search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat"

    • பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
    • வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ளது எஸ்.ஏரிப்பாளையம் கிராமம். இந்த கிராமம் சிறுவத்தூர் ஊராட்சியிலும், சேமகோட்டை ஊராட்சியிலும் உள்ளது. அதே போல இந்த கிராமம் நெய்வேலிசட்டமன்ற தொகுதியிலும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் ஏரிப்பாளையம் கிராமம் தனித்துவிடப்பட்டுள்ளது என கூறி ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கிராம மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

    இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் சிவமணி தலைமையில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இன்று காலை கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்து பண்ருட்டி-மடப்பட்டு சாலை சேலம் மெயின் ரோட்டில் எஸ்.ஏரிப்பாளையம் கேட் அருகில் சாலையின் இருபுறமும் பந்தல் அமைத்து அதில் அமர்ந்து சிறுவர், சிறுமியர் முதல்பெரியவர் வரை 1000-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 30-ந் தேதி ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினமாக கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உமா, சரவணன், அலெக்ஸ் பிரபாகரன், குமரேசன், பூச்சான், ஓமலூர் குமார், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பூபாலன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் 100 நாவல் மரக்கன்றுகளை நட்டனர்.

    ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடவு செய்யப்படுகிறது. வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் வேண்டுகோளின் பேரில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தலைமையில் ஊராட்சிக்கு சொந்தமான மரத்தோட்டத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அருகி வரும் இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வளர்க்க உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

    • நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
    • இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே நாஞ்சி க்கோட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சி.கி.வ.சத்தியராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழைக் காலங்களில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

    நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

    இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    அதற்கு பழனியப்பன் நகரில் இடம் ஒதுக்கி உள்ளோம். நமது ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஒத்துழை ப்புடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்று, தீர்மானங்களை படித்தார்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வண்டார்குழலி நிம்மி, சகாயராணி, கல்பனா, வாசுதேவன், தாழம்பட்டி மதியழகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, விஜயரேவதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
    • கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நாளை (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொது மக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • சூரக்குடி ஊராட்சியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து ைவத்தார்.
    • கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    0சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை, தி.சூரக்குடி ஊராட்சிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், கலையரங்கம், நியாய விலை கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டி டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூவான்டிபட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை யரங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-22ன் கீழ் ஆவுடைபொய்கை கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம்,

    சூரக்குடி கிரா மத்தில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள நியாய விலை கடை, நெற்புகப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலை கடை, சூரக்குடி கிராமத்தில் ரூ.06.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடம் என மொத்தம் ரூ.53.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட் டுள்ள கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவ ராமன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) முத்து மாரியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன். சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், கானாடு காத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, காரைக் குடி வட்டாட்சியர் தங்க மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஊர்காவலன், சாக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாதனேந்தல் ஊராட்சிக்கு பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
    • சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊரா ட்சி ஒன்றியம் தாத னேந்தல் ஊராட்சிக்கு ட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தில் பி.வி.எம். மனநல காப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேசன், புல னாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் மற்றும் பி.வி.எம் அறக்கட் டளை நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர்.அப்துல் ரசாக் பி.வி.எம். மருத்துவ சேவை அணியின் ஆய்வு பரிந்துரையை ஏற்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் கோகிலா ராஜேந்தி ரனுக்கு ஊராட்சி மகாராணி விருது, தாதனேந்தல் சிறந்த ஊராட்சி விருது, சேவை திலகம் விருது ஆகிய மூன்று விருதுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் பி.வி.எம். மருத்துவ சேவை அணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

    இதே போல் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திற னாளிகளின் நல அலுவலர் ஆர்.பாலசுந்த ரத்தின் சேவையை பாராட்டி நம்பிக்கை சிகரம் விருதும், சென்னை மாற்றுத்திறனாளி நல அலுவலர் முனைவர் கதிர்வேலுவின் மக்கள் சேவை பணிக்காக நம்பிக்கை இமய விருதும் வழங்கப்பட்டது. மேலும் பட்டயம், கேடயம், சிறப்பு மலர் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப் பட்டனர்.

    இதில் துறை அலுவ லர்கள், மாவட்ட தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பி.வி.எம். அறக்கட்டளை திறப்பு விழாவை சிறப்பாக நடத்திய நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக்கை பொது மக்கள் பாராட்டினர். கொடையாளர்கள், அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல் துறையினர், தொழிலதி பர்கள், மரு த்துவர்கள், வழக்க றிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அவர்களது சேவை பணியை பாராட்டி விருது, பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    • குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.
    • தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள திருமானூர் நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் ஆணையர் மகேஷ்வரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருமானூர் நீரேற்று நிலையத்தில் முதலில் உறிஞ்சும் ஆழ்குழாய் கிணறு போடப்பட்டது.

    இது 18 எம். எல்.டி. அளவிற்கு அமைக்க ப்பட்டு தஞ்சைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதை தவிர மற்றொரு ஆழ்குழாய் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டு உள்ளன.

    இதுவும் 18 எம்.எல்.டி. அளவிற்கு அமைக்கப்பட்டு தயாரான நிலையில் உள்ளது.

    இந்த பணிகள் இன்னும் 2 மாதத்திற்குள் முடிந்து விடும்.

    இது இரண்டும் சேர்த்தால் 36 எம். எல்.டி அளவுக்கு தஞ்சை மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதுதவிர முன்பு இருக்கக்கூடிய 23 எம். எல்.டி.யும் சேர்த்தால் சுமார் 60 எம்.எல்.டி. அளவிற்கு தண்ணீர் தஞ்சை மாநகருக்கு விநியோகம் செய்ய இருக்கிறது.

    நம்முடைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமார் 30 எம்.எல்.டி. 'அளவிற்கு தஞ்சைக்கு தண்ணீர் வந்தாலே போதுமானது.

    தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் இன்னும் 13 ஊராட்சிகளை இணைத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    இந்த பணிகள் மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தமிழ்நாடு முதல்- அமைச்சர் மற்றும் இத்துறை அமைச்சரின் ஒப்புதலோடு செய்து வருகிறோம்.

    இதன் திட்ட மதிப்பீடு ரூ.73 கோடி ஆகும். குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.

    இன்னும் 10 மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

    இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற்றவுடன் 24 மணி நேரமும் எவ்வித தடையும் இன்றி பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாநகராட்சி செய ற்பொறியாளர் பொறுப்பு ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.
    • மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சி கடந்த 2021-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது. தற்போது 87.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 70 வார்டுகளுடன் 5 மண்டலங்களாக உள்ளது. சுமார் 10 லட்சம் பொது மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியுடன் மேலும் 15 பஞ்சாயத்துக்களை இணைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்களம், பொழிச்சலூர், திரிசூலம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கை வாசல், மதுரபாக்கம், மூவரசம்பட்டு, சித்தாலப்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்கள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய உள்ளன. இதனால் தாம்பரம் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 115 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும். இந்த பஞ்சாயத்துக்கள் மண்டல அதிகாரிகள் மேற்பார்வையில் இருக்கும். இந்த புதிய பஞ்சாயத்துக்கள் இணைப்பதன் மூலம் தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும். பஞ்சாயத்துக்கள் இணைப்புக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 2027-ம் ஆண்டு வரை மண்டல அலுவலர்கள் ஊராட்சிகளை நிர்வகிப்பார்கள். ஒவ்வொரு மழையின்போது முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    இந்த இணைப்புகள் மூலம் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேலும் எடுக்க முடியும் என்றனர்.

    • நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு எப்போது அகற்றப்படும்.
    • தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

    மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட அய்யன்குளத்துக்கு மத்திய அரசால் 3-வது இடத்திற்கான விருது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விருதை அடுத்த மாதம் 27 மற்றும் 28 தேதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருது வழங்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதற்காக மத்திய அரசு, தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் , நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் பேசிய விவரமும் , அதற்கு பதில் அளித்து மேயர் , ஆணையர் பேசிய விவரமும் வருமாறு:-

    மண்டல குழு தலைவர் மேத்தா: அய்யன் குளம், அழகியகுலத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி.

    ரம்யா சரவணன்: அய்யன் குளத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    காந்திமதி : கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது ஆட்சியில் நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட் இடமாற்றம் எப்போது ? தஞ்சாவூர் மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் எப்போது இணைக்கப்படும்.

    ஜெய் சதீஷ்: தஞ்சை செண்பகவல்லி நகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

    அந்தப் பணியை துரித படுத்த வேண்டும். வானக்கார தெருவில் பைப் லைன் அமைக்கும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும். சிவகங்கை பூங்கா குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேசவன் : எனது வார்டில் வாய்க்கால் தூர்வார வேண்டும். சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ள வராத சமயத்தில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து குப்பைகளை உடனுக்குடன் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்: நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை ஏவி நமது விஞ்ஞானிகள் மாபெரும் உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையில் தமிழ்நாட்டை சேர்ந்த வீர முத்துவேல் முக்கிய பங்காற்றினார். எனவே தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் ஏதாவது ஒரு பள்ளி ஆய்வகத்துக்கு வீர முத்துவேல் பெயர் சூட்ட வேண்டும். அருளானந்தநகர் 4, 5-வது தெருவில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை தொடங்கி உடனே முடிக்க வேண்டும். தினமும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு செல்வதால் அவர்களின் வசதிக்காக இலவச கழிவறையை அமைக்க வேண்டும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய அனுமதி பெற்று நடைபெற்றதா ? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

    நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது ?

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி:

    தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் சுகாதார அட்டை வழங்க வேண்டும். ஆணையர் சரவணகுமார் :

    தஞ்சை மாநகராட்சியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இருந்ததை விட தற்போது சாலைகள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இதனை வெளியூர் மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    மேயர் சண். ராமநாதன்:

    தஞ்சை மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தி ற்குள் இணைக்கப்படும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி உடன் அனுமதி பெற்று தான் நடந்தது .

    தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராசா மிராசுதார் மருத்துவமனை வரை உள்ள இடங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்படும். தற்காலிக மீன் சந்தை அருகே உள்ள இடத்திற்கு மாற்றும் பணி விரைவில் தொடங்கும். தஞ்சை மாநகராட்சி கல்லு குளம் சுகாதார நிலையம் தர வரிசையில் மாநில அளவில் 2-வது இரண்டாம் இடமும் , கரந்தை சுகாதார நிலையம் 5-வது இடமும் பிடித்துள்ளதற்கு பாராட்டு க்கள். செயற்பொறியாளர் நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ளார். அவருக்கு நாளை பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருக்கு வாழ்த்துக்கள். கவுன்சிலர்கள் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
    • ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணி நடந்தது.

    ஊட்டி,

    ஊட்டி மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் பங்கேற்று நீர்தேக்க தொட்டி கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    மேலும் அதேபகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையையும் திறந்து வைத்தார்.

    இதேபோல் மசினகுடி அருகே இந்திரா காலனி பகுதியில் சமுதாய கூடத்தை சுற்றி ரூ.10 லட்சம் மதிப்பிலான சுவர் கட்டும் பணி, மாயார் பகுதியில் ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.

    இந்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள நூலகங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஓ.புதூர் கிராமத்தில் நடந்தது. இது சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராம ரிக்கப்படும் பதிவேடுகள், புத்தகங்கள் இருப்பு பதிவேடு ஆகியவை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அறிவினை மேம்ப டுத்திட வாரம் ஒரு முறை நூலகங்களுக்கு அழைத்து வருவதுடன் தினசரி காலையில் ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் அடிப்ப டையில் சிறு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இதில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×