search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா"

    • லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே சூளகிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அதில் இரும்பு தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி தனியறை அமைத்து மறைத்து வைத்திருந்த 150 மூட்டைகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பெருந்துறை டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் ராஜகண்ணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ருத்ராஜ், வீரமணிகண்டன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வீட்டில் 800 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் பிரசாத் என்பதும், காய்கறி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் வீட்டில் சோதனை செய்ததில் ரூ.3.40 லட்சம் ரொக்க பணம், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தற்போது பிரசாத் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் தான் எங்கிருந்து குட்கா கொண்டு வரப்படுகிறது. அதை யாருக்கு விற்க கொண்டு செல்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    பல்வேறு கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த 21 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.99 ஆயிரத்து 567 மதிப்புள்ள 67.95 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குட்கா விற்பனை செய்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    • புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன
    • பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.

    அருமனை :

    அருமனை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மஞ்சாலுமூடு முக்கூட்டுக்கல் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே சிவகுமார் (வயது 49) என்பவர் நடத்தும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை செய்யப்படுவதாக தனிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் அந்த கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஏராளமான குட்கா பாக்ெகட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.

    • உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    கடைகளில் 3 கிலோவுக்குள் குட்கா விற்பனை செய்யப்பட்டால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குட்கா விற்ற 10 கடைகளுக்கு உணவு விற்பனை அனுமதி ரத்து செய்யப்பட்டது.
    • ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை நகரில் தடை செய்யப் பட்ட குட்கா, புகை யிலை பொருட்கள் விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவு றுத்தலின்படி உணவு பாது காப்பு அலுவலர் ஜெய ராம்பாண்டியன் தலைமை யில் அதிகாரிகள் மதுரை நகர் முழுவதும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.

    நகர் பகுதிகளில் 9 குழுக் களாகவும், புறநகர் பகுதி களில் 10 குழுக்களாகவும் பிரிந்து இந்த சோதனை நடந்தது. மொத்தம் 206 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 16 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகை யிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த கடைகளில் இருந்து 6.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட் டது. மேலும் 16 கடைக ளுக்கும் ரூ.1 லட்சத்து 10 அபராதம் விதிக்கப்பட்டது. 10 கடைகளுக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. அதற்கான நோட்டீசை உரிமையா ளர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரை நகர் பகுதிகளில் குட்கா, புகை யிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இதுபோன்ற சட்ட விரோதமாக விற்பனை செய்யும் கடை உரிமம் ரத்து செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும். இனி இது போன்ற ஆய்வுகள் மதுரை நகரில் அடிக்கடி மேற் கொள்ளப்படும் என தெரிவித்தனர்

    • கடைகளின் உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    • வணிகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா?

    என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு தஞ்சை அய்யன்கடை தெருவில் உள்ள ஒரு பட்டாணி கடை, வடக்கு வீதியில் உள்ள ஒரு மளிகை கடை, காமராஜர் மார்க்கெட்டில் உள்ள ஒரு மிட்டாய் கடை என 3 கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடி க்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.

    தொடர்ந்து போலீசார் அந்தக் கடைகளின் உரிமையா ளர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் மூன்று பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

    இருப்பினும் தொடர்ந்து அந்த மூன்று கடைகளிலும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்றது கண்டுபிடிக்க ப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசாருடன் அய்யன் கடை தெருவுக்கு சென்றனர்.

    அங்கு சம்பந்தப்பட்ட பட்டாணி கடைக்கு சென்று அதன் உரிமையாளரான மீனாட்சி என்பவரிடம் நோட்டீஸ் வழங்கி தொடர்ந்து குட்கா பொருள் விற்றதால் உங்கள் கடையை பூட்டி சீல் வைக்கிறோம் எனக் கூறினர்.

    இதையடுத்து பொருட்கள் அனைத்தும் உள்ளே வைக்கப்பட்டு கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    மேலும் வணிகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினர்.

    தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டிற்கு சென்று மணிகண்டன் என்பவரின் மிட்டாய் கடையையும், வடக்கு வீதியில் உள்ள பஞ்சாபிகேசன் என்பவரின் மளிகை கடையையும் குட்கா விற்றதால் பூட்டி சீல் வைத்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் கடைகளில் போதைப்பொ ருட்கள் விற்பனை நடைபெறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்றைய தினம் தஞ்சையில் தொடர்ந்து குட்கா விற்பனை செய்த மூன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 7 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ள்ளது. 200-க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து குட்கா விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் வணிகம் செய்ய தகுதியற்றது என முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்தடுத்து மூன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ஏராளமான குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ஏராளமான குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    விசாரணையில் சித்தாமூரில் மளிகை கடை நடத்தி வரும் வசந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மகன் மோகன் ஆகியோர் அங்குள்ள வீட்டில் புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சீனிவாசன், மோகன் ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    வண்டலூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் குட்கா பதுக்கி விற்ற கேரளாவை சேர்ந்த முகமது உசேனை ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெருமாட்டுநல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் (47) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    • உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும்.
    • 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது.

    ராயபுரம்:

    கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் புகையிலை விற்பனை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளிலும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வடசென்ைன பகுதியில் குட்கா, புகையிலை விற்பனை தடையை மீறி அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய வளா கத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வியாபாரி களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தர வின் படி வண்ணாரப் பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலை மையில் நடைபெற்றது.

    இதில் வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை போன்ற பகுதியை சேர்ந்த பெட்டிக்கடை, டீக்கடை, பழ வியாபாரிகள் என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது போலீசார் பேசும்போது, கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.தடையை மீறி விற்பனை செய்தால் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டு, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும். மேலும் கைது நடவடிக்கை எடுக்கப் படும்.

    பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது மக்களுக்கு போலீசாரின் உதவி செல்போன் எண்கள் ஆங்காங்கே வைக்கப்படும். ஏற்கனவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வேறு தொழில் செய்யவும் அல்லது வியா பாரம் செய்ய உதவி தேவைப்பட்டால் போலீசார் சார்பில் உதவி செய்து தரப்படும் என்று தெரி வித்தனர்.

    பின்னர் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் நிருபர்களிடம் கூறும்போது, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, பழக்கடை போன்ற கடைக ளில் கஞ்சா, மாவா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது இதுவரை 42 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதில் 51 பேர் கைதாகி உள்ளனர்.

    இதில் 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கைது நடவடிக்கை யை தொடர்ந்து குண்டர் சட்டம் பாயும் என்றார்.

    • பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையையும், காரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
    • தப்பி ஓடிய ஜெயக்குமா ரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

    பூதப்பாண்டி :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன் களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்வது டன் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை காட்டுப்பு தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஓரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தினர். அப் போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி னர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காரை சோதனை செய்தனர்.

    அப்போது காரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது தெரிய வந்தது. காரில் மூட்டை மூட்டையாக இருந்த குட்கா புகை யிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 300 கிலோ குட்கா புகையிலை சிக்கியது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையையும், காரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் காட்டுப்புதூர் புது காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 40) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபர் காற்றாடி விளையை சேர்ந்த ஜெயக்கு மார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். குட்கா புகையிலை எங்கிருந்து வாங்கப்படுகிறது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தப்பி ஓடிய ஜெயக்குமா ரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை மாநகர போலீசார் கடந்த 25-ந்தேதி முதல் 31-ந்தேதி 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு புகையிலைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க நடவடிக்வகை எடுத்தனர். இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 456.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 743.9 கிலோ மாவா, பணம் ரூ.28,720/-, 1 செல்போன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வாரணவாசி பகுதியில் வாரணவாசி பகுதியில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
    • 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    அரியலூர்,

    தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படிர் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து திருமானூர் ஒன்றியம் வாரணவாசி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பழனிச்சாமி, ராமசாமி, ரத்தினம் மற்றும் கீழப்பழுவூர் போலீசார் கலந்துகொண்டனர்.22 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் பள்ளி அருகே 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 5 கிலோ அளவில் விற்பனை செய்வது ஆய்வில் கண்டறியப்பட்டுர் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் 2 கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும், இது போன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவுறுத்தி உள்ளார்.

    ×