search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயலாளர்கள்"

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 30-ந் தேதி ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினமாக கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உமா, சரவணன், அலெக்ஸ் பிரபாகரன், குமரேசன், பூச்சான், ஓமலூர் குமார், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பூபாலன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் 100 நாவல் மரக்கன்றுகளை நட்டனர்.

    ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

    • 14 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்க ஏற்பாடு
    • மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வ மும், இணை ஒருங்கி ணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் செயல்பட்டு வந்தனர்.

    அதன்பின்பு கட்சிக்குள் ஒற்றை தலைமையை ஏற்படுத்த மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்தனர். இதையடுத்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர் செல்வம் சட்டபோராட்டத்தில் ஈடுபட்டார். இதில் எடப்பாடி பழனிசாமிக்கே வெற்றி கிடைத்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இதையடுத்து அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்து வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் பணிகளை தொடங்கி விட்டார். அதன் முதல் கட்டமாக சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவில்லை.

    கூட்டத்தில் பங்கேற்காத மாவட்ட செயலாளர்கள் யார்-யார்? என பட்டிய லிட்ட போது அவர்கள் ஓ.பன்னீர் செல்வம் ஆதர வாளர்கள் என தெரிய வந்தது. கட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்து கொண்டனர்.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்த சில மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது தெரியவந்தது. இதில் குமரி கிழக்கு மாவட்டம், தஞ்சாவூர், சென்னையில் 2 மாவட்ட செயலாளர்கள் உள்பட 6 பேர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக இருப்பது தெரியவந்தது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    அந்த வகையில் குமரி கிழக்கு மாவட்ட செய லாளராக இருந்த எஸ்.ஏ.அசோகன் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஆவார். எனவே அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளரை நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வரு கிறது. இதுபோல கட்சி பணிகளில் ஆர்வம் காட்டா மல் இருக்கும் மாவட்ட செயலாளர்களை கண்ட றிந்து அவர்களையும் ஓரங் கட்ட கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி குமரி, தஞ்சை, சென்னை உள்ளிட்ட 14 மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படும் போது அந்த பதவியை கைப்பற்ற இப்போதே பல நிர்வாகிகள் காய்நகர்த்த தொடங்கி விட்டனர்.

    இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த எஸ். ஏ.அசோக னுக்கு பதிலாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்பட குமரி மாவட்டத்தை சேர்ந்த சில மூத்த நிர்வாகி களின் பெயர்கள் அடிபடு கிறது. இவர்களில் யாருக்கா வது ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங் கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பாராளு மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத்தில் புதிய மாவட்ட செயலாளரை நியமனம் செய்து கட்சியை மேலும் வலுப்படுத்த மூத்த நிர்வாகிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.

    • தவறாமல் அனைத்து செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
    • வரைவு வாக்காளர் பட்டியல், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்–துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம் வருகிற 2-ந் தேதி மாலை 6 மணிக்கு திருப்பூர் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கத்தில் அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில், எனது முன்னிலையில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் தவறாமல் அனைத்து செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்ட தீர்மானம், வரைவு வாக்காளர் பட்டியல், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

    • மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.

    அவினாசி : 

    ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமையான மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களில் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் 31 ஊராட்சிகளில் பணியாற்றும்செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் ஊராட்சி செயலாளர்கள் 3 நாட்கள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    • ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன்,பொருளாளர் செந்தில்பொன் குமார் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஊரக வளர்ச்சித்துறையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஊதியம் இல்லாத விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 429 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் நீங்கலாக மொத்தம் 396 ஊராட்சி செயலாளர்கள் சம்பந்தப்பட்ட அந்தந்த ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) விடுப்பு கடிதம் அளித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் உள்ள 35 ஊராட்சியில் 4 காலி பணியிடங்கள் நீங்கலாக 31 ஊராட்சி செயலாளர்கள் 3 நாட்கள் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்கான விடுப்பு கடிதத்தை ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) மலைராஜனிடம் வழங்கியுள்ளனர். இத்தகவலை ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் ரவி தெரிவித்தார்.அப்போது ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன்,பொருளாளர் செந்தில்பொன் குமார் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×