search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருதுகள்"

    • மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.
    • முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது.

    இந்த கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது.

    அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன. தற்போது முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும், எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்து துறை சிறந்த முறையில் பணியாற்றியது. இதன் பயனாக அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2022-23-ம் ஆண்டுக்கான தேசிய பொது பஸ் போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது.

    மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.

    முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் 4-ல் ஒரு பங்கு ஆகும்.

    பஸ்களில் எரிபொருள் திறன், சாலை பாதுகாப்பு, டயர் செயற்திறன் (கிராமப்புறம், நகர்ப்புறம்), வாகன பயன்பாடு (கிராமப்புறம், நகர்ப்புறம்) ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை 6 விருதுகளுக்கும், கும்பகோணம் 5 விருதுகளுக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் 3 விருதுகளுக்கும், சேலம் 2 விருதுகளுக்கும் தேர்வாகி உள்ளன.

    ஏ.எஸ்.ஆர்.டி.யு. தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக முதல் இடத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் ஒரு விருதும் பெற்றிட தேர்வாகி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாதனேந்தல் ஊராட்சிக்கு பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
    • சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊரா ட்சி ஒன்றியம் தாத னேந்தல் ஊராட்சிக்கு ட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தில் பி.வி.எம். மனநல காப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேசன், புல னாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் மற்றும் பி.வி.எம் அறக்கட் டளை நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர்.அப்துல் ரசாக் பி.வி.எம். மருத்துவ சேவை அணியின் ஆய்வு பரிந்துரையை ஏற்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் கோகிலா ராஜேந்தி ரனுக்கு ஊராட்சி மகாராணி விருது, தாதனேந்தல் சிறந்த ஊராட்சி விருது, சேவை திலகம் விருது ஆகிய மூன்று விருதுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் பி.வி.எம். மருத்துவ சேவை அணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

    இதே போல் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திற னாளிகளின் நல அலுவலர் ஆர்.பாலசுந்த ரத்தின் சேவையை பாராட்டி நம்பிக்கை சிகரம் விருதும், சென்னை மாற்றுத்திறனாளி நல அலுவலர் முனைவர் கதிர்வேலுவின் மக்கள் சேவை பணிக்காக நம்பிக்கை இமய விருதும் வழங்கப்பட்டது. மேலும் பட்டயம், கேடயம், சிறப்பு மலர் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப் பட்டனர்.

    இதில் துறை அலுவ லர்கள், மாவட்ட தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பி.வி.எம். அறக்கட்டளை திறப்பு விழாவை சிறப்பாக நடத்திய நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக்கை பொது மக்கள் பாராட்டினர். கொடையாளர்கள், அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல் துறையினர், தொழிலதி பர்கள், மரு த்துவர்கள், வழக்க றிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அவர்களது சேவை பணியை பாராட்டி விருது, பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    • தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரப் பொருள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் போன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற வாயிலாக 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    தருமபுரி, 

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் வழங்கப்படும் சுற்றுலா தொழில் முனைவோர் களுக்கான விருதுகள் பெற வருகின்ற 27-ந் தேதிக்குள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்க உத்தேசித்துள்ளது.

    தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த உள்வரும் சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த பயண கூட்டாளர், சிறந்த விமான கூட்டாளர்,

    சிறந்த தங்கு மிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர், சிறந்த முக்கிய சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தளம் ஆபரேட்டர், சிறந்த கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரப் பொருள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் போன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வசந்த் அன் கோ சார்பில் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், விஜய் வசந்த் எம்.பி. வழங்கினர்
    • மாணவ-மாணவிகள் படித்து பட்டம் பெற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

    நாகர்கோவில், ஆக.12-

    வசந்த் அன் கோ சார்பில் குமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் பள்ளிகளில் முதலிடம் பிடித்த 500 மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது.

    விழாவை வசந்த் அன்கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், விஜய் வசந்த் எம்.பி. ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதைத்தொ டர்ந்து சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்க ளையும், பரிசுகளையும் வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், விஜய்வசந்த் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி.பேசியதாவது:-

    குமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும். இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து பட்டம் பெற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

    மாணவர்கள் இவ்வளவு முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் கடுமையான உழைப்பு தான். அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். அவர்கள் சக மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவதை பெருமையாக கருதுகிறோம். இதற்கு முக்கிய காரணம் என்னுடைய அம்மா தான். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சகோதரனும் சகோதரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் அவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொ ள்கிறேன்.

    மாணவர்கள் மென்மே லும் வளர வேண்டும். படிப்புடன் மட்டும் இருந்துவிடாமல் விளை யாட்டு உட்பட அனைத்து திறமைகளையும் மாண வர்கள் ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளை யாட்டை ஊக்குவிக்கவும் வசந்த் அன் கோ சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நான் சிறு வயதாக இருந்தபோதே எனது தந்தை தொழில் விஷயமாக சென்றுவிடுவார். தற்பொழுது எங்களை விட்டு சென்று விட்டார். இருப்பினும் எங்களுடைய அம்மா தான் எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தார். அவருக்கு நான் நன்றி கடன் பெற்றுள்ளேன்.

    மாணவர்கள் பெற்றோர்களை மறந்து விடக்கூடாது. இவ்வளவு கஷ்டப்பட்டு என்னை உயர்த்தியவர் என்னுடைய தாயார் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட் டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வசந்த் அன்கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் கூறுகையில், எனது கணவர் வசந்தகுமார் விட்டு சென்ற பணிகளை எனது மகன் விஜய்வசந்த் செய்வதை பெருமையாக கருதுகிறேன். மாணவர்கள் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளை பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். விழாவில் காங்கி ரஸ் மாநகர் மாவட்ட தலை வர் நவீன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    • சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.
    • 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.

    அதன்படி, பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக விளங்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

    எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம். சிறந்த டூர் ஆப்ரேட்டர், சிறந்த உள்நாட்டு டூர் ஆப்ரேட்டர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான கூட்டாளர், சிறந்த தங்குமிடம் என 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ந் தேதி சென்னையில் வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலருக்கு 89251 58497 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.
    • விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    விகடக்கலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்த பாரம்பரிய கலையாகும். சிரிப்பையும் சிந்தனையையும் ஊட்டக்கூடிய வகையில் இக்கலை மிகவும் அரிதாக இருந்துள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தெனாலிராமன் என்ற அரசவை கலைஞர் விகடக்கலையில் சிறந்து விளங்கினார்.

    தெனாலிராமன் கதைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம்.

    இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த கலைமாமணி குன்னியூர் கல்யாணசுந்தரம் (வயது 80) என்பவர் விகடகலையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்த கலையை செய்து வருகிறார்.

    தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டுமே விகடக்கலையை இன்றும் சிரிப்பும் சிந்தனையுடனும், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நடைபெறும் விழாக்களில் நடத்தி வருகிறார்.

    அதன் மூலம் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இவர் நிகழ்ச்சிகளில் பேசும்போது சமுதாயத்திற்கு சிந்தனை கருத்துக்கள் கூறுவது மட்டும் அல்லாமல், தனது குரலில் பறவைகள், விலங்குகள் போல் மயில், கிளி, குயில், அணில், தவளை, எருமை மாடு, நாய், ரயில், உடுக்கு சத்தம், மோட்டார் இன்ஜின் போன்ற சத்தங்க ளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை ரசிக்க வைப்பார்.

    நாகரிகம் மாற்றத்திற்கு ஏற்றார் போல் விகட கலைக்கு போதிய ஆதரவு இல்லாததாலும், விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.

    இதுகுறித்து விகடக்கலை கலைஞர் கல்யாணசுந்தரம் கூறும்போது, சிறுவயதில் விகடக்கலையை பற்றி தெரிந்து கொண்டு திருவிசநல்லூர் ராமசாமி சாஸ்திரிகளை மானசீக குருவாக ஏற்று தற்போது இந்த கலையை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு செல்கிறேன்.

    போதிய வருமானம் இல்லாததால் இந்தக் கலை தற்போது நலிவடைந்துள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் பொற்கிழி விருது பெறுவதற்கு முயற்சி செய்கிறேன்.

    இந்தக் கலையை கவுரவப்படுத்தினால் முன்னாள் விகட கலைஞர் தெனாலிராமனை கவுரவிப்பது போல் இருக்கும் என்றார்.

    • மனிதாபிமான செயல்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துக்கள், மின்கசிவுகள், நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு ஒரு நபரின் உயிரை காப்பாற்றும் மனிதாபிமான செயல்களுக்காக ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் பெற தகுதியான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒரு பக்க அதற்கான குறிப்புரையுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு தங்கப்பதக்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
    • விண்ணப்பப்படிவங்களை 26-ந் தேதி அலுவலக நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்குவித்து கவுரவிக்கப்படுத்துவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழா அன்று கீழ் காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    1.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.

    2.மாற்றுத்திற னாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.

    3.மாற்றுத்திறனாளி களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.

    4.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

    5.சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.

    இந்த விருதுகளுக்கான விண்ணப்பப்படிவங்களை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை - 5 என்ற முகவரியிலோ அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 26-ந் தேதி அன்று அலுவலக நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும்,https://awards.tn.gov.in"என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சித்திரை திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு கமிஷனர் நரேந்திரன்நாயர் விருது வழங்கினார்.
    • சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.

    சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் பாராட்டும் வகையில் விருந்தும், விருதும் வழங்கு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆயுதப்படை மைதா னத்தில் நடைபெற்ற விழா விற்கு போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷ னர்கள், உதவி கமிஷ னர்கள், இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் போலீஸ் கமிஷனர் விருது வழங்கி பாராட்டினார்.

    தொடர்ந்து போலீசார் அனைவருக்கும் அசைவ-சைவ விருந்து வழங்கப்பட்டது.

    • விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
    • ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் 2021- 2022 முதல் சிறந்த 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரையில் 105 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் குமரி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக குமரி மாவட் டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது.

    ஆகவே குமரி மாவட் டத்தை சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட் டம், மயிலாட்டம், தேவ ராட்டம், தோல்பா வைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க் கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளை யாட்டம், மானாட் டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழி யாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புற கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங் கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வய திற்குட்பட்ட கலைஞர்க ளுக்கு கலை சுடர்மணி விருது, 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை நன்மணி விருது, 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருது என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    வயது மற்றும் கலைப்புல மையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப் படும். குமரி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

    மேலும் கடந்த ஆண்டு களில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலை ஞர்கள் தற்போது புதியதாக கண்டிப்பாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இந்நிலை யில், குமரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்து டன் வயதுச்சான்று, முகவரிச் சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் 'ஆ' குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி-7 என்ற முகவரிக்கு 20 நாட்களுக்குள் விண்ணப் பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப் பட்ட அலுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 2021-22 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது.
    • இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மதுரை

    தமிழக சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை சரகத்தில் மட்டும் 2 பெண்கள் உள்பட 14 சிறை காவலர்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய சிறை மைதானத்தில் தமிழக அரசின் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேருக்கும் சரக டி.ஐ.ஜி. பழனி பதக்கம் வழங்கி பாராட்டினார். இதில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன், சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×