search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் கல்லூரி மாணவர் தற்கொலை
    X

    சிவகாசியில் கல்லூரி மாணவர் தற்கொலை

    சிவகாசியில் வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    சிவகாசி தெற்கு குப்பன்னாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் பொன் அஜீஸ் (வயது 22). ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்வில் பொன் அஜீஸ் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொன் அஜீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் எம்.புதுப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பொன் அஜீஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட் டது.

    Next Story
    ×