என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா"

    • தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
    • பான் மசாலா விளம்பரத்தில் ஷாருக்கான், "நாக்கிலே குங்குமப்பூ" என்று கூறுவார்.

    டெல்லியில் நடைபெற்ற தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.

    அப்போது ஷாருக்கானிடம், பிரபல பான் மசாலா விளம்பரத்தில் வரும், "நாக்கிலே குங்குமப்பூ" (Zubaan Kesari) என்ற டயலாக்கை கூறுமாறு வற்புறுத்தி கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.

    இதையடுத்து பேசிய ஷாருக்கான்,"இந்த தொழிலதிபர்களிடம் நீங்கள் ஒருமுறை பிசினஸ் செய்தால், அவர்கள் உங்களை ஒருபோதும் விட மாட்டார்கள், அதிலும் குட்கா காரர்கள் அதிக பணம் தருகிறார்கள். நான் அதைச் செய்ய பணம் வாங்குகிறேன். தயவுசெய்து இதை உன் அப்பாவிடம் சொல்லுங்கள். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். நான் இங்கே நின்றுகொண்டு நாக்கிலே குங்குமப்பூ என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது தவறு, அது தடைசெய்யப்பட்டுள்ளது. நீ என் ரசிகனா அல்லது விமலின் (பான் மசாலா நிறுவனம்) ரசிகனா?" என தனேக்கே உரிய பாணியில் கிண்டல் அடித்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இப்படி சங்கப்படுத்துவது தவறு என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு கொடுத்த பரிசு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
    • பூங்கொத்து செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.

    காதல் ஜோடிகள் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு கொடுத்த பரிசு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தன் காதலனுக்கு அவருக்கு பிடித்த குட்கா பாக்கெட்டுகளால் ஆன சிறப்பு பூங்கொத்தை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், என்னை சந்திக்க வந்த ஒரு வாடிக்கையாளரான பெண் ஒருவர் அவரது காதலனுக்கு குட்கா மிகவும் பிடிக்கும் என்பதால் அதை பூங்கொத்து போல செய்து தருமாறு கூறினார். எனவே நான் நீல நிற பாக்கெட்டுகளில் குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி பூங்கொத்து உருவாக்கி கொடுத்தேன் என கூறினார்.

    அவர் குட்கா பூங்கொத்து செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது. அதில், ஒரு குச்சியில் 2 குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி அவற்றை பூக்களை போல அடுக்கி வைத்தி நீல நிற குட்கா பூங்கொத்து தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்கள் காதலும் ஒரு புற்றுநோய் போல தான் என விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

    • 30 வயதுடைய அந்தப் பெண்ணும், அவரது 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
    • குழந்தைகள் முன்னிலையில் குட்கா சாப்பிடுவதை நிறுத்துமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவர் பணம் தராததால் தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் 30 வயதுடைய அந்தப் பெண்ணும், அவரது 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 5 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    கணவன் குட்கா பழக்கத்தை விட்டுவிடுமாறு கூறியதால் கோபம் கொண்ட அந்தப் பெண் இந்த கொடூரமான முடிவை எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    குழந்தைகள் முன்னிலையில் குட்கா சாப்பிடுவதை நிறுத்துமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளது.

    அந்தப் பெண் என்ன வகையான விஷத்தைப் பயன்படுத்தினார். அது அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறைந்தபட்சம் 100 சிகரெட் பிடித்த இளைஞர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் விட முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
    • புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

    இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் புகைப்பழக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆய்வு நடந்தப்பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    பள்ளிகள் இருக்கும் இடங்களில் 100 மீட்டர் தொலைவுக்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. மேலும் தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை உள்ளது.

    ஆனால் பல இடங்களில் பள்ளிகளின் அருகில் உள்ள கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குட்கா உள்ளிட்ட பொருட்களும் தடையின்றி கிடைக்கிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் 7 வயதிலேயே புகைப்பழக்கத்துக்கு அடிமையாவதாக ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளன.

    இந்தியாவில் 11.4 சதவீத சிறுவர்கள் தங்களின் 7 வயதிலேயே சிகரெட் பிடிக்க தொடங்குகிறார்கள். 17.2 சதவீதம் சிறுவர்கள் பீடி புகைக்கிறார்கள். 24 சதவீத சிறுவர்கள் 7 வயதிலேயே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்கிறார்கள்.

    இந்தியாவில் 13 முதல் 15 வயதுக்கு உள்பட்ட 3.7 கோடி சிறுவர்கள் புகையிலை பயன்படுத்துகிறார்கள். தினமும் புகைபிடிக்கும் பெரியவர்களில் 87 சதவீதம் பேர் தங்களின் 18 வயதில் முதல் முறையாக புகைப்பழக்கத்தை தொடங்கியதாக தெரிவித்து உள்ளனர். 95 சதவீதம் பேர் தங்களின் 21 வயதில் புகைப்பழக்கத்தை தொடங்கியுள்ளனர். குறைந்தபட்சம் 100 சிகரெட் பிடித்த இளைஞர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் விட முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

    சென்னையிலும் பள்ளிகளின் அருகில் பெரும்பாலான கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள 392 கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் 86 தொடக்கப்பள்ளிகளின் அருகில் 176 கடைகளிலும், 129 மேல்நிலைப்பள்ளிகளின் அருகில் 193 இடங்களிலும், 32 கல்லூரிகளின் அருகில் 67 கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.

    புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை, 20 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்களில் 1 லட்சம் பேரில் 3.5 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 1 லட்சம் பேரில் 9.7 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வயதுடைய பெண்களில், அதே காலகட்டத்தில் ஒரு லட்சத்திற்கு 0.8 ஆக இருந்த வாய் புற்றுநோய் பாதிப்பு 1.1 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் பள்ளிகளின் அருகில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பல்பொருள் அங்காடிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில இடங்களில் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் சிகரெட் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • எனக்கு பணம் முக்கியமல்ல; கட்சிதான் முக்கியம்.
    • திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கிடையாது.

    தமிழ்நாட்டில் குட்கா புழங்குவது பற்றி திமுக, அதிமுக மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்ட பாமக பொதுக்குழுவில் உரையாற்றிய அவர், "குட்கா உள்ளிட்டவை பற்றி பேசாமல் இருக்க பல கோடி ரூபாய் தர முன்வந்தனர்; எனக்கு பணம் முக்கியமல்ல; கட்சிதான் முக்கியம். திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கிடையாது. லஞ்சம், ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பகல் நேரத்தில் கூட பெண்கள் நிம்மதியாக சாலையில் நடந்து போக முடியவில்லை. தமிழ்நாட்டில் பாதுகாப்பே இல்லை.

    பாமகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். திமுக பாமகவுக்கு துரோகம் செய்தது. பாமகவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே நடைபயணம் மேற்கொள்ளவுள்ளேன்" என்று பேசியுள்ளார்.

    அன்புமணி ராமதாஸின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது. 

    • குட்கா, பான் மசாலா தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
    • உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமல்படுத்தியது.

    இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், குட்கா, பான் மசாலா மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    2026ம் ஆண்டு மே 23 வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.

    • வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக பாலக் கோடு போலீஸ் டி.எஸ்.பி மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கொலசனஅள்ளி நெடுஞ்சாலையில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான 156 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி கொத்தப்பள்ளியை சேர்ந்த சிராஜ் (25) என்பதும், உடன் வந்தவர் கர்நாடகா மாநிலம் சிக்ககொல்லர அட்டி கிராமத்தை சேர்ந்த திலக்குமார் (24) என்பதும் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் 2 பேரும் பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்க்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து குட்காவுடன் ரூ.5 லட்சம் மதிப்பிலான சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • தமிழகத்தில் 96 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

    தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் எங்கும் குட்கா, எங்கும் போதைப்பொருள் என்ற நிலை இருந்தது.

    உயர் பதவியில் இருந்த காவலர்கள் கூட சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் 96 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

    போதைப்பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலமாக உள்ளது.

    குட்கா விற்கும் கடைகளை மூடி வருகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.
    • இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    2011-2012-ம் நிதி அண்டு முதல், 2018- 2019-ம் நிதி ஆண்டு வரையிலான கால கட்டத்தை கணக்கில் எடுத்து விஜயபாஸ்கரின் வருமானத்தை நிர்ணயம் செய்த அதிகாரிகள் அவருக்கு ரூ.206.42 கோடி அளவுக்கு வருமான வரியை விதித்தனர். இந்த பணத்தை விஜயபாஸ்கர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான 17.46 ஏக்கர் நிலம் மற்றும் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்தனர்.

    இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது தொகுதி பணிகளை மேற்கொள்வதற்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தடையாக உள்ளது என்றார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரியான குமார் தீபக்ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், விஜயபாஸ்கர் பல்வேறு தரப்பில் இருந்தும் அதிக அளவில் பணம் வாங்கியது தொடர்பாக விரிவான பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

    விஜயபாஸ்கருக்கு எஸ்.ஆர்.எஸ். கனிமவள நிறுவனம் ரூ.85.45 கோடியை வழங்கி உள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் குட்கா வியாபாரிகளிடம் இருந்தும் விஜயபாஸ்கர் பணம் வாங்கியுள்ளார். அதற்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குட்கா வியாபாரிகளிடம் இருந்து ரூ.2.45 கோடி பணம் பெற்றதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கைப்பற்றினோம். இதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை நடவடிக்கை அவர் மீது பாய்ந்தது.

    இப்படி பல்வேறு வழிகளில் இருந்தும் விஜயபாஸ்கருக்கு சட்ட விரோத அடிப்படையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே சோதனை நடத்தி உரிய ஆவணங்களை கைப்பற்றினோம்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்ற போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்துரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தனர். அவர்களை தங்க வைத்தற்கான செலவு தொகையாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தையும் விஜயபாஸ்கர் ரிசார்ட்டுக்கு வழங்கி உள்ளார். இதற்கான ஆவணங்களும் கிடைத்து உள்ளன.

    இப்படி பல வழிகளில் அவர் பணம் வாங்கியதும், கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

    இதற்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    • தனிப்படை போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒதுக்கி வைத்திருப்பவ ர்களை கண்டறிய ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை யடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போதை பொருளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், ஈரோடு பகுதியைச் சார்ந்த தளராம் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்க்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பதை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முசிறியில் 781 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
    • கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சிபட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்தி விநாயகம், போலீசார் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சி பட்டியில் உள்ள சேகர் என்பவரது வீட்டின் அருகே கண்டெய்னர் லாரியிலிருந்து, டாட்டா ஏசி வாகனத்தில் மூட்டைகள் மாற்றப்படுவது கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லட்சக்கணக்கான மதிப்பு உள்ள 30க்கும் மேற்பட்ட குட்கா பான் மசாலா மூட்டைகள் கொண்ட போதைப் பொருட்கள் மாற்றப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து விசாரணை செய்ததில் புனேவிலிருந்து தஞ்சாவூருக்கு பைப் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரான விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த அழகர் மகன் வெள்ளைச்சாமி (வயது 23), கிளினர் அசுரப்பட்டி விராலிமலை அகர பட்டியை சேர்ந்த வேலு மகன் சீனிவாசன் ( வயது 25), ஆகிய இருவரும், நாமக்கல்லில் உள்ள லாரி உரிமையாளருக்கு தெரியாமல் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கடத்தி வந்த குட்கா பொருட்களை காமாட்சி பட்டி அருகே டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டுநர் சூரம்பட்டி செல்லிபாளையம் சோழன் மகன் திவாகர் ( வயது 23 )ஏற்ற சென்றுள்ளார். அங்கு மடக்கி பிடித்த முசிறி போலீசார் மூவரையும் கைது செய்து 781 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    சேலம் :

    சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து நடந்த உடன் காரில் வந்தவர்கள் இறங்கி ஓடி விட்டனர்.இரவு ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்று மூட்டைகளை பரிசோதனை செய்தபோது 550 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து காரின் பதிவு எண்ணை கொண்டு காரின் உரிமையாளர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது?,என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×