search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து ைவத்தார்
    X

    சூரக்குடி ஊராட்சியில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிமை பொருட்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து ைவத்தார்

    • சூரக்குடி ஊராட்சியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து ைவத்தார்.
    • கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    0சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை, தி.சூரக்குடி ஊராட்சிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், கலையரங்கம், நியாய விலை கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டி டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூவான்டிபட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை யரங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-22ன் கீழ் ஆவுடைபொய்கை கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம்,

    சூரக்குடி கிரா மத்தில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள நியாய விலை கடை, நெற்புகப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலை கடை, சூரக்குடி கிராமத்தில் ரூ.06.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடம் என மொத்தம் ரூ.53.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட் டுள்ள கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவ ராமன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) முத்து மாரியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன். சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், கானாடு காத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, காரைக் குடி வட்டாட்சியர் தங்க மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஊர்காவலன், சாக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×