search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress headquarters"

    • காவல்துறையினர் நடவடிக்கை மூர்க்கத்தனமான சுதந்திர மீறல் என்று குற்றச்சாட்டு
    • சட்டவிரோத நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறையிடம் காங்கிரஸ் புகார்

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பியுமான ராகுல்காந்தி கடந்த மூன்று நாட்களாக மத்திய அமலாக்கத் துறையினரின் விசாரணையை எதிர்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பிக்கள், மூத்த தலைவர்கள், தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது மூத்த தலைவர்கள் உட்பட சுமார் 240 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி சட்டம் ஒழுங்கு காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரி சாகர் ப்ரீத் ஹூடா, தெரிவித்தார்.

    இந்நிலையில் நேற்று அக்பர் சாலையில் காங்கிரசார் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை அதிகாரிகள் சிலர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்ததாக புகார் எழுந்துள்ளது. அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் தலைவர்களை விரட்டி அடித்த போலீசார், சிலரை வெளியே இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    காங்கிரஸ் தலைமையகத்தில் காவல்துறையின் நடவடிக்கை மூர்க்கத்தனமான சுதந்திர மீறல் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் அனைத்து சட்ட மற்றும் அரசியல் விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளது என்றும் தமது விட்டர் பதவியில் அவர் கூறியுள்ளார்.

    போலீசாரிடம் வாரண்ட் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து, எம்.பி.க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்களை வெளியே இழுத்து சாலையில் வீசினர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். போலீசார் முரட்டுத்தனம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், இது அப்பட்டமான கிரிமினல் அத்துமீறல் என்றும், டெல்லி காவல்துறையின் அராஜகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் புகுந்தது தொடர்பாக டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வ முறையில் புகார் அளித்தது.

    கிரிமினல் அத்துமீறலுக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறு செய்த காவலர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் முறையாக இன்று பங்கேற்றார். #Congress #PriyankaGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.
     
    வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் திரட்டினார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார்.



    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பிரியங்காவுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்தது.

    இதற்கிடையே, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநிலம் (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் முறையாக இன்று பங்கேற்றார். #Congress #PriyankaGandhi 
    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநிலம் (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #Congress #PriyankaGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.
     
    வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் திரட்டினார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார்.

    முதல்முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல் காந்தி நியமித்தார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என தெரிவித்தார்.



    இதேபோல், உத்தரப்பிரதேசம் (மேற்கு) மாநில பொதுச்செயலாளராக ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலத்தின் பொதுச்செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் குலாம்நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

    பிரியங்கா காந்திக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநில (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #Congress #PriyankaGandhi
    ×