search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Randeep Surjewala"

    • உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி போட்டியிடுகிறார்.
    • நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் சுர்ஜிவாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, பா.ஜ.க. எம்.பி.யும், மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ரந்தீப் சுர்ஜிவாலா பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    பாஜக எம்பி ஹேமமாலினியைப் பற்றி அவர் கூறிய கருத்துகள் கண்ணியமற்றது, கொச்சையானது மற்றும் நாகரீகமற்றது என்ற தேர்தல் ஆணையம் முதன்மையான நடத்தை விதிகளை மீறியது என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா இன்று மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் தொடர்பாக பேரணி, பேட்டி அளிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

    • முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
    • பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது.

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வரை தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது தொடர்பாக பல்வேறு யூகமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பாளர்) ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

    பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது. பாஜக பல மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக 7 முதல் 10 நாட்கள் எடுத்துக் கொண்டபோது, பிரதமரிடம் இதேபோல் கேள்வி எழுப்பினார்களா? ஆனால் அதே நபர்கள், ஒரு குறிப்பிட்ட ஊடகங்கள், உண்மையான ஜனநாயக மரபுகளின்படி செயல்படும் மல்லிகார்ஜுன் கார்கேவின் செயல்முறைக்கு ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளன.

    கர்நாடக சகோதர சகோதரிகளால் நிராகரிக்கப்பட்ட பாஜகவின் விரக்தி எங்களுக்கு புரிகிறது. முதல்வர் தேர்வு விவகாரம் தொடர்பாக இங்கிருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம். யாராவது கருத்து தெரிவித்தால் ஒழுக்கமின்மையாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது.
    • பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அம்பேத்கரின் கொள்கைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பா.ஜனதா அவரது கொள்கைகளை அவமதித்துள்ளது. கர்நாடகத்தில் போலி இட ஒதுக்கீடு வழங்கி அம்பேத்கருக்கு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. இந்த போலி இட ஒதுக்கீடு மூலம் லிங்காயத், ஒக்கலிகர், ஆதிதிராவிடர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்.

    முஸ்லிம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அடுத்த விசாரணை நடைபெறும் வரை நிறுத்தி வைக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் முன்பு கூறிய அனைத்து கருத்துக்களும் தற்போது உண்மையாகி உள்ளது.

    பா.ஜனதா இரட்டை என்ஜின் அரசு, கா்நாடக மக்களுக்கு இரட்டை துரோகம் செய்துள்ளது. கர்நாடக அரசின் இட ஒதுக்கீடு முடிவுக்கு அரசியல் சாசன ரீதியாக உரிய அங்கீகாரம் கிடைக்காது. அம்பேத்கரின் ஜெயந்தியை கொண்டாடும் இந்த நேரத்தில் கர்நாடக மக்களுக்கு இந்த பா.ஜனதா அரசு பெரிய துரோகத்தை செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சமூகங்களின் மக்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.

    இட ஒதுக்கீடு உயர்வு நிலை பெற வேண்டுமெனில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த முயற்சியை பா.ஜனதா மேற்கொள்ளாதது ஏன்?. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார். பா.ஜனதா நாளுக்கு நாள் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

    • காவல்துறையினர் நடவடிக்கை மூர்க்கத்தனமான சுதந்திர மீறல் என்று குற்றச்சாட்டு
    • சட்டவிரோத நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறையிடம் காங்கிரஸ் புகார்

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பியுமான ராகுல்காந்தி கடந்த மூன்று நாட்களாக மத்திய அமலாக்கத் துறையினரின் விசாரணையை எதிர்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பிக்கள், மூத்த தலைவர்கள், தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது மூத்த தலைவர்கள் உட்பட சுமார் 240 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி சட்டம் ஒழுங்கு காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரி சாகர் ப்ரீத் ஹூடா, தெரிவித்தார்.

    இந்நிலையில் நேற்று அக்பர் சாலையில் காங்கிரசார் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை அதிகாரிகள் சிலர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்ததாக புகார் எழுந்துள்ளது. அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் தலைவர்களை விரட்டி அடித்த போலீசார், சிலரை வெளியே இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    காங்கிரஸ் தலைமையகத்தில் காவல்துறையின் நடவடிக்கை மூர்க்கத்தனமான சுதந்திர மீறல் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் அனைத்து சட்ட மற்றும் அரசியல் விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளது என்றும் தமது விட்டர் பதவியில் அவர் கூறியுள்ளார்.

    போலீசாரிடம் வாரண்ட் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து, எம்.பி.க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்களை வெளியே இழுத்து சாலையில் வீசினர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். போலீசார் முரட்டுத்தனம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், இது அப்பட்டமான கிரிமினல் அத்துமீறல் என்றும், டெல்லி காவல்துறையின் அராஜகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் புகுந்தது தொடர்பாக டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வ முறையில் புகார் அளித்தது.

    கிரிமினல் அத்துமீறலுக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறு செய்த காவலர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இளைஞர்கள் பணிக்காக ஏங்குவதாகவும், ஆனால் அரசுகள் காலியிடங்களை நிரப்பவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி :

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

    காங்கிரஸ் வெளியிட்டுள்ள அந்த காலியிட பட்டியலில் முக்கியமாக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் 2 லட்சம் காலியிடங்கள், 1.68 லட்சம் சுகாதார ஊழியர் பணியிடங்கள் மற்றும் 1.76 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதைப்போல ராணுவத்தில் 2.55 லட்சம் பணியிடங்களும், மத்திய ஆயுதப்படைகளில் 91,929 பணியிடங்களும், மாநில போலீஸ் துறையில் 5.31 லட்சம் பணியிடங்களும், பல்வேறு கோர்ட்டுகளில் 5 ஆயிரம் பணியிடங்களும் காலியாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

    இந்த பட்டியலை வெளியிட்ட கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இளைஞர்கள் பணிக்காக ஏங்குவதாகவும், ஆனால் அரசுகள் காலியிடங்களை நிரப்பவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அதேநேரம் மத்தியில் மோடி அரசு பதவியேற்ற இந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் மத மோதல்கள் அதிகரித்து இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

    அந்தவகையில் கடந்த 2016-2020-ம் ஆண்டு காலத்தில் 3,400 மதக்கலவரங்கள் நடந்திருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆனால் 8 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் நடந்துள்ள மதக்கலவரங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என்றும் கூறினார்.

    கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், தலித் பிரிவினர் மீதான வன்முறை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த அவர், கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரில் 548 பாதுகாப்பு படையினர், 324 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், இந்திய-சீன எல்லை தொடர்ந்து பதற்றத்தில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிக்கலாம்...பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசியல் செய்த முதலமைச்சர்- அண்ணாமலை குற்றச்சாட்டு
    ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதி மாலை முதல் லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருவதாக ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். #PMModi #HikeFuelPrice #Congress #RandeepSurjewala
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கச்சா எண்ணெய் விலை, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

    எல்லாவற்றுக்கும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    அதே சமயத்தில், மே 23-ந் தேதி மாலையில், லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #PMModi #HikeFuelPrice #Congress #RandeepSurjewala 
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்ததாக காங்கிரஸ் கட்சி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. #Congress #RandeepSurjewala #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி, துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.

    இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டது, நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.

    இந்த தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.



    அப்போது அவர் கூறியதாவது:-

    காஷ்மீரில் புலவாமா தாக்குதல் நடைபெற்றபோது நேரம் பிற்பகல் 3.10 மணி. இதையொட்டி காங்கிரஸ் கட்சி 5.15 மணிக்கு தனது கருத்தை தெரிவித்தது. இதுபற்றி பிரதமருக்கும் தெரியும்.

    தன்னை தேசியவாதி என்று கூறிக்கொள்கிற பிரதமர், டிஸ்கவரி சேனலில் சுய விளம்பரம் செய்துகொள்வதற்காக ராம்நகர் கார்பெட் தேசிய பூங்காவில் ஆவண படப்பிடிப்பில் தொடர்ந்து இருந்தார்.

    படப்பிடிப்புக்கு வந்த கேமரா குழுவினருடன் அவர் உல்லாசமாக படகு சவாரியை தொடர்ந்து இருக்கிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சியினர் தனக்கு ஆதரவாக கோஷங்கள் போடுகின்றனரா என்பதை உறுதி செய்திருக்கிறார்.

    ஒவ்வொரு இந்திய குடும்பமும் உணவு பெற்றிராதபோது, மாலை 7 மணிக்கு பிரதமர் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் டீயும், சமோசாவும் சாப்பிட்டுள்ளார்.

    ஒரு பக்கம், தாக்குதலில் பலியான வீரர்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் பிரதமர் தனது கொள்கை பிரசார விளம்பர படப்பிடிப்பில் இருந்தார். இத்தகைய நடத்தையை நாட்டின் பிரதமரிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா?

    படப்பிடிப்பில் இருந்ததற்கு பதிலாக, உடனடியாக பிரதமர் ராணுவ துறைக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தை கூட்டி, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RandeepSurjewala #PulwamaAttack 
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதிற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வரவேற்பு அளித்துள்ளார். #SupremeCourt #Congress #SabarimalaVerdict #RandeepSurjewala
    புதுடெல்லி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10-50 வயது வரையுள்ள பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்று உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், “சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முற்போக்கான மற்றும் பரவலாக வரவேற்பை பெறக்கூடியது ஆகும். இதை காங்கிரஸ் முழு மனதுடன் வரவேற்கிறது. பாலினத்தின் அடிப்படையிலோ அல்லது வேறுவிதமாகவோ பெண்களுக்கு பாகுபாடு காட்டக் கூடாது என்பது தீர்ப்பில் மிகத் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.



    “சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெண்களின் உரிமைகள் மீதான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெண்களை மதச்சம்பிரதாயத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஒரு சமுதாயம் பரிணாம வளர்ச்சி காணும்போது அதற்கேற்ப மத நம்பிக்கைகளும், சட்டங்களும் அதே போன்ற வளர்ச்சியை காண வேண்டும்” என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.  #SupremeCourt #Congress #SabarimalaVerdict #RandeepSurjewala
    மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. #RandeepSurjewala #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் கட்சியின் மாநில தலைவர்கள், மாநில பொறுப்பு வகிக்கும் பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், மத்தியில் உள்ள மோடி ஆட்சியில் ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு மற்றும் பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது என்றும், இதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மாநில தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

    ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து உள்ளது. இதுபற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். இதில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவது இல்லை.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு உள்ளது. அங்கு ஏற்பட்ட மழை, வெள்ள சேதத்தை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அந்த மாநிலத்துக்கு கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும்.

    இதுபோன்ற பிரச்சினைகளை பிரதமர் மோடி அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது. நிதி உதவி வழங்குவதில் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கும், பாரதீய ஜனதா அல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கும் இடையே அவர் பாகுபாடு காட்டுவதை மோடி நிறுத்திக் கொள்ளவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரள, கர்நாடக மக்களுக்கு உதவி செய்யவேண்டும்.

    கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றன. காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.  #RandeepSurjewala #Congress 
    மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது. #Modi #RandeepSujewala
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று உரையாற்றினார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடியின் சுதந்திர தின உரை வெற்று முழக்கம் என்பதை நிரூபிப்பதாக உள்ளது. அவர் தனது ஆட்சியின் ஊழல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எதையும் கூறவில்லை. அதேபோல் வியாபம் மற்றும் பொது வினியோகத் திட்டத்தில் நடந்த ஊழல் பற்றியும் சொல்லவில்லை.



    டோக்லாமில் சீனப் படைகள் ஊடுருவல் முயற்சி குறித்து எதையும் குறிப்பிடவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி ஒரு வார்த்தை கூட அவருடைய உரையில் காணப்படவில்லை. நாட்டில் நிலவிவரும் வெறுப்பு அரசியல் பற்றியும் அவர் பேசவில்லை. ஒட்டுமொத்தத்தில் சாதாரண மக்களுக்கு பயன் அளிக்கும் விதமாக அவர் எதையும் கூறவில்லை. அவருடைய உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

    நாட்டு மக்கள் நல்ல நாட்களுக்காக காத்திருக்கிறார்கள். மோடி, பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டால் அந்த நல்ல நாட்கள் தானாக வந்துவிடும்.

    2013-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சத்தீஷ்காரில் டெல்லி செங்கோட்டை போல் அமைத்த மேடையில் தன்னுடன் விவாதிக்க தயாரா என்று மோடி சவால் விடுத்தார்.

    இன்றோ, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளின் துயரம், அரசின் ஊழல் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என்று ராகுல்காந்தி சவால் விடுத்தும் அதுபற்றி மோடி பேச மறுக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், “பிரதமரின் சுதந்திர தின உரை தேர்தல் கால அரசியல் பேச்சு போலவே உள்ளது. நாட்டு மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்க அவர் தவறிவிட்டார். டெல்லி செங்கோட்டையை சொந்த நலனுக்காக அரசியல் மேடையாக அவர் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது” என்றார்.  #Modi #RandeepSujewala  #Tamilnews 
    ×