search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்ககோரி உண்ணாவிரதம்
    X

    ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்ககோரி உண்ணாவிரதம்

    • பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
    • வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ளது எஸ்.ஏரிப்பாளையம் கிராமம். இந்த கிராமம் சிறுவத்தூர் ஊராட்சியிலும், சேமகோட்டை ஊராட்சியிலும் உள்ளது. அதே போல இந்த கிராமம் நெய்வேலிசட்டமன்ற தொகுதியிலும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் ஏரிப்பாளையம் கிராமம் தனித்துவிடப்பட்டுள்ளது என கூறி ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கிராம மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

    இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் சிவமணி தலைமையில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இன்று காலை கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்து பண்ருட்டி-மடப்பட்டு சாலை சேலம் மெயின் ரோட்டில் எஸ்.ஏரிப்பாளையம் கேட் அருகில் சாலையின் இருபுறமும் பந்தல் அமைத்து அதில் அமர்ந்து சிறுவர், சிறுமியர் முதல்பெரியவர் வரை 1000-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×