என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PM Narendra Modi"
- 2014 அக்டோபர் 2 அன்று 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டம் தொடங்கப்பட்டது
- 'ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்' என அழைப்பு விடுத்தார்
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 2014-ல் அக்டோபர் 2 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 'ஸ்வச் பாரத் மிஷன்' (SBM) எனும் 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை முழுவதிலும் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளை காந்தி ஜெயந்தியையொட்டி 9-வது ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்க, "ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்" (ஏக் தரீக், ஏக் கண்டா, ஏக் சாத்) என நாட்டு மக்கள் அனைவருக்கும் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் இதில் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து பிரதமர், தூய்மை பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
தூய்மையே சேவை இயக்கத்தில் நாடு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. இன்று நான் அங்கித்துடன் தூய்மை பணியில் ஈடுபட்டேன். தூய்மையை தாண்டி உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்த கருத்துக்களை பரிமாறி கொண்டோம்.
இவ்வாறு அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த அங்கித் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். இவர் வெளிநாட்டு உபகரணங்களின் உதவி இல்லாமல் இந்திய வழிமுறைகளிலேயே உடற்கட்டையும், உடல் நலத்தையும் பெற முடியும் என வலியுறுத்தி வருபவர். 75 நாட்கள் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியின் மூலம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் வளர்த்து கொள்ள முடியும் என்பது இவரது சித்தாந்தம்.
- பெண்கள் சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்
- மலைவாழ் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஜனாதிபதியை அழைக்கவில்லை
கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, "சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; டெங்கு, மலேரியா போல ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய்" என கருத்து தெரிவித்தார். இவரது கருத்திற்கு ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக உதயநிதி மீது உத்தர பிரதேசத்திலும், மகராஷ்டிரத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28 அன்று திறந்து வைத்தார். நேற்று அக்கட்டிடத்தில் அதிகாரபூர்வமாக அலுவல்களை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உறுப்பினர்கள் சென்றனர். முதல் நாள் கூட்டத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு மக்களவையிலும் மாநில சட்டசபைக்களிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த முதல் நாள் நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராக பெண்கள் சார்பில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இதை விமர்சித்து உதயநிதி பேசினார்.
அதில் அவர் கூறியதாவது:
புதிய பாராளுமன்றக் கட்டிட திறப்பு விழாவிற்கு இந்தியாவின் ஜனாதிபதியான திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை. அவர் மலைவாழ் மக்கள் சமுதாயத்தை சேர்ந்தவர். அத்துடன் கணவனை இழந்தவர். அதனால் அவரை அழைக்கவில்லை. நேற்றைய பாராளுமன்ற முதல் கூட்டத்திற்கு இந்தி நடிகையையெல்லாம் அழைத்திருக்கிறார்கள். இதுதான் சனாதனம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
புதிய கட்டிடத்தை இந்திய ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.
- உதயநிதியின் கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது
- எந்தவிதமான சட்ட நடவடிக்கைக்கும் தயார் என்றார் உதயநிதி
கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எனும் அமைப்பு, "சனாதன ஒழிப்பு கருத்தரங்கம்" எனும் பெயரில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதில் உரையாற்றும் போது, இந்து மத கோட்பாடுகளில் ஒன்றான சனாதனம் குறித்து பேசுகையில், "சமூக நீதிக்கும் சமநீதிக்கும் எதிரானது சனாதனம். சனாதன தர்மம் என்பது வெறுமனே எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; அது டெங்கு, மலேரியா போன்று ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு தி.மு.க.வில் உள்ள தலைவர்களும் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், மாநில எதிர்கட்சியான அ.தி.மு.க.வின் தலைவர்களும், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வின் தமிழக தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களும், நாடு முழுவதும் உள்ள இந்து மத ஆன்மிக அமைப்புகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தான் தெரிவித்த கருத்திலிருந்து தான் பின் வாங்க போவதில்லை என்றும், எந்தவிதமான சட்ட ரீதியான நடவடிக்கையையும் சந்திக்க தயார் என்றும் கூறி வரும் உதயநிதி, தனது கருத்திற்கு ஆதாரமாக புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படாததை சுட்டிக்காட்டி, "சனாதனத்தில் சாதி ரீதியான பாகுபாடு நிலவுகிறது" என கூறியிருந்தார்.
இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து இருக்கிறார். அப்போது, "பா.ஜ.க.வின் எதிர்கட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தை நன்றாக படித்து பார்க்க வேண்டும். உதயநிதியின் கருத்திற்கு தக்க வகையில் பதிலடி தரப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை உருவானதில் இருந்து தற்போது தான் பிரதமர் மோடி, முதல் முறையாக இது குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மத நம்பிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உத்தர பிரதேச ராம்பூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அழைப்பிதழில் "இந்திய ஜனாதிபதி" என்பது "பாரத்தின் ஜனாதிபதி" என இருக்கிறது
- அடுத்த 1000 வருடங்கள் நாடு பயணிக்கும் திசையை "அம்ருத் கால்" முடிவு செய்யும்
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.
"அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகஸ்ட் 31-ம் தேதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இக்கூட்டத்தொடரில் நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டி காட்டியுள்ளார். இவரது கருத்து இக்தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது.
"இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், அதில் 'பாரத்' என்றும் 'இந்தியா' என்றும் 2 பேரையும் வைத்திருந்தது தவறு. 'பாரத்' என்பது நமது நாட்டின் தொன்மையான கலாசாரத்தை குறிப்பதாக உள்ளது. ஆனால் 'இந்தியா' என்பது நம்மை அவமானப்படுத்த பிரிட்டிஷ்காரர்களால் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை. அதை மீண்டும் 'பாரத்' என மாற்ற வேண்டும்" என பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவும் கூறியுள்ளார்.
"மக்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நாம் 'இந்தியா' என நம் நாட்டை அழைக்க கூடாது. அதற்கு பதிலாக 'பாரத்' என அழைக்க தொடங்க வேண்டும்," என ராஷ்ட்ரீய சேவா சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதே விவகாரத்தை பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் நரேஷ் பன்ஸால், மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"வெள்ளையர்களின் ஆதிக்க ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட அடிமை மனப்பான்மை, சுதந்திரம் பெற்றும் நமக்கு நீங்கவில்லை. அதனை நீக்கும் முயற்சியாக பல முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த 'அம்ருத் கால்' காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான பயணிக்கும் திசையை நாட்டுக்கு காட்டுவதாக இருக்கும்" என சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதன் ஒரு பகுதியாகவே நாட்டின் பெயரை மாற்றும் திட்டம் கொண்டு வரப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
- இந்திய வேகப்பந்து வீச்சாளரின் தந்தை பிப்ரவரி 22 அன்று நாக்பூரில் காலமானார்.
- பிரதமர் மோடி கடிதம் மூலம் கடந்த மாதம் 27-ந் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார்.
உமேஷ் யாதவின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர் பிப்ரவரி 22 அன்று தனது 74 வயதில் காலமானார்.
இதனையடுத்து உமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் கடந்த மாதம் 27-ந் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார். அதில் தனது மகனை வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக மாற்றியதில் திலக் யாதவின் பங்கைப் பாராட்டினார். உமேஷின் தந்தையின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தந்தையில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடிக்குக்கு உமேஷ் யாதவ் நன்றி தெரிவித்தார். அதில், எனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நன்றி. இந்த கடிதம் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆறுதலாக உள்ளது என கூறினார். அந்த பதிவில் பிரதமரின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.
Thank you, Honourable Prime Minister @narendramodi ji, for your condolence message on the sad demise of my father?. This gesture means a lot to me and my family. pic.twitter.com/u68cE4e6Jn
— Umesh Yaadav (@y_umesh) March 3, 2023
உமேஷ் யாதவ் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார். இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் உமேஷ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உமேஷ் யாதவ் இதுவரை இந்தியாவுக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு டெல்லியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமானார். உமேஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
- நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
ஆந்திரப்பிரதேச மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்லும்போது நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா, பிரதமரிடம் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

செல்ஃபி புகைப்படம்
அப்போது ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடனிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். ரோஜா அவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ரோஜாவின் இந்த செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு கடந்த 9-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரமதர் மோடி பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்றுடன் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும் நிறைவடைந்துள்ளது. பிரசாரம் முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று பிரதமர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கச்சா எண்ணெய் விலை, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
எல்லாவற்றுக்கும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயத்தில், மே 23-ந் தேதி மாலையில், லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMModi #HikeFuelPrice #Congress #RandeepSurjewala
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் நடிகர் விவேக் ஒபராய் கதாநாயகனாக நடித்து உள்ளார். டைரக்டர் ஒமுங்குமார் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தை கடந்த 5-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் படத்தை வெளியிட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
பாரதிய ஜனதாவுக்கு ஆதாயம் தரும் வகையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் படத்தை வெளியிடுவது தேர்தல் விதி முறைகளை மீறும் செயல் என்று காங்கிரஸ் கூறியது.
இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் கமிஷன்தான் இதுபற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
இதையடுத்து தேர்தல் கமிஷன் ஆய்வு செய்தது. படம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் இருக்கலாம் என்று கருதுவதால் படத்தை வெளியிட தற்காலிகமாக தடை விதிப்பதாக தேர்தல் கமி