search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land cheating"

    • நிலத்தின் அசல் ஆவணங்களை சிலர் திருடி போலி ஆவணங்களை கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • சங்கரன், ராமமூர்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 3.98 ஏக்கர் நிலம் அதே பகுதியில் உள்ளது.

    நிலத்தின் அசல் ஆவணங்களை சிலர் திருடி போலி ஆவணங்களை கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்த அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சுமார் ரூ.120 கோடி மதிப்பிலான தனியார் நிறுவனத்தின் நிலத்தை நந்திவரம்-கூடுவாஞ்சேரியை சேர்ந்த சங்கரன், ராமமூர்த்தி ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்வது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து சங்கரன், ராமமூர்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அம்பத்தூரில் ரூ.2½ கோடி நில மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    முகப்பேரை சேர்ந்தவர் குணசுந்தரி. இவருக்கு சொந்தமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ரூ.2½ கோடி மதிப்பிலான நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை விற்று கொடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கு குணசுந்தரி பவர் கொடுத்துள்ளார். ஆனால் அந்த இடத்தை அவர் விற்று கொடுக்காததால் அதற்கான அதிகார பத்திரத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக குணசுந்தரி கூறி உள்ளார்.

    ஆனால் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் குமார் தனது மனைவி கோமதியின் பெயருக்கு மோசடியாக இடத்தை விற்பனை செய்து உள்ளார்.

    இதுபற்றி குணசுந்தரி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவன்- மனைவியான குமார், கோமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிவகாசியில் நிலம் விற்பதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    சிவகாசி விஜயகருக்கல் குளத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் தன்னிடம் 5 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், ஏக்கர் ரூ.3 லட்சம் என்றும் கூறியுள்ளார்.

    இதனை கேள்விப்பட்ட திருத்தங்கல் ராமராஜ் (42) நிலத்தை வாங்க ஆசைப்பட்டு ரூ.15 லட்சம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட ரவிச்சந் திரன், நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

    4 ஆண்டுகளாக அவர் தன்னை மோசடி செய்து விட்டதாக கூறி திருத்தங்கல் போலீசில் ராமராஜ் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பணம் மோசடி செய்ததாக ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை வாலிபரிடம் ரூ. 4 லட்சம் நிலமோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை:

    மதுரை நெல்பேட்டை கீழவெளி வீதியைச் சேர்ந்தவர் முகம்மது அப்பாஸ் (வயது 39). இவர் பேரையூர் அப்பாஸ் நகரைச் சேர்ந்த இப்ராகிம் ஷா என்பவரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து வீட்டுமனை வாங்கியிருந்தார்.

    இந்த நிலையில் இப்ராகிம்ஷாவின் மகன் ஷாகுல் ஹமீது (30), அதே நிலத்தை ராஜபாளையம் கந்தசாமி, விருதுநகர் நாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து வேறொருவருக்கு விற்றாராம்.இதற்கு முன்னாள் சார்பதிவாளர் சசிகலா, ரமேஷ்பாபு ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இது தொடர்பாக முகம்மது அப்பாஸ் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கண்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டியில் விவசாயியிடம் நிலம் மோசடி செய்த அண்ணன்-தம்பி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் எட்வர்டு இன்பராஜ் (வயது 60). விவசாயி. கதிர்நரசிங்கா புரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மாரியப்பன், வேல்முருகன் 2 பேரும் எட்வர்டு இன்பராஜிடம் தங்களுக்கு சொந்தமான 24 செண்ட் ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து எட்வர்டு இன்பராஜ் குறிப்பிட்ட தொகை கொடுத்து நிலத்தை வாங்கினார். இதை பதிவு செய்வதற்காக தாலுகா அலுவலகம் சென்ற போது அந்த நிலம் வேறு ஒருவர் பெயரில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மாரியப்பன் மற்றும் வேல்முருகனிடம் இது குறித்து கேட்டார்.

    அவர்கள் உங்கள் பணத்தை 3 மாதத்தில் திருப்பி கொடுத்து விடுகிறோம் என கூறியுள்ளனர்.

    கெடு முடிந்த பின்பும் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் எட்வர்டு இன்பராஜ் மீண்டும் அவர்களிடம் பணம் கேட்டு சென்றார். ஆத்திரமடைந்த அண்ணன் தம்பி 2 பேரும் எட்வர்டு இன்பராஜை தகாத வார்த்தையால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி.உத்தரவின்படி ஆண்டிப்பட்டி போலீசார் வேல்முருகன் மற்றும் மாரியப்பன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×