search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவறை"

    • பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன.
    • தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் இருந்து வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்துள்ளார்.

    இதைப் பார்த்த கழிவறைக்கு சென்ற மாணவிகள் கூச்சலிட்டவாறு பதட்டத்துடன் சென்று இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பார்த்தபோது வாலிபர் ஒருவர் கழிவறைக்குள் கதவை சாத்திக் கொண்டு திறக்காமல் இருந்துள்ளார்.

    இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப் இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்த சின்னவர் மகன் பெரியசாமி (வயது 24)என்பது தெரியவந்தது.

    மேலும் வாலிபர் எதற்காக கழிவறைக்கு சென்றார்? வேறு குற்ற வழக்குகளில் ஏதும் தொடர்புடையவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார்.
    • புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே விக்ரமம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 51) கொத்தனார். சம்பவத்தன்று சுப்ரமணியன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரமணியன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்
    • மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அஞ்சு கூட்டுவிளை பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் சில்வஸ்டர் (வயது 70), மீனவர். இவருக்கு மனைவியும், 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கால் வழுக்கி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச் சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சில்வஸ்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடல் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    • ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை காட்சி பொருளானது.
    • பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்

    பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் முறையாக பராமரிப்பு இன்றி அக்னி தீர்த்த கடற்கரைக்கு செல்லும் வழியில் கழிவறை ஆண்டுக்கணக்கில் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் கழிவறைக்கு ரூ.10 முதல் 20 வரை செலவு செய்கின்றனர்.

    இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக வடக்கு ராஜகோபுரம் செல்லும் வழியில் ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பிட்டில் கழிவறை கட்டிடம் கட்டப் பட்டது.

    பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் காட்சி பொருளாக மாறி உள்ளது. மேலும் அங்கு முட்புதர்கள் வளர்த்து காணப்படுகிறது.

    இதனால் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட வரும் பெண் பக்தர்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இந்து அறநிலைத்துறையினர் ரூ.50 லட்சம் மதிப்பிட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவறையை திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.31.28 லட்சம் மதிப்பில் நவீன பொது சுகாதார குளியலறை, கழிவறை கட்டப்பட்டன.
    • தூய்மை பணியாளர் மட்டுமின்றி அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி வார்டு 10 கும்பகோணத்தார் தெரு வடவாற்றங்கரையில் தஞ்சை மாநகராட்சி, தூய்மை பாரத இயக்கம் 2.00 திட்டம் சார்பில் ரூ.31.28 லட்சம் மதிப்பில் நவீன பொது சுகாதாரப் பொது குளியலறை, கழிவறை கட்டப்பட்டன. இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு பகுதி 1 மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு நவீன சுகாதார பொது குளியலறை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கழிவறையை மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர் ஆட்சி பொன்னு என்பவரை கொண்டு திறந்து வைக்க செய்தார். மேயரின் இந்த செயலால் அந்த தூய்மை பணியாளர் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்து பாராட்டினர்.

    இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ( பொறுப்பு ) ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஆனந்தி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா சரவணன், கவுன்சிலர் செந்தமிழ் செல்வன், தி.மு.க.பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாநகரப் பிரதிநிதி பத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு எப்போது அகற்றப்படும்.
    • தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

    மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட அய்யன்குளத்துக்கு மத்திய அரசால் 3-வது இடத்திற்கான விருது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விருதை அடுத்த மாதம் 27 மற்றும் 28 தேதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருது வழங்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதற்காக மத்திய அரசு, தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் , நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் பேசிய விவரமும் , அதற்கு பதில் அளித்து மேயர் , ஆணையர் பேசிய விவரமும் வருமாறு:-

    மண்டல குழு தலைவர் மேத்தா: அய்யன் குளம், அழகியகுலத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி.

    ரம்யா சரவணன்: அய்யன் குளத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    காந்திமதி : கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது ஆட்சியில் நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட் இடமாற்றம் எப்போது ? தஞ்சாவூர் மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் எப்போது இணைக்கப்படும்.

    ஜெய் சதீஷ்: தஞ்சை செண்பகவல்லி நகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

    அந்தப் பணியை துரித படுத்த வேண்டும். வானக்கார தெருவில் பைப் லைன் அமைக்கும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும். சிவகங்கை பூங்கா குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேசவன் : எனது வார்டில் வாய்க்கால் தூர்வார வேண்டும். சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ள வராத சமயத்தில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து குப்பைகளை உடனுக்குடன் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்: நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை ஏவி நமது விஞ்ஞானிகள் மாபெரும் உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையில் தமிழ்நாட்டை சேர்ந்த வீர முத்துவேல் முக்கிய பங்காற்றினார். எனவே தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் ஏதாவது ஒரு பள்ளி ஆய்வகத்துக்கு வீர முத்துவேல் பெயர் சூட்ட வேண்டும். அருளானந்தநகர் 4, 5-வது தெருவில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை தொடங்கி உடனே முடிக்க வேண்டும். தினமும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு செல்வதால் அவர்களின் வசதிக்காக இலவச கழிவறையை அமைக்க வேண்டும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய அனுமதி பெற்று நடைபெற்றதா ? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

    நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது ?

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி:

    தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் சுகாதார அட்டை வழங்க வேண்டும். ஆணையர் சரவணகுமார் :

    தஞ்சை மாநகராட்சியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இருந்ததை விட தற்போது சாலைகள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இதனை வெளியூர் மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    மேயர் சண். ராமநாதன்:

    தஞ்சை மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தி ற்குள் இணைக்கப்படும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி உடன் அனுமதி பெற்று தான் நடந்தது .

    தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராசா மிராசுதார் மருத்துவமனை வரை உள்ள இடங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்படும். தற்காலிக மீன் சந்தை அருகே உள்ள இடத்திற்கு மாற்றும் பணி விரைவில் தொடங்கும். தஞ்சை மாநகராட்சி கல்லு குளம் சுகாதார நிலையம் தர வரிசையில் மாநில அளவில் 2-வது இரண்டாம் இடமும் , கரந்தை சுகாதார நிலையம் 5-வது இடமும் பிடித்துள்ளதற்கு பாராட்டு க்கள். செயற்பொறியாளர் நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ளார். அவருக்கு நாளை பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருக்கு வாழ்த்துக்கள். கவுன்சிலர்கள் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
    • உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்து, 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு ஒப்படைத்தார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் சார்பில், தலா ரூ.2.10 லட்சம் மானியம் வீதம், 38 நபர்களுக்கு ரூ.79.30 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் தனி நபர் கழிவறை அமைக்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.9,300 வீதம் 10 நபர்களுக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர் குமாரதுரை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக், செயல் அலுவலர் (பொ) ஷேக் லத்திப், கவுன்சிலர்கள் மகாலட்சுமி செந்தில், சசிகலா கபரியேல், சந்திர பாண்டியன், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார்.
    • பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    திருப்பதியில் இருந்து செகந்திராபாத்துக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார். பின்னர் தான் வைத்திருந்த சிகரெட்டை பற்ற வைத்தார். அப்போது அங்கு பொருத்தப்பட்டு இருந்த தீப்பிடித்ததற்கான அலாரம் ஒலித்தது.

    இதனால் பயணிகள் மத்தியில் தீ பிடித்ததாக பீதி ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் மானுபாலு என்ற ரெயில் நிலையம் அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், அங்கு விரைந்து சென்றனர். அலாரம் ஒலித்த கழிவறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது உள்ளே ஒருவர் கையில் சிகரெட்டுடன் இருந்ததை பார்த்தனர். உடனே அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர் நெல்லூர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    • தஞ்சை மாநகராட்சி கிருஷ்ணன் கோவில் முதல் தெருவில் மகளிர்களுக்கு 4 கழிவறை, 1 குளியறை கட்டப்பட்டன.‌
    • மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு மகளிர் சமுதாய கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி 30-வது வார்டு கிருஷ்ணன் கோவில் முதல் தெருவில் 15-வது நிதி குழு மானிய நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகளிர்களுக்கு 4 கழிவறை, 1 குளியறை கட்டப்பட்டன.

    இது தவிர ரூ.5 லட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய போர்வெல் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று மகளிர் சமுதாய கழிப்பிடக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி முன்னிலை வகித்தார்.மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு மகளிர் சமுதாய கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த வார்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவோம் .

    இந்த பகுதி சௌராஷ்டிரா மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் அவர்களின் கோரிக்கையான பெயர் பலகையை தமிழ் மற்றும் சௌராஷ்டிரா மொழியில் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    அதனை ஒப்புதலுக்காக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். ஒப்புதல் வந்த பிறகு கண்டிப்பாக கோரிக்கையை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ரம்யா, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சுழி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கழிவறைக்குள் பாம்பு புகுந்தது.
    • மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஆணைக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர்.

    மேலும் இந்த அரசுப் பள்ளி காட்டு பகுதியில் அமைந்துள்ளதால் அவ்வப்போது விஷசந்துகள் வரு வது வழக்கமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் சிறப்பு வகுப்புகளுக்காக மாணவ, மாணவியர் படித்து கொண் டிருந்தனர். அப்போது பள்ளிகூடத்தின் கேட் பகுதி வழியாக சுமார் நான்கரை அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று அங்குள்ள பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் நுழைந்தது.

    இதனை கண்ட மாணவர் கள் கூச்சிலிட்ட நிலையில் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக திருச்சுழி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் கொடுத்த னர். உடனே சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ் வரன் தலைமையிலான தீய ணைப்பு குழுவினர் பள்ளிக்கூடத்தின் கழிவறை பகுதிக்குள் நுழைந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை காட்டு பகுதியில் விட்டனர்.

    மேலும் மாணவர்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போதே சாரை பாம்பு ஒன்று கழிவறைக்குள் புகுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியன் டாய்லெட், வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டையும் பயன்படுத்துகிறவர்களும் உண்டு.
    • ஒவ்வொரு மனிதருக்கும் இது முக்கியமான பிரச்சினை.

    உலகில் கடந்த காலங்களில் எல்லா துறைகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கற்பனைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சி பல துறைகளில் ஏற்பட்டிருந்தாலும், மனிதர்களின் அத்தியாவசிய தேவையான 'டாய்லெட்' வடிவமைப்பில் அப்படி பெரிய அளவில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்பது உண்மை. ஏற்கனவே சொன்னதுபோல, உலகம் முழுவதும் டூ பாத்ரூம் அதாவது டாய்லெட் போக இரண்டே இரண்டு முறைகள்தான் இன்றைய தேதி வரை மிக அதிகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    ஒன்று: கால் முட்டிகள் இரண்டையும் மடக்கி குத்தவைத்து இருந்து கொண்டு (SQUATTING POSITION) மலம் கழிப்பது. இதை 'இந்தியன் ஸ்டைல்' என்று சொல்வார்கள்.

    இரண்டு: நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்று உட்கார்ந்து கொண்டு மலம் கழிப்பது. இதை 'வெஸ்டர்ன் ஸ்டைல்' என்று சொல்வார்கள்.

    டாய்லெட் வசதி இல்லாத இடங்களிலும், டாய்லெட் அமைப்பு இல்லாத இடங்களிலும் குத்தவைத்து உட்கார்ந்திருந்து மலம் கழிக்கும் முறைதான் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, டாய்லெட்டை உபயோகப்படுத்துவது என்பது, ஒரு தனிப்பட்ட, அந்தரங்கமான விஷயமாகவே இன்றும் கருதப்படுகிறது. இந்திய ஜனத்தொகையில் குறிப்பிட்ட சதவீத மக்கள், இன்னும் கட்டாந்தரையிலும், வெட்ட வெளியிலும், இருள் மறைவிலும், ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் கரையோரங்களிலும், ஊருக்கு ஒதுக்குப்புறங்களிலும், உபயோகத்தில் இல்லாத நிலங்களிலும் தான் மல ஜலம் கழித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்று, உட்கார்ந்துகொண்டு மலம் கழிப்பது என்பது, மேலை நாடுகளில் ஆரம்பித்து, அங்கு தான் அதிகமாக உபயோகத்திலும் இருந்து வருகிறது. அதனால்தான் இதனை 'வெஸ்டர்ன் டாய்லெட்' என்கிறோம். நம்மவர்கள் முன்பெல்லாம் களைக்கும் அளவுக்கு உழைப்பவர்களாக இருந்தார்கள். அதனால் வயதான காலத்திலும் அவர்களால் குத்துக்காலிட்டு உட்கார முடிந்தது. இப்போது உடலுழைப்பு காணாமல்போய், மூளைக்கு அதிக வேலைகொடுத்து, மூட்டுகளை மடங்காத நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

    வயதானவர்கள், விபத்துகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களின் சவுகரியத்திற்காகத்தான் 'வெஸ்டர்ன் டாய்லெட்' அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியன் டாய்லெட், வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டையும் பயன்படுத்துகிறவர்களும் உண்டு. அதனால்தான் பொதுகழிப்பறைகள் மற்றும் ரெயில்களில் இரண்டுவிதமான டாய்லெட்டுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது 'வெஸ்டர்ன் டாய்லெட்' பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தானாகவே தண்ணீர் பீய்ச்சி சுத்தம் பண்ணும் 'WATER CLOSET' அமைப்பு 1880-ம் ஆண்டு பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இந்த ஸ்டைல் பிரிட்டனிலிருந்து ஐரோப்பா முழுவதுக்கும் பரவியது. செயினால் இழுக்கும் வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பு 1890-ல் அமெரிக்காவில் பணக்காரர்கள் வீட்டிலும், பிரபலமான ஓட்டல்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலம் கழிக்கும்போது உடலை கொஞ்சம் முன்பக்கமாக வளைத்தோ அல்லது முதுகை வளைக்காமல் 90 டிகிரியில் முதுகை நேராக வைத்துக்கொண்டோதான் நாம் உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பதற்கு வேண்டுமானால் இது சவுகரியமாக இருக்குமே தவிர வயிறு சுத்தமாக காலியாகாது என்றுதான் சொல்லவேண்டும்.

    பெருங்குடலின் கடைசிப் பகுதியும் ஆசன வாய்ப் பகுதியும் சேரும் இடமானது 90 டிகிரி கோணத்தில் 'L' வடிவத்தில் இருக்கும். இந்த சந்திப்பு கோணத்திற்கு 'ஏனோரெக்டல் ஆங்கிள்' ANORECTAL ANGLE) என்று பெயர். இந்தப் "பெருங்குடல் - ஆசன வாய்ப்பகுதி சந்திப்பு" மலம் கழிக்கும் செயலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

    1996-ம் ஆண்டு ஆராய்ச்சியாளர் 'டாகர்ட்' என்பவர் பல்வேறு நிலைகளில் மனிதனை உட்கார வைத்து மனிதனின் "பெருங்குடல்-ஆசன வாய்ப் பகுதி சந்திப்பை" பல கோணங்களில் அளவெடுத்துப் பார்த்தார். பின்பு அவர், "சாதாரணமாக 'L' வடிவத்தில் இருக்கும் கோணம் குத்தவைத்து உட்கார்ந்து மலம் கழிக்கும்போது, சற்று நேராகிறது" என்று தெரிவித்தார். அதாவது குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும்போது பெருங்குடலின் கடைசிப்பகுதியும், ஆசன வாய்ப்பகுதியும் நேராக வருகிறதாம். குத்துக்காலிட்டு உட்கார்ந்து மலம் கழிக்கும் போது, வயிற்றுக்கு நாம் கொடுக்கும் அழுத்தம் குறைந்து விடுகிறது என்றும் மலச்சிக்கலும், மூலநோய் வருவதும் குறைகிறது என்றும் டாகர்ட் கூறியுள்ளார்.

    வயதானவர்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர் களுக்கு, வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பு மிகவும் உபயோகமாக இருப்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்திய டாய்லெட் அமைப்பை உபயோகிப்பதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்தியன் டாய்லெட் அமைப்பை உபயோகிக்கும்போது இடுப்பிலிருந்து கணுக்கால் வரை உள்ள எல்லா மூட்டுகளும் நன்றாக இயங்குகின்றன. திடக்கழிவும் முழுமையாக வயிற்றிலிருந்து வெளியேறிவிடுகிறது. அதனால் இந்திய டாய்லெட் அமைப்பில் மலம் கழிப்பதுதான் நல்லது என்று பிரபல அமெரிக்க டாக்டர்.எம்.கே.ரிஜ் என்பவர் கூறியுள்ளார்.

    வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகித்துவிட்டு திடீரென்று இந்தியன் டாய்லெட்டில் போய் உட்காரச் சொன்னால் அவர்களால் முடியாது. மிகவும் கஷ்டப்படுவார்கள். அதனால் சிறு வயதிலிருந்தே இரண்டு டாய்லெட்டுகளையும் உபயோகிக்கும் பழக்கத்துக்கு தயாராகுவதே நல்லது. ஒவ்வொரு மனிதருக்கும் இது முக்கியமான பிரச்சினை. இதில் அலட்சியம்காட்டவேண்டாம்.

    கட்டுரை: டாக்டர் எஸ்.அமுதகுமார், பொது மற்றும் குடும்ப நல மருத்துவர், சென்னை.

    • மோதிரத்தை திருடிய பெண் ஊழியர் தான் எங்கே போலீசில் சிக்கி விடுவோமோ? என பயந்தார்.
    • போலீசார் பெண் ஊழியரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை கக்கிவிட்டார்.

    ஐதராபாத்:

    ஐதராபாத் போஸ் ஜூப்ளி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்துக்கு முடி அலங்காரம் செய்ய பெண் வந்தார். அவரிடம் அங்கிருந்து பெண் ஊழியர் கையில் போட்டிருக்கும் வைர மோதிரத்தை கழற்றுமாறு கூறினார். உடனே பெண் வாடிக்ககையாளர் ரூ.30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான வைர மோதிரத்தை கழற்றி கொடுத்தார். அந்த மோதிரத்தை பெண் ஊழியர் வாங்கி ஒரு பெட்டியில் வைத்தார். முடி அலங்காரம் முடிந்த பிறகு அந்த பெண் வைர மோதிரத்தை மறந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதை கவனித்த பெண் ஊழியர் அந்த வைர மோதிரத்தை நைசாக எடுத்து தனது மணிபர்சில் மறைத்து வைத்தார். சிறிது நேரம் கழித்து பெண் வாடிக்கையாளர் பதற்றத்துடன் அழகு நிலையத்துக்கு வந்தார். அவர் மோதிரம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டார், ஆனால் அது பற்றி தெரியாது என அவர்கள் கூறினார்கள். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் மோதிரத்தை திருடிய பெண் ஊழியர் தான் எங்கே போலீசில் சிக்கி விடுவோமோ? என பயந்தார்.

    உடனே அவர் அழகு நிலையத்தில் இருந்த கழிவறைக்கு சென்றார்.பின்னர் திருடிய மோதிரத்தை அவர் கழிறைக்குள் வீசி விட்டு அதில் தண்ணீரை ஊற்றினார். அந்த மோதிரம் குழாய் வழியாக சென்றுவிட்டது. இருந்த போதிலும் போலீசார் பெண் ஊழியரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை கக்கிவிட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் பிளம்பர் உதவியுடன் கழிவுநீர் செல்லும் குழாயில் சிக்கி இருந்த வைர மோதிரத்தை மீட்டனர்.

    ×