search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குத்துக்கல்வலசை ஊராட்சியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா
    X

    குத்துக்கல்வலசை ஊராட்சியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா

    • பிராக்கால் குளத்தில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஊராட்சி தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபுரத்தில் பிராக்கால் குளத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியையும், கே.ஆர்.காலனி பகுதியில் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான வாறுகால், அய்யாபுரத்தில் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 890 மதிப்பிலான வாறுகால், சுப்பிரமணியபுரத்தில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் புனரமைப்பு பணி, காமராஜர் நகர் மெயின் ரோட்டில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளி ட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

    குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கர ம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன், மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். குத்துக்கல் வலசை ஊராட்சி செயலர் வேம்பையா நன்றி கூறினார்.

    Next Story
    ×