என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம் - 2-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம் - 2-ந்தேதி நடக்கிறது

    • தவறாமல் அனைத்து செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
    • வரைவு வாக்காளர் பட்டியல், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்–துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம் வருகிற 2-ந் தேதி மாலை 6 மணிக்கு திருப்பூர் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கத்தில் அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில், எனது முன்னிலையில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் தவறாமல் அனைத்து செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்ட தீர்மானம், வரைவு வாக்காளர் பட்டியல், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×