search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாயத்து"

    • தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.
    • மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சி கடந்த 2021-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது. தற்போது 87.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 70 வார்டுகளுடன் 5 மண்டலங்களாக உள்ளது. சுமார் 10 லட்சம் பொது மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியுடன் மேலும் 15 பஞ்சாயத்துக்களை இணைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்களம், பொழிச்சலூர், திரிசூலம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கை வாசல், மதுரபாக்கம், மூவரசம்பட்டு, சித்தாலப்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்கள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய உள்ளன. இதனால் தாம்பரம் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 115 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும். இந்த பஞ்சாயத்துக்கள் மண்டல அதிகாரிகள் மேற்பார்வையில் இருக்கும். இந்த புதிய பஞ்சாயத்துக்கள் இணைப்பதன் மூலம் தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும். பஞ்சாயத்துக்கள் இணைப்புக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 2027-ம் ஆண்டு வரை மண்டல அலுவலர்கள் ஊராட்சிகளை நிர்வகிப்பார்கள். ஒவ்வொரு மழையின்போது முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    இந்த இணைப்புகள் மூலம் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேலும் எடுக்க முடியும் என்றனர்.

    • பிராக்கால் குளத்தில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஊராட்சி தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபுரத்தில் பிராக்கால் குளத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியையும், கே.ஆர்.காலனி பகுதியில் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான வாறுகால், அய்யாபுரத்தில் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 890 மதிப்பிலான வாறுகால், சுப்பிரமணியபுரத்தில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் புனரமைப்பு பணி, காமராஜர் நகர் மெயின் ரோட்டில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளி ட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

    குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கர ம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன், மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். குத்துக்கல் வலசை ஊராட்சி செயலர் வேம்பையா நன்றி கூறினார்.

    • அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் பரிதாபம்
    • பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்பர் செல்வகுமார் (வயது 74).

    இவர் பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இவர் இன்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள தோப்புக்கு சென்றார். அப்போது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இந்த மின்கம்பியை அவர் மிதித்து உள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதனால் மயங்கி நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பரமக்குடி யூனியன் கூட்டம் நடந்தது.
    • பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் கூட்டம் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா முன்னிலை வகித்தனர். மேலாளர் லட்சுமி வரவேற்றார். கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அறிவு சார் மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இடம் கேட்கப்பட்டுள்ளது. யூனியன் அலுவலகத்தில் அதற்கான இடமில்லை.

    அறிவு சார் மையத்தை பரமக்குடி நகரின் மையப் பகுதியான பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், எமனேசுவரம் பகுதி, சந்தை கடை பகுதிகளில் அமைத்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும். அதேபோல் மையப் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளது. மாணவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, கலெக்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் அறிவு சார் மையம் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். உடனே அனைத்து கவுன்சிலர்களும் அறிவுசார் மையத்திற்கு இடம் வழங்க முடியாது என்று ஏக மனதாக அந்த தீர்மானத்தை நீக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நீக்கப்பட்டது.

    துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது. ஆனால் நிதி ஒவ்வொரு மாதமும் குறைவாகத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. யூனியனில் இருக்கும் நிதியையும் எங்கள் அனுமதி இல்லாமலேயே மாவட்ட நிர்வாகம் வங்கி கணக்கில் எடுத்து விடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் கூடுதலாக நிதி ஒதுக்கினால்தான் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆகவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

    • விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து நிலைக்குழு தலைவர்கள்-உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்துக்கான 5 நிலைக்குழு ஏற்படுத்தப்பட்டு இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

    அதன் விவரம் வரு மாறு:-

    * உணவு மற்றும் மேலாண்மைக்குழு தலைவர்-மச்சராஜா, உறுப்பினர்கள்- நர்மதா, நாகராஜன், வேல்ராணி (எ) உமா லட்சுமி.

    * தொழில் மற்றும் தொழிலாளர் குழு தலைவர்-பாரதிதாசன், உறுப்பினர்கள்-சிவக்குமார், தமிழ்வாணன், மகாலட்சுமி.

    * பொதுப்பணிக்குழு தலைவர்-வேல்முருகன், உறுப்பி னர்கள்-மகா லட்சுமி, கண்ணன், புவனா.

    * கல்விக்குழு தலைவர்-சுபாசினி, உறுப்பினர்கள்-பாலச்சந்தர், பகவதி, மாலதி

    இந்த 4 குழுக்களுக்கும் பதவி வழி உறுப்பினராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * மதுவிலக்கு உள்ளடங்கல் மற்றும் மக்கள் நல்வாழ்வு நிலைக்குழு தலைவர்- வசந்தி (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்), உறுப்பினர்கள்-இந்திரா, முத்துச்செல்வி, போஸ், பாரதிதாசன்.

    • இன்று காலையில் காக்கும் விநாய கர் ஆலய த்தில் பக்தர்கள் அலங்க ரிக்கபட்டயானை ஊர்வல த்துடன் பால்குடம் காவடி ஊர்வலம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் தோவாளை பஞ்சாயத்து துணைத்தலைவர். தாணு, பகவதி அய்யப்பன், விவசாய அணி தலைவர் முத்துசாமி ஒன்றியசெயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    கன்னியாகுமரி, ஆக.12-

    தோவாளையில் அருள்மிகு சுப்பிரமணி யசுவாமி திருக்கோவில் 53- வது மலர்முழுக்குவிழா நடந்தது. இன்று காலையில் காக்கும் விநாய கர் ஆலய த்தில் பக்தர்கள் அலங்க ரிக்கபட்டயானை ஊர்வல த்துடன் பால்குடம் காவடி ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை சேர்மன் சாந்தினிபகவதியப்பன், பஞ்சாயத்துதலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமையில் திரு மலைமுருகன் திருக்கோவில் பக்தர்கள் சங்கநிர்வாகிகள் முன்னிலையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றதலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தோவாளை பஞ்சாயத்து துணைத்தலைவர். தாணு, பகவதி அய்யப்பன், விவசாய அணி தலைவர் முத்துசாமி ஒன்றியசெயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். பிற்பகல் அன்னதானம் இரவு மலர்முழுக்குதீபாராதனை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    • வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் வீடியோ கால் மூலம் பேசியதில் ஏற்பட்ட தகராறில் பரிதாப முடிவு
    • கன்னியாகுமரி போலீசுக்கு தகவல்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஞானபாக்கியபாய் (வயது 33) இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் உள்ள தனது கணவர் செந்திலுடன் நேற்று வாட்ஸ்-அப் வீடியோகால் மூலம் பேசினார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த ஞானபாக்கியபாய் தனது 2 குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்துஅவரது கணவர் செந்தில் அருகில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் செந்திலின் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது ஞான பாக்கியபாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

    உடனே இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலராஜகுல ராமன், சோழபுரம், குறிச்சியா ர்பட்டி, கிருஷ்ணாபுரம், சோலைசேரி, அயன்கொல்ல ங்கொ ண்டான், நக்கனேரி, சுந்தரநாச்சியார்புரம், வடக்கு தேவதானம் ,மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன்புத்தூர், மீனாட்சிபுரம் ஆகியவை ஆகும். வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 80 சதவீத திட்டங்கள் இந்த பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளன, இந்த கிராமங்களில் தரிசு நிலங்களை சீர் செய்ய, சொட்டுநீர் பாசனம் அமைக்க போன்றவற்றுக்கு அரசு மானியம் தருகிறது.

    மேலும் 8-க்கும் மே ருக்கு மேல் சீர்த்திருத்தம் செய்யும் போது அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.

    இங்குள்ள விவசாயிகளுக்கு தென்னங்கன்று, தெளிப்பான், தார்பாலின், பண்ணை கருவிகள் போன்றவைகளும் மானிய விலையில் கிடைக்க உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் விவரத்தை அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலரிடம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி தெரிவித்தார்.

    • வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
    • வீடு, வீடாக சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இந்தப் பேரணியில் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, பழந்தின்னிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் நல்லதம்பி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வீடு வீடாகச் சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதேபோல் வெண்ணந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    • பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது
    • 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் பேசியதாவது:-

    2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட ஊராட்சி பொது நிதியில் இருந்து பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடங்களுக்கு பதிலாக புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்ட வேண்டும். குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி ஏற்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் ஜல்லி, மணல் மற்றும் கருங்கற்கள் போன்ற கட்டுமான பொருட்கள் கிடைக்க பெறாததால் கட்டு மான பணிகளில் தேக்க நிலை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டு உள்ளனர். எனவே இதனை நிவர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காளிகேசம் பகுதியில் கேபிள் கார் வசதி செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உரிய அழைப்பு விடுக்க வேண்டும். பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், குமரி மாவட்டத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன் வருகை தந்தபோது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை முறையாக அழைக்காததால் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீல பெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, செலின் மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை செயல்படுத்த இ டெண்டர் முறையினை கைவிட்டு அந்தந்த ஊராட்சி மூலமே செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும்.
    • வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து கண்காணிக்கும் பொருட்டு ஏற்படும் இடர்பாடுகளை அறிந்து அம்முடிவை கைவிட வேண்டும்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலத்தில் பாபநாசம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கூட்டமைப்பு தலைவர் திருமண்டங்குடி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டமைப்பு செயலாளர் கோவிந்தன்நாட்டு சேரி ஜெயசங்கர் வரவேற்றார். மாவட்ட கூட்டமைப்பு தலைவர் பாஸ்கர், மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கூட்டமைப்பின் மாநில தலைவர் முனியாண்டி கலந்துகொண்டு சிறப்புரை–யாற்றினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊராட்சிக்கு வரவேண்டிய மாநில நிதிக்குழு மானிய நிதியை மாதம் தவறாமல் விடுவிக்க வேண்டுமெனவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளையும், தோல்வியுற்ற நபர்களையும் இணைத்து வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து கண்காணிக்கும் பொருட்டு ஏற்படும் இடர்பாடுகளை அறிந்து அம்முடிவை கைவிட வேண்டும் எனவும்,

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை செயல்படுத்த இ டெண்டர் முறையினை கைவிட்டு அந்தந்த ஊராட்சி மூலமே செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் எனவும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பஞ்சாயத்துராஜ் அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டுமெனவும், பஞ்சாயத்தில் ஈ.பி. கணக்கில் மிகையாக தொகை உள்ள ஊராட்சிகளில் கூடுதல் தொகையை முதல் கணக்கிற்கு நிதி மாற்றம் செய்ய வேண்டுமெனவும்,

    ஒவ்வொரு ஊராட்சியிலும் கூடுதல் தூய்மை காவலர்கள், கூடுதல் ஒ.எச்.டி. இயக்குனர்களை ஊராட்சிகளின் தேவைக்கேற்ப நியமனம் செய்ய வேண்டும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு துணைச் செயலாளர் நாசர், துணைத்தலைவர்கள் ராஜ்குமார், விஜய் பிரசாத், உள்பட 34 ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    ×