search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசினகுடி"

    • நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
    • ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணி நடந்தது.

    ஊட்டி,

    ஊட்டி மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் பங்கேற்று நீர்தேக்க தொட்டி கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    மேலும் அதேபகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையையும் திறந்து வைத்தார்.

    இதேபோல் மசினகுடி அருகே இந்திரா காலனி பகுதியில் சமுதாய கூடத்தை சுற்றி ரூ.10 லட்சம் மதிப்பிலான சுவர் கட்டும் பணி, மாயார் பகுதியில் ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரமேசை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்

    ஊட்டி,

    மசினகுடி அருகே 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஆனைகட்டி எப்பநாடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 19) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் ரமேசை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ஆச்சங்கரை பகுதியில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன், தனிப்பிரிவு மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆச்சங்கரை பகுதியில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இதையடுத்து அருகே சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த ஜான் ஜோசப்(வயது40) என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, விற்பனைக்காக அங்கு நின்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான் ஜோசப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • மசினகுடியில் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு பேரணியும் நடந்தது.
    • யானைகள் பற்றிய கையேடும், துணிப்பையும் வழங்கப்பட்டன.

    ஊட்டி

    உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷின் உத்தரவின்படி, மசினகுடி கோட்ட துணை இயக்குநா் அருண்குமாா் முன்னிலையில் மசினகுடியில் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு பேரணியும் நடந்தது.

    அதனை தொடா்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமில் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றன. தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகள் பற்றி வனக்கால்நடை உதவி மருத்துவா் ராஜேஷ், யானை ஆராய்ச்சியாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் பள்ளிக் குழந்தைகளுக்கு விளக்க உரை அளித்தனா். பின்னா் யானைகள் வழித்தடம் மற்றும் பாதுகாப்பு பற்றி குறும்படம் காண்பிக்கப்பட்டது. வி

    ழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு யானைகள் பற்றிய கையேடும், துணிப்பையும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியரோடு, திரளான பொதுமக்களும், தன்னாா்வலா்களும் கலந்து கொண்டனா்.

    ×