search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kiran Bedi"

    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

    பிரபல இந்தி நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் கவிதா சௌத்ரி போராடி வந்த நிலையில், தற்போது தன் 67ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த 'உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. கிரண்பேடிக்கு பிறகு இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவரது கஞ்சன் சௌத்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது.

    இந்த சீரியலில், கல்யாண் சிங் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த கவிதா, அக்கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் 90களின் பிரபலமான 'சர்ஃப் எக்ஸல்' விளம்பரங்களில் 'லலிதா ஜி' எனும் கதாபாத்திரத்திலும் தோன்றி, அன்றைய தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

    இந்நிலையில், கவிதா நேற்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பார்வதி தேவி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    புதுவையில் முதல் மந்திரிக்கே அதிக அதிகாரம் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக கவர்னர் கிரண் பேடி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு 30-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.
    புதுடெல்லி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கில், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தும், யூனியன் பிரதேசங்களில் உள்ள கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிகளின் அதிகார வரம்பை மீறி செயல்பட முடியாது என முன்னர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது.



    இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஜூன் 6-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அலுவல்கள் தொடர்பாக முடிவெடுக்கும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இருந்த கவர்னருக்கான அதிகாரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் முதல் விசாரணை வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
    புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கிரண்பேடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது.

    கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுவையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த 11-ந்தேதி முதல் புதுவையில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டது.

    ஹெல்மெட் அணியாத வர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வழக்கு பதிவில் காட்டும் ஆர்வத்தை ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காட்ட வேண்டும். அதன்பிறகு ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தலாம் என கூறினார்.

    இருப்பினும் காவல்துறை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் வாகன எண்களை குறித்துக்கொண்டனர். இவர்கள் மீது வழக்குபதிவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னருக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் தளர்வு ஏற்பட்டது. தற்போது கவர்னர் மீண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை புதுவையில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என வாட்ஸ்அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுப்ரீம்கோர்ட் சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு மூலம் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனி குமாருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், இருசக்கர ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பாக கேட்கப்பட்ட அறிக்கையை இதுவரை ஏன் அனுப்பவில்லை? என விளக்கமும் கேட்டுள்ளது. இதனால் புதுவையில் மீண்டும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. #Kiranbedi
    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சேர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #kiranbedi #Congress #Narayanasamy
    புதுச்சேரி:

    காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், விஜயவேணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தை கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், அமைப்பு செயலாளர் அமுதவன், ம.தி.மு.க. புதுவை மாநில அமைப்பாளர் கபிரியேல், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது, புதிய நீதிக்கட்சி பொன்னுரங்கம், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பது குறித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றாத கவர்னர் கிரண் பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்துக்கு பின் மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் மாளிகை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    கவர்னரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (நேற்று) முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

    ஆனால், அவர் முதியோர் உதவித் தொகை தவிர, மற்ற கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான பதிலை அளிக்கவில்லை.

    எனவே, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போராட்டத்தை தொகுதி வாரியாகவும், ஒவ்வொரு கிராமங்களில் தெருமுனை பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வது தொடர்பான யுக்திகளை கையாளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. கட்சி தலைவர் அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம். என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமாகவும் எண்ணுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #kiranbedi #Congress #Narayanasamy
    ‘அரசை செயல்படவிடாமல் ரங்கசாமியும் கிரண்பேடியும் சேர்ந்து சதி செய்கின்றனர்’ என்று நாராயணசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். #Narayanasamy #GovernorKiranbedi
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் புதுவை கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் என விடிய, விடிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

    கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ரோட்டிலேயே உணவு சாப்பிட்டு இரவு சாலையிலேயே தூங்குகிறார்கள்.

    போராட்டத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-



    கவர்னர் கிரண்பேடி பதவியேற்ற நாள்முதலே மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கவர்னர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராட்டம் பற்றி கவலைப்படாமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

    மோடியின் தம்பியான எந்த பிரச்சினைகளிலும் வாய் திறக்காத ரங்கசாமியும், கிரண்பேடியும் சேர்ந்து கொண்டு இந்த அரசை செயல்படவிடாமல் சதி செய்து வருகின்றனர். இவர்கள் யார்? என்பதை இப்போது மக்கள் தெரிந்துகொண்டுவிட்டனர்.

    எங்களது நியாயமான போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர். டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கவர்னர் கிரண்பேடி இங்கு வந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கிறார். இனிமேல் ஒரு நிமிடம் கூட அவர் கவர்னராக நீடிக்கக்கூடாது.

    இதுதொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Narayanasamy #GovernorKiranbedi
    காரைக்காலில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். #DMK #Congress #KiranBedi
    காரைக்கால்:

    புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமுல்படுத்துவதாக தன்னிச்சையாக அறிவித்தார். இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நேற்று இரவு கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வதுநாளாகவும் போராட்டம் நடைபெற்றது.

    கவர்னர் கிரண்பேடியை கண்டித்து காரைக்கால் கலெக்டர் அலுவலகம் அருகே மாதாகோவில் வீதியில் இன்று காலை 11 மணி அளவில் தி.மு.க.- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அவர்கள் முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிவதுபோல் மண்சட்டி அணிந்து கண்டன கோ‌ஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து அவர்கள் மறியல் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் அனுமதிக்காததால் அவர்கள் அதே இடத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது முன்னாள் அமைச்சர் நாஜிம் பேசியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி மக்களையும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை ஆட்டிபடைத்து வருகிறார். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் ஆளுங்கட்சியுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடாது.

    மேலும் நடுரோட்டில் போலீஸ்காரர்போல் இறங்கி மக்களை அச்சுறுத்தி வருகிறார். மத்திய அரசு கொடுத்த வேலையை கவர்னர் கிரண்பேடி செய்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. இதேநிலை நீடித்தால் கவர்னருக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழும் நிலை உறுவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Congress #KiranBedi
    புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நடத்தி வரும் தர்ணா போராட்டம் நீடிக்கும் நிலையில், ஆளுநர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அரசுத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் கவர்னர் தடுப்பதாகவும், இதனால் அரசுப் பணிகள் முடங்கியிருப்பதாகவும் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டது, அரசியலில் கடும் கொந்தளிப்பை  ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் இந்த உத்தரவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.

    ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால் 2 நாட்களில் 30 ஆயிரம் வாகன எண்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வினரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.




    ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அறிந்த முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் ஆளுநர் மாளிகை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2வது நாளாக முதலமைச்சரின் தர்ணா போராட்டம் நீடிக்கிறது. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் தொடரும் என நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், இன்று காலை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த கிரண்பேடி, வெளியே சென்றார். அவர் டெல்லி புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். #KiranBedi
    கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதுச்சேரியில் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். #Puducherry #Narayanasamy #KiranBedi
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பேடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.

    இதனால் இலவச அரிசி, தீபாவளி பொருட்கள், பொங்கல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியவில்லை. இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி இலவச பொருட்களை அனைத்து தரப்பினருக்கும் தர முடியாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தர முடியும் என்று கூறி முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்களிடம் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் கவர்னர் கிரண்பேடி, 2 சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.



    மேலும் இருசக்கர வாகனத்தில் சிக்குபவர்களில் பலர் உயிரிழப்பதை தவிர்க்க கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வினரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

    இந்த நிலையில் மாகி சென்றிருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை புதுவை திரும்பினார். அவர் சட்டசபை வளாகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து வந்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் கருப்பு துண்டும், அமைச்சர் கமலக்கண்ணன் கருப்பு சட்டையும் அணிந்திருந்தனர்.



    பின்னர் அவர்கள் மதியம் 1.30 மணியளவில் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர். அவர்களுடன் காங்கிரஸ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் கலந்து கொண்டனர். இதற்கிடையே சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் மாளிகையை சுற்றி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் செய்தி காட்டுத்தீ போல பரவியது. எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கவர்னர் மாளிகை முன்பு குவியத் தொடங்கினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே தி.மு.க.வினர் பாரதி பூங்காவின் உள்ளே சென்று கவர்னர் மாளிகை எதிரே உள்ள கேட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் கவர்னரின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.

     

    இதற்கிடையே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கவர்னர் மாளிகை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கினர். அந்த பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள், “கவர்னரே வெளியே போ, மோடியே வெளியே போ. இது எங்கள் ஊர், எங்கள் மண், எங்களை ஆள நீ யார்?” என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும் போலீசாரின் தடுப்பை மீறி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல முயற்சி செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் திடீரென நூதன போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சங்கு ஊதியும், மேளம் அடித்த படியும் கவர்னர் மாளிகையை சுற்றி வந்து போராட்டம் நடத்தினர். மேலும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். 

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் போராட்டத்தின் காரணமாக நேற்று கவர்னர் மாளிகை போராட்ட களமாக மாறியது.

    ஆளுநர் மாளிகை, தொடர்ந்து இரண்டாவது நாளாக முற்றுகையிடப்பட்டுள்ளதால், வெளியே செல்ல முடியவில்லை என கிரண்பேடி கூறியிருந்தார். இதையடுத்து, சென்னை, நெய்வேலியிலிருந்து புதுச்சேரிக்கு அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்புப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் தடுக்கும் வகையில், தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. #Puducherry #Narayanasamy #KiranBedi 

    எம்.எல்.ஏ. பேசியபோது மைக்கை துண்டித்த கவர்னர் கிரண்பேடி பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #kiranbedi

    புதுச்சேரி:

    சென்னை விமான நிலையத்தில் புதுவை மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் மழை புயல் வெள்ளம் வந்ததால் மக்களை பாதுகாக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றவும் சகஜ வாழ்க்கை பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. பேரிடர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் செயல்பட கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத்துறை, போலீஸ் இணைந்து செயல் படுவார்கள். உள்ளாட்சி துறையினர் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுப்பட வேண்டும். 24 மணி நேரமும் அதிகாரிகள் பணியில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். 7-ந்தேதி 25 செ.மீ. மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் புதுவை அதிகாரிகளுடன் பேசி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன் திட்டத்தை அறிவித்தது. தமிழகத்தில் 2 இடங்களிலும், புதுவை- காரைக்கால் பகுதியிலும் எடுக்க அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதால் காரைக்கால் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் சிதம்பரம், நாகப்பட்டினம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளன. இதனால் தமிழகத்திற்கு எந்தவிதமான பயனும் இல்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு தமிழகத்தில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி மீது வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அப்பகுதி மக்களை அழைத்து பேசி அவர்களது கருத்துக்களை கேட்டு ஒப்புதலுடன் செய்து இருக்க வேண்டும். எந்தவொரு திட்டத்தையும் மக்கள் மீது திணிக்க கூடாது.

    புதுவையில் திறந்த கழிப்பிடம் இல்லாத மாநிலம் என்று அறிவிக்கும் விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசும்போது கவர்னர் ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. பேசுவதை நிறுத்துமாறு சொல்லி மைக்கை அணைத்தால் அன்பழகன் ஆத்திரப்பட்டு பேசியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பற்றி பேசும்போது கவர்னர் வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். அவர் பேசியபின் பதிலளித்திருக்கலாம். மைக்கை அணைக்க கவர்னர் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    ஆனாலும் மேடையில் அமைச்சர் நமச்சிவாயத்திடம் சட்டமன்ற உறுப்பினர் தவறாக நடந்து கொண்டதையும் ஏற்க முடியாது. இது சம்பந்தமாக விசாரித்து என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். பொது இடங்களில் நடக்கும் விழாக்களில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

    சட்டமன்ற உறுப்பினருக்கு பேச உரிமை உண்டு. கவர்னர் தனது அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும். பேசகூடாது என்று மைக்கை அணைக்க கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது.

    ஒரு உறுப்பினர் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசியிருக்க வேண்டும். அதிகமாக பேச நேரம் தந்திருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் உரிமையை யாரும் பறிக்க கூடாது. அதுப்போல் அமைச்சரின் மதிப்பை உறுப்பினர் குறைக்க கூடாது.

    சமுதாயத்தில் அவரவர் தங்கள் அதிகாரத்துக் குட்பட்டு செயல்பட்டால் எந்த பிரச்சனையும் வராது. பொது விழாக்களில் கவர்னர் தொடர்ந்து அதிகார எல்லையை மீறி செயல் படுகிறார். அதிகாரமில்லாத இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து தன்னிச்சையாக உத்தரவிடுவது. அமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகளை தனியாக அழைத்து கூட்டம் போட்டு பேசுவது. கவர்னர் அதிகார எல்லை மீறல் பற்றி பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் சொல்லியிருக்கிறேன்.

    புதுவையில் காங்கிரஸ் அரசு இருப்பதால் தொல்லை தருவதற்காக இந்தம்மாவை அனுப்பி இருக்கிறார்கள். இவர் கவர்னர் பதவிக்கு தகுதி இல்லாதவர். அவரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமரிடம் சொல்லியிருக்கிறேன். இதில் பிரதமர் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.

    புதுவை மக்களுக்கு அவரால் எந்த பலனும் கிடையாது. எல்லா மக்களையும் துன்புறுத்தும் வேலையை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை. ஒரு சில அதிகாரிகள் சொல்வதை கேட்டுக் கொண்டு நடக்கிறார்.


    புதுவை சின்ன அமைதியான மாநிலம். மக்கள் அமைதியும் வளர்ச்சியையும் விரும்புகிறார்கள். அதற்கான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அந்த திட்டங்களை நிறைவேற்றும் போது முட்டுக்கட்டையை தான் போடுகிறார். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றும் எண்ணமே கிடையாது.

    விளம்பரம் வேண்டும், செய்திகளில் பெயர் வர வேண்டும், பிரதமருக்கு டுவிட்டரில் தகவல் அனுப்புவது மட்டும் தான் கவர்னர் வேலையாக இருக்கிறார்.

    சட்டமன்றம் இருக்க கூடிய யூனியன் பிரதேசங்களில் அன்றாட செயல்பாடு நிர்வாகத்தை நடத்த அந்தந்த துறை அமைச்சருக்கும், முதல்-அமைச்சருக்கும் அதிகாரம் உண்டு. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரமும் கிடையாது. தன்னிச்சையாக எந்தவொரு உத்தரவும் போட முடியாது.

    கவர்னர் மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளை விக்க கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பையும் மக்களையும் கவர்னர் அவமதிக்கிறார்.

    2 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தை பற்றி தெரியாமல் அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு அரசின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கிறார் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #narayanasamy #kiranbedi

    நிதி விவகாரத்தில் புதுவை முதல்-அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால், கவர்னர் கிரண்பேடியின் நிதி அதிகாரம் பறிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.#GovernorKiranBedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு வகையில் நெருக்கடி அளித்து வருகிறார்.

    திட்டங்களில் நிதி தொடர்பான கேள்வி எழுப்பி கோப்புகளை திருப்பி அனுப்பி வருகிறார். இதனால் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சமீபத்தில் வாரியம், கழகம், நிறுவனம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதிலும் கவர்னர் தலையிட்டார்.

    வழக்கமாக பட்ஜெட்டில் இவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த நிதி அவற்றுக்கு சென்றுவிடும். இதுகுறித்தும் கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளதால் அரசு நிறுவன, கழக, வாரிய ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ஏற்கனவே கவர்னருக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. தற்போது திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளது.


    எனவே முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அமைச்சரவைக்கும் கூடுதலான நிதி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதன்படி புதுவை அரசு செயலர்களுக்கு ரூ.2 கோடிக்கு கூடுதலாகவும், நிதித்துறைக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.5 கோடி வரையிலும், நிதி மந்திரிக்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரையிலும், அமைச்சரவை பரிந்துரை செய்யும் திட்டங்களுக்கு நிதி நிலைக்குழுவுக்கு ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடி வரையிலும், அமைச்சரவைக்கு ரூ.100 கோடியில் இருந்து திட்டங்களுக்கான மொத்த செலவு வரையிலும் நிதி அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயண சாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். டெண்டர் வழங்குவதற்கும் அமைச்சரவைக்கும், நிதி மந்திரி ஆகியோருக்கும் கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

    இந்த நிலையத்தில் தற்போது மத்திய உள்துறையின் சார்பு செயலர் சஞ்சய்குமார் புதுவை தலைமை செயலாளர் அஸ்வினி குமாருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் புதுவை முதல்-அமைச்சர் அனுப்பிய கடிதத்தை முழுமையாக பரிசீலனை செய்தோம். இதில் முதல்-அமைச்சர் கூடுதலாக கோரியுள்ள நிதி அதிகாரம் மாநில அரசை சுமூகமாக நடத்த அவசியம் தேவை என கருதுகிறோம்.

    எனவே கவர்னரின் நிதி அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பிரித்து பரவலாக்குவதும் அவசியம். எனவே முதல்-அமைச்சர் கோரியுள்ள அந்த நிதி அதிகாரத்தை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து தலைமை செயலாளர் இந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்து ஒரு கோப்பாக தயாரித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பவுள்ளார்.

    இதுகுறித்து புதுவை மாநில அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதத்தை தலைமை செயலாளர் அஸ்வினி குமார், கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி வைப்பார். மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் என்பதால் கவர்னர் கிரண்பேடி கண்டிப்பாக நிதி விவகாரங்களில் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.

    இதன் மூலம் நிதி விவகாரத்தில் கவர்னர் இதுவரையில் இருந்து வந்த அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதாகவே கருத வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #PuducherryGovernor #KiranBedi #GovernorKiranBedi
    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பானது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார். #SabarimalaVerdict #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதிகளில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அங்குள்ள கடைக்காரர்களுக்கு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் குப்பை கூடை வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு கடைக்காரர்களுக்கு குப்பை கூடைகளை வழங்கினார்.

    இதில், சிவா எம்.எல்.ஏ., மாநில வணிகர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் சிவசங்கர் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-



    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நூற்றாண்டு காலமாக மனிதர்களுக்குள் இருந்த தவறான பிரிவினை நீக்கப்பட்டு உள்ளது.

    ஆண், பெண் இருபாலருக்கு இடையே பாகுபாடு இருக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பானது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

    மேலும் தகாத உறவு குற்றம் அல்ல என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் ஆண்-பெண் இருவருக்கும் சமஉரிமை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SabarimalaVerdict #Kiranbedi
    தேசிய மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை கவர்னர் கிரண்பேடி வழங்கினார். #KiranBedi #AyushmanBharat #PMModi

    புதுச்சேரி:

    உலகில் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக “ஆயுஷ்மான் பாரத்” என்னும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுவை தலைமை செயலகத்தில் காப்பீட்டு திட்ட தொடக்க விழா நடந்தது.

    கவர்னர் கிரண்பேடி திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். தலைமை செயலாளர் அஸ்வினி குமார், சுகாதார துறை செயலாளர் கந்தவேலு, இயக்குனர் ராமன், அரசு மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டு தொகை செலுத்தும். மத்திய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு மீதி தொகையையும் ஏற்கும்.

    ஏழை குடும்பத்தினர் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். இது முற்றிலும் பணமற்ற திட்டமாகும். இதய அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டென்டிங் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் பெற முடியும்.

    கடந்த 2013-ம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் ஜாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதுவையில் 1 லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #KiranBedi #AyushmanBharat #PMModi

    ×