search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakasi"

    • முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார்.
    • இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    முருகனை கந்தன், கடம்பன், வேலன், வேலாயுதம் என பல்வேறு பெயர்களால் அழைப்பர். ஆனால் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் உள்ள முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார். இங்கே 'வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி' என்ற பெயரில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதும், உலக மக்கள் நன்மை பெற வேண்டி தினமும் இங்கு யாகம் நடைபெறுவதும் இத்தலத்திற்கு மேலும் சிறப்பை அளிக்கிறது.

    தல வரலாறு

    150 ஆண்டுகளுக்கு முன்பு துலுக்கன் குறிச்சி கிராமத்தில் தேரியப்பர்-வீரம் மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர். வேலாயுதம். இவர் தினமும் தனது அன்றாட விவசாயப் பணிகளைத் தொடங்கும் முன், அதிகாலையில் வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு வனமூர்த்தி லிங்கபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அத்துடன் இவர் மூலிகைகளைக் கொண்டு வைத்தியமும் செய்து வந்தார். அருள்வாக்கும் சொல்லி வந்தார்.

    ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, முருகனை தரிசிக்க சென்றபோது, வைப்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றை கடக்க முடியாமலும், இறைவனை தரிசிக்க முடியாமலும் வருத்தத்துடன் இல்லத்திற்கு வந்து விட்டார். முருகனை தரிசிக்க முடியாத மனவேதனையில் எந்த பணியும் செய்யாமல் வீட்டில் இருந்தார். முருகனின் திருநாமத்தை கூறியபடி கண் அயர்ந்தார்.

    அப்போது கனவில் இறைவன் தோன்றி. ''என்னைக் காண நீ வெகுதூரம் வர வேண்டாம். நானே உன்னைத் தேடி உன் இருப்பிடம் வந்துவிட்டேன். நீ ஆசையாக பராமரித்து வந்த வாழை மர தோட்டத்தில். ஒரே ஒரு வாழை மரத்தில் மட்டும் குலை தள்ளி இருக்கும். அதில் தான் நான் குடிகொண்டு உள்ளேன்" எனக் கூறி விட்டு மறைந்தார்.

    மறுநாள் அதிகாலையில் வேலாயுதம் நீராடி விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கிச்சென்றார். அங்கே இறைவன் கனவில் சொன்னபடியே ஒரு வாழை மரம் மட்டும் குலை தள்ளி இருந்தது. அன்று முதல் தினமும் அதிகாலை நீராடி விட்டு முருகன் குடிகொண்டிருக்கும் வாழை மரத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்த செய்தி அக்கம்பக்கம் முழுவதும் பரவியது. இதையடுத்து பொதுமக் களும் அந்த வாழை மரத்தை வழிபட்டு வந்தனர்.

    நாட்கள் பல சென்றன. ஒரு நாள் செவல்பட்டி ஜமீன்தாரின் பணியாட்கள் வாழைத்தோட்டம் நோக்கி வந்தனர். அவர்கள் "அரண்மனையின் பிரதான கணக்குப் பிள்ளையாக இருப்பவரின் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மணப்பந்தலில் வைக்க குலை தள்ளிய வாழை வேண்டும். வேறு எங்கும் வாழை கிடைக்கவில்லை. ஆதலால் ஜமீன்தார் தங்களிடம் உள்ள வாழை மரத்தை வெட்டி எடுத்து வரும்படி உத்தர விட்டுள்ளார். எனவே இந்த குலை வாழையை தர வேண்டும்" என கேட்டனர்.

    அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வேலாயுதம். இது சாதாரண வாழை அல்ல. இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில். அதனால் தர முடியாது" என்று மறுத்தார்.

    இதுபற்றி அறிந்த ஜமீன்தார். நானே நேரில் செல்கிறேன்' என்று கூற, மணமகனோ தான் செல்வதாகக் கூறிச் சென்றான். அவனிடமும், வாழை மரத்தை தர முடியாது என்று வேலாயுதம் மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன், அந்த மரத்தை வெட்ட அதில் இருந்து ரத்தம் வெளியேறியது. மேலும் அங்கு தோன்றிய நாகம் ஒன்று. மணமகனை தீண்டியது. இதையறிந்த ஜமீன்தாரும், கணக்குப்பிள்ளையும் தோட்டத்திற்கு விரைந்து வந்து, தங்களின் பிழையை மன்னித்து விடும்படியும், மணமகனின் உயிரை காப்பாற்றும் படியும் வேண்டினர்.

    இதையடுத்து வேலாயுதம் தன் கையில் இருந்த பிரம்பை, மணமகனின் மீது வைத்து 'முருகா..முருகா.. முருகா.. என்று மூன்று முறை சொல்லவும், அவர் நல்லபடியாக உயிர் பிழைத்தார் என்று இந்த ஆலயத்திற்கு தலவரலாறு சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில் வழிபட்டால், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்குவதுடன், விஷக்கடி உள்ளிட்ட பல நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. குலம் தழைக்க வாழை மரத்தையே உதாரணமாக சொல்வர். ஆனால் இங்கு இறைவனே வாழை மரமாக இருந்து அருள்வது விசேஷமாக பார்க்கப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் வெம்பக்கோட்டை அருகே துலுக்கன் குறிச்சியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • சிவகாசியில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு மீண்டும் பட்டாசு ஆலைகள் இயங்க தொடங்கின.
    • தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் 1,070 பட்டாசு ஆலை கள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழி லாளர்களும், உப தொழில் கள் மூலம் மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்ற னர்.

    ரூ.6 ஆயிரம் கோடி

    ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டமே என்றா லும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக் கும் ஓய்வறியா மனிதர் களை கொண்ட ஊர் சிவ காசியாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி விற் பனை இலக்கை சிவகாசி பட்டாசு தொழில் சந்தைபடுத்தியுள்ளது.

    கடைசி நேர பட்டாசு வெடி விபத்துகள், அதிகாரி களின் ஆய்வுகள் பட்டாசு விற்பனையை பாதித்த போதிலும் அதையும் தாண்டி பட்டாசு விற்பனை நன்றாக இருந்ததாக விற்ப னையாளர்கள் தெரிவித்த னர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பட்டாசு ஆலைகளில் கடந்த 11-ந்தேதி உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த சில நாட்களாக பட்டாசு ஆலைக ளில் மராமத்து பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்ட னர்.

    ஆயத்த பணிகள்

    பட்டாசு அறைகளுக்கு வெள்ளை அடிப்பது, செடி கொடிகளை அகற்றுவது, ஆலையை சுத்தப்படுத்துவது போன்ற பணிகள் முழுவீச் சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று முன் தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பட்டாசு ஆலைகளில் பூஜை கள் போட்டு உற்பத்தி பணி களை தொடங்கியது.

    இதில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர். அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற் பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகளுக்கான வட மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந் தும் பெறப்பட்ட ஆர்டர் களை கொண்டு பட்டாசு உற்பத்தி பணிகளை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் செய்திருந்தனர். பட்டாசு ஆலைகள் மீ்ண்டும் திறக்கப் பட்டதால் பட்டாசு ஆலை யில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.

    • சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். லட்சுமி நாராயண புரம் ஊராட்சி பாறைப் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள சமை யலறை கூடம், கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80.90 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள சாலை, ரூ.8.44 லட்சம் மதிப்பில் மயானத்தில் காத்திருப்போர் கூடம் கட்டிடப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி யில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.3.49 லட்சம் மதிப்பில் கிருஷ்ணாபுரம் ஊரணி தூர்வரப்பட்டு குளியல் தொட்டி அமைக்கும் பணி, ரங்க பாளையம் ஊராட்சியில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ.33.24 லட்சம் மதிப்பில் நாகரத்தினம்மாள் நகர் தெருவில் அமைக்கப் பட்டுள்ள சிமெண்ட் தளம்,

    மங்கலம் ஊராட்சி கோபாலன்பட்டி கிரா மத்தில் ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சிமெண்ட் தளம் ஆகிய வற்றை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், உதவி பொறியா ளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சிவகாசி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
    • தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் ராம்கோ கிளப் சார்பில் தென்னிந்திய அளவிலான ராம்கோ டிராபி 2023- 24-ம் ஆண்டு டி-20 கிரிக்கெட் போட்டிகள் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் மைதா னத்தில் ராம்கோ கிரிக்கெட் கிளப் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. ராம்கோ கிரிக்கெட் கிளப் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 32 அணிகளும், 480-க்கும் மேற்ப்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.

    முதல் மற்றும் 2-ம் பரிசுக்கான போட்டி நேற்று மாலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த சிவகாசி ஸ்டார்ஸ் அணியும், விருதுநகரைச் சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிவகாசி ஸ்டார்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விருதுநகரை சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சிவகாசி ஸ்டார் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதல் பரிசையும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் பெற்றது.

    போட்டியில் சிவகாசி ஸ்டார் அணி முதல் பரிசையும், விருதுநகர் அக்குவா கிங்ஸ் அணி 2-ம் பரிசையும், ராஜபாளையம் ராம்கோ குரூப் அணி 3-ம் பரிசையும் தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராம்கோ நூற்பாலை பிரிவுகளின் தலைவர் மோகனரங்கன், முன்னாள் கூட்டுறவு வங்கியின் மேலாளரும், ராஜபாளையம் தி.மு.க. தெற்கு நகர செயலாளருமான பேங்க்ரா மமூர்த்தி, சரஸ்வதி அகாடமி நிறுவனர் மணிகண்டன், 36-வது வார்டு கவுன்சிலர் குணாகோபிநாத், 37-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • பட்டாசு வெடித்த போது தீப்பொறி சாரத்தின் மீதுபட்டு தீப்பிடித்தது.

    சிவகாசி:

    சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சாக்கு துணிகளால் ராஜகோபுரம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பேன்சி ரக பட்டாசு வெடித்தப் போது அதில் இருந்து வெளிவந்த தீப்பொறி கோயில் சாரத்தின் மீது சுற்றப்பட்டிருந்த சாக்கில் பட்டு தீப்பிடித்தது.

    இதில் கோயில் உச்சிபகுதி முழுவதும் சாரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களுடன் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து சிவகாசி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    சிவகாசியில் வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    சிவகாசி தெற்கு குப்பன்னாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் பொன் அஜீஸ் (வயது 22). ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்வில் பொன் அஜீஸ் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொன் அஜீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் எம்.புதுப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பொன் அஜீஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட் டது.

    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசி பகுதியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் இன்று கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன.

    சிவகாசி:

    பட்டாசு தொழிலுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அந்த தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி பட்டாசு ஆலை அதிபர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்ட 1070 பட்டாசு ஆலைகளும், மூடப்பட்டதால், சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் வலியுறுத்தின.

    பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. கலெக்டர் ஆபீஸ் முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இருப்பினும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் மூடப்பட்ட ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் தொழிலாளர்கள் நலனுக்காகவும், 2 நாட்கள் கஞ்சி தொட்டியை திறக்க சி.ஐ.டி.யூ. பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்தது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று கஞ்சி தொட்டி திறக்கப்பட்டது. என்.துரைச்சாமிபுரம், துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, சல்வார்பட்டி, மீனாட்சிபுரம், வெற்றிலையூரணி, விஜயகரி கல்குளம், ராமலிங்காபுரம் உள்பட 20 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்தனர்.

    இதேபோல் நாளை (20-ந் தேதி) செங்கிமலைப்பட்டி, ஆலாவூரணி உள்பட 40 இடங்களில் கஞ்சித்தொட்டி திறக்கப்படுகிறது.

    சிவகாசி போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை சினிமா வசனத்துடன் கிண்டல் செய்து நடித்து ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
    சிவகாசி :

    கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு கருத்து பதிவிட்டு சிலர் வீண் வம்பையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தை பற்றி, அந்த போலீஸ் நிலையத்தின் வாசலிலேயே கேலியான சினிமா வசனத்தை நடித்துக்காட்டி 4 வாலிபர்கள் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்த போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துமாரியப்பன் அளித்த புகார் வருமாறு:-

    நான் பணியில் இருந்தபோது தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு 4 வாலிபர்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நான், அந்த வாலிபர்களுக்கு அனுமதி அளித்தேன். பின்னர் சிறிது நேரத்தில் எனது ‘வாட்ஸ்அப்’பில் ஒரு நம்பரில் இருந்து வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.

    அந்த வீடியோவை பார்த்த போது, அதில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீஸ் நிலையத்தை அவதூறான முறையிலும், கிண்டல் செய்தும் சினிமா வசனத்துடன் அந்த 4 வாலிபர்களும் நடித்துக் காட்டுவது போல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் வழக்குப்பதிவு செய்தார். தகாத வார்த்தையால் பேசுவது, காவல்துறையை களங்கப்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆனையூர் துலுக்கப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 25), தங்கேஸ்வரன் (23), ராமச்சந்திராபுரம் குருமகன் (24), சுப்பிரமணியபுரம் ஈஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசாரையும், போலீஸ் நிலையத்தையும் கிண்டல் செய்து போலீஸ் நிலைய வாசலில் நின்று வாலிபர்கள் நடித்துக் காட்டிய வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
    குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தபோதிலும் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் மெத்தனத்தால் சர்வ சாதாரணமாக கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.

    இதை தடுக்க போலீசாரும் அவ்வப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

    சிவகாசி போலீசார் நேற்று சாத்தூர்-சிவகாசி ரோட்டில் உள்ள பாரப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேனில் இருந்த சாத்தூர் நெல்மேனியை சேர்ந்த சரவணமணிகண்டன் (வயது30), ராமகுருநாதன் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது புகையிலை பொருட்களை சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்ல இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சிவகாசியை சேர்ந்த சரவணக்குமாரை என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசியில் நிலம் விற்பதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    சிவகாசி விஜயகருக்கல் குளத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் தன்னிடம் 5 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், ஏக்கர் ரூ.3 லட்சம் என்றும் கூறியுள்ளார்.

    இதனை கேள்விப்பட்ட திருத்தங்கல் ராமராஜ் (42) நிலத்தை வாங்க ஆசைப்பட்டு ரூ.15 லட்சம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட ரவிச்சந் திரன், நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

    4 ஆண்டுகளாக அவர் தன்னை மோசடி செய்து விட்டதாக கூறி திருத்தங்கல் போலீசில் ராமராஜ் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பணம் மோசடி செய்ததாக ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளை திறக்க கோரி கிராம மக்கள் நடைபயணம் மேற்கொண்டு அதிகாரியிடம் மனு அளித்தனர். #FireCrackers

    சிவகாசி:

    பட்டாசு உற்பத்தியின் மையமாக விளங்கும் சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இதனை தளர்த்தக் கோரி பட்டாசு உரிமையாளர்கள் கடந்த ஒருமாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

    பட்டாசு ஆலைகளை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், ரிசர்வ்லைன், பாரைப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இன்று நடைபயணம் மேற்கொண்டனர்.

    இவர்கள் ஆனையூரில் இருந்து சிவகாசிக்கு சென்றனர். அங்கு தாசில்தார், வருவாய் அதிகாரியை சந்தித்து பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு கொடுத்தனர்.

    சிவகாசி அருகே பயிர்கள் கருகியதால் வேதனை அடைந்த விவசாயி மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது70), விவசாயி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரிடம் கடன் வாங்கி தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார்.

    பயிர் செழித்து வளர்ந்து அறுவடை செய்ய இன்னும் சில வாரங்கள் இருந்த நிலையில் திடீரென்று “அமெரிக்கன் புழு நோய்” தாக்கியது. இதில் பயிர்கள் சேதமடைந்தது.

    பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தும் பலனில்லை. இதனால் வேதனையில் இருந்த சுப்புராஜ் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் சேதம் அடைந்த பயிர்களை பார்த்து வருந்திய சுப்புராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் தனது நிலத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×