search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவநாதசுவாமி"

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு இன்று பூஜை நடக்கிறது.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலுக்கும், எதிரே அவுஷதகிரி மலையில் உள்ள ஹயக்கிரீவரை வழிபடுவதற்காகவும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நை-பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி இன்று தேவநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தேவநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. பின்னர் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். காலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் வெளி பிரகாரத்தில் கழிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டபோது எடுத்த படம்.


    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள். எனவே கோவில் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலின் வெளி பிரகாரத்தில் கழிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் கண்காணிக்கும் வகையில் உயர்கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மொட்டையடிப்பதற்காக கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், புதுப்பாளையம் ராஜகோபால் சுவாமி, புதுக்குப்பம் கஜேந்திர வரதராஜபெருமாள், பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள், அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார், விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபால சுவாமி, சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. 
    ×