search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heart attack dies"

    சிவகாசி அருகே பயிர்கள் கருகியதால் வேதனை அடைந்த விவசாயி மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது70), விவசாயி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரிடம் கடன் வாங்கி தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார்.

    பயிர் செழித்து வளர்ந்து அறுவடை செய்ய இன்னும் சில வாரங்கள் இருந்த நிலையில் திடீரென்று “அமெரிக்கன் புழு நோய்” தாக்கியது. இதில் பயிர்கள் சேதமடைந்தது.

    பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தும் பலனில்லை. இதனால் வேதனையில் இருந்த சுப்புராஜ் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் சேதம் அடைந்த பயிர்களை பார்த்து வருந்திய சுப்புராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் தனது நிலத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×