    அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் வைகோ அங்கு வந்தார். உடனே தொண்டர்களும், நிர்வாகிகளும் “தமிழக மக்களை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப்போ” என்று கோ‌ஷம் எழுப்பினர். கறுப்பு நிற பலூன்களையும் பறக்க விட்டனர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை கமி‌ஷனர் அசோகன் உங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தார். அதற்கு வைகோ பிரதமர் மோடி மதுரையை விட்டு கிளம்பும் வரை இந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்றார்.

    அந்த சமயத்தில் போலீஸ் அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனால் தென் சென்னை மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோரை போலீசார் வலுக்கட்டாயமாக பஸ்சில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது.

    பின்னர் வைகோவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்ட செயலாளர்களை போலீசார் விடுவித்தனர். அதன்பிறகு தொடர்ந்து போராட்டம் நடந்தது. இதில் வைகோ பேசினார். அதன்பின்னர் வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 150 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.



    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கட்சியினர் மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் விளக்குத்தூண் அருகில் மறித்தனர். இதில் கட்சியின் தலைவர் தமிழ்நேசன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதேபோன்று திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகம் ராமகிருஷ்ணன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 200 பேரும் கைது செய்யப்பட்டனர்.
    டெல்டா மாவட்டங்களில் செயல்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாளை கவர்னருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #PRPandian
    திருவாரூர்:

    அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி 2 மண்டலங்களில் வேதாந்தா நிறுவனமும், சிதம்பரம் நகரத்தை மையப்படுத்தி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒரு இடத்திலும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்து வணிக ரீதியில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தாகியுள்ளது.

    இதை கண்டித்தும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மத்திய அரசின் நேரடி பிரதிநிதியான கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை (3-ந் தேதி) திருவாரூருக்கு வருகிறார்.


    டெல்டா மாவட்டங்களில் செயல்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்தும், இந்த திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரியும், திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே நாளை மாலை 3 மணியளவில் கவர்னருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

    நெல்லுக்கு குவிண்டாலுக்கு மத்திய அரசு ரூ.200 உயர்த்தி அறிவித்தது ஏமாற்றம் அளித்தது. தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரூ.70, ரூ.50 என உயர்த்தி சன்ன ரகம் ரூ.1840-ம், சாதாரண ரகம் ரூ.1800-ம் என விலை நிர்ணயம் செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதை பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #TNGovernor #BanwarilalPurohit
    ×