search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாநகராட்சியில் 13 ஊராட்சிகளை இணைத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது
    X

    திருமானூர் நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆய்வு செய்தார்.

    தஞ்சை மாநகராட்சியில் 13 ஊராட்சிகளை இணைத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது

    • குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.
    • தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள திருமானூர் நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் ஆணையர் மகேஷ்வரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருமானூர் நீரேற்று நிலையத்தில் முதலில் உறிஞ்சும் ஆழ்குழாய் கிணறு போடப்பட்டது.

    இது 18 எம். எல்.டி. அளவிற்கு அமைக்க ப்பட்டு தஞ்சைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதை தவிர மற்றொரு ஆழ்குழாய் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டு உள்ளன.

    இதுவும் 18 எம்.எல்.டி. அளவிற்கு அமைக்கப்பட்டு தயாரான நிலையில் உள்ளது.

    இந்த பணிகள் இன்னும் 2 மாதத்திற்குள் முடிந்து விடும்.

    இது இரண்டும் சேர்த்தால் 36 எம். எல்.டி அளவுக்கு தஞ்சை மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதுதவிர முன்பு இருக்கக்கூடிய 23 எம். எல்.டி.யும் சேர்த்தால் சுமார் 60 எம்.எல்.டி. அளவிற்கு தண்ணீர் தஞ்சை மாநகருக்கு விநியோகம் செய்ய இருக்கிறது.

    நம்முடைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமார் 30 எம்.எல்.டி. 'அளவிற்கு தஞ்சைக்கு தண்ணீர் வந்தாலே போதுமானது.

    தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் இன்னும் 13 ஊராட்சிகளை இணைத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    இந்த பணிகள் மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தமிழ்நாடு முதல்- அமைச்சர் மற்றும் இத்துறை அமைச்சரின் ஒப்புதலோடு செய்து வருகிறோம்.

    இதன் திட்ட மதிப்பீடு ரூ.73 கோடி ஆகும். குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.

    இன்னும் 10 மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

    இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற்றவுடன் 24 மணி நேரமும் எவ்வித தடையும் இன்றி பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாநகராட்சி செய ற்பொறியாளர் பொறுப்பு ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×