search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன்தீப் சுர்ஜேவாலா"

    • முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
    • பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது.

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வரை தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது தொடர்பாக பல்வேறு யூகமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பாளர்) ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

    பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது. பாஜக பல மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக 7 முதல் 10 நாட்கள் எடுத்துக் கொண்டபோது, பிரதமரிடம் இதேபோல் கேள்வி எழுப்பினார்களா? ஆனால் அதே நபர்கள், ஒரு குறிப்பிட்ட ஊடகங்கள், உண்மையான ஜனநாயக மரபுகளின்படி செயல்படும் மல்லிகார்ஜுன் கார்கேவின் செயல்முறைக்கு ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளன.

    கர்நாடக சகோதர சகோதரிகளால் நிராகரிக்கப்பட்ட பாஜகவின் விரக்தி எங்களுக்கு புரிகிறது. முதல்வர் தேர்வு விவகாரம் தொடர்பாக இங்கிருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம். யாராவது கருத்து தெரிவித்தால் ஒழுக்கமின்மையாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது.
    • பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அம்பேத்கரின் கொள்கைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பா.ஜனதா அவரது கொள்கைகளை அவமதித்துள்ளது. கர்நாடகத்தில் போலி இட ஒதுக்கீடு வழங்கி அம்பேத்கருக்கு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. இந்த போலி இட ஒதுக்கீடு மூலம் லிங்காயத், ஒக்கலிகர், ஆதிதிராவிடர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்.

    முஸ்லிம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அடுத்த விசாரணை நடைபெறும் வரை நிறுத்தி வைக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் முன்பு கூறிய அனைத்து கருத்துக்களும் தற்போது உண்மையாகி உள்ளது.

    பா.ஜனதா இரட்டை என்ஜின் அரசு, கா்நாடக மக்களுக்கு இரட்டை துரோகம் செய்துள்ளது. கர்நாடக அரசின் இட ஒதுக்கீடு முடிவுக்கு அரசியல் சாசன ரீதியாக உரிய அங்கீகாரம் கிடைக்காது. அம்பேத்கரின் ஜெயந்தியை கொண்டாடும் இந்த நேரத்தில் கர்நாடக மக்களுக்கு இந்த பா.ஜனதா அரசு பெரிய துரோகத்தை செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சமூகங்களின் மக்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.

    இட ஒதுக்கீடு உயர்வு நிலை பெற வேண்டுமெனில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த முயற்சியை பா.ஜனதா மேற்கொள்ளாதது ஏன்?. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார். பா.ஜனதா நாளுக்கு நாள் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

    ×