என் மலர்

    நீங்கள் தேடியது "road blocked"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுற்றுலாபயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்
    • யானைகள் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வதை காண முடிகிறது.

    ஊட்டி,

    வனப்பகுதியில் தற்போது கடும் வெயில் சுட்டெரிப்பதால் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகின்றன.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளை யம் சாலையில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வதை காண முடிகிறது. நேற்றும் இதேபோல யானைகள் கூட்டமாக ரோட்டை கடக்க முயன்றன.

    இதனால் இருபுறமும் வா கனங்கள் நிறுத்தப்பட்டன. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன. ஆனால் யானைகள் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன.

    அதனை கடப்பதாக தெரியவில்லை. இதுபற்றி அறிந்த வனச்சரகர் சசிக்குமார் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் யானை யை காட்டுப்ப குதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டேரி பகுதி வழியாக யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகே வாகனங்கள் அனு மதிக்கப்பட்டன. இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

    சமவெளி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டுயானைகள் முகா மிட்டுள்ளன. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் சாலை கடந்து மலை ரயில் பாதையில் முகாமிடுகிறது. இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட தால் காட்டு யானைகள் காட்டேரி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது உடனடியாக குன்னூர் வனசரகர் சசிக்குமார் தலைமையில் வந்த வனத்துறையினர் காட்டுயானையை அருகேயுள்ள வனப்பகுதிக்கு விரட்டினர் இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • சம்பந்தப்பட்ட இடத்தில் தனி நபர்கள் இரவோடு இரவாக வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை தெற்கு புற வழிச்சாலை மேலப்பாளையம் குறிச்சி சந்திப்பு பகுதியில் 20 சென்ட் இடம் உள்ளது. இதனை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக தகவல் வந்தது.

    ஆக்கிரமிப்பு

    இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்கள் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என கூறி இருந்த னர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    சாலை மறியல்

    இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட இடத்தில் தனி நபர்கள் வேலி அமைத்ததாக கூறப்படு கிறது. இதை அறிந்த அப்பகுதியினர் தெற்கு புறவழிச்சாலையில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து சம்பந்தப் பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அது கோவிலுக்கு சொந்த மான இடம் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வேலி அமைத்த வர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என துணை கமிஷனர் சீனி வாசன் உறுதி அளித்தார்.இதைத்தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கண்ணாடி உடைப்பு

    இதற்கிடையே மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 லோடு ஆட்டோக்களின் கண்ணாடி கள் உடைக்கப்பட்டிருந்தது.

    இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடைத் தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் வடமதுரையிலிருந்து ஆனைகட்டி செல்லும் சாலையை மறித்து அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இந்த நகருக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் வடமதுரையிலிருந்து ஆனைகட்டி செல்லும் சாலையை மறித்து அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் கார்த்திகேசுவரி சுந்தர்ராஜ், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஈஸ்வரி மற்றும் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர் முறையாக விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள், உடனடியாக தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 50). விவசாயியான இவரது மனைவி லட்சுமி(48). இவர்களுக்கு பிரகாஷ்(20) என்ற மகனும், 23 மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்ட சகோதரிகள் இருவரும் கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர், உறவினர்கள், தோழிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சகோதரர் பிரகாஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாயமான சகோதரிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும் உண்மையிலேயே அவர்கள் இருவரும் காணாமல் போய் விட்டனரா? அல்லது வேறு எவரேனும் கடத்தி இருப்பார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் காணாமல் போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், வசந்த், வெங்கடேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் போலீசார் கூறுகையில், காணாமல் போன சகோதரிகள் 2 பேரையும் தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் அவர்களை கண்டுப்பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

    இதனால் பல முறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் ஊராட்சி அலுவலக அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவர்த்ததை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஸ்ரீகாளிகாபுரம் கிராமம் உள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இங்கு உள்ளன. இவர்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ் துளை கிணற்றில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த 4 மாதமாக ஆழ் துளை கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ காளிகாபுரம் பெண்கள் சோளிங்கர்-வீரமங்கலம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலுக்கான காரணம் குறித்து பெண்கள் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களாக இங்கு குடிநீர் கிடைக்க வில்லை. பஞ்சாயத்து, தாசில்தார் அலுவலகங்களில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குடியாத்தம் அருகே அரசு பஸ் சரியாக இயக்காமல் தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் இருந்து பரதராமிக்கு காலை நேரங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பஸ்பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தனியார் பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

    இன்று காலை குடியாத்தம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர் கீழே விழுந்து காயமடைந்தார்.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கணவாய் மோட்டூரில் சாலை மறியல் செய்தனர்.

    அரசு பஸ்களை இயக்காமல் தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உதவி செய்வதாக குற்றம் சாட்டினர்.

    பரதராமி போலீசார் அங்கு சென்று அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காரைக்காலில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். #DMK #Congress #KiranBedi
    காரைக்கால்:

    புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமுல்படுத்துவதாக தன்னிச்சையாக அறிவித்தார். இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நேற்று இரவு கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வதுநாளாகவும் போராட்டம் நடைபெற்றது.

    கவர்னர் கிரண்பேடியை கண்டித்து காரைக்கால் கலெக்டர் அலுவலகம் அருகே மாதாகோவில் வீதியில் இன்று காலை 11 மணி அளவில் தி.மு.க.- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அவர்கள் முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிவதுபோல் மண்சட்டி அணிந்து கண்டன கோ‌ஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து அவர்கள் மறியல் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் அனுமதிக்காததால் அவர்கள் அதே இடத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது முன்னாள் அமைச்சர் நாஜிம் பேசியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி மக்களையும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை ஆட்டிபடைத்து வருகிறார். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் ஆளுங்கட்சியுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடாது.

    மேலும் நடுரோட்டில் போலீஸ்காரர்போல் இறங்கி மக்களை அச்சுறுத்தி வருகிறார். மத்திய அரசு கொடுத்த வேலையை கவர்னர் கிரண்பேடி செய்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. இதேநிலை நீடித்தால் கவர்னருக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழும் நிலை உறுவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Congress #KiranBedi
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குளித்தலையில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது.
    குளித்தலை:

    படித்த இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேலை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குளித்தலையில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு குளித்தலை ஒன்றிய தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குளித்தலை போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெமிலி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    நெமிலி அருகே உள்ள பத்திபுத்தூர் கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக குடிநீர் சப்ளை செய்யவில்லை.

    இது தொடர்பாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில்

    ஊராட்சி செயலாளர் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் ஆகியோருக்கு சம்பளம் வழங்காததால் குடிநீர் சப்ளை செய்யவில்லை எனக் கூறப்பட்டது.

    இது தொடர்பாக நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதற்கு பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை பத்திபுத்தூரில் உள்ள நெமிலி-அரக்கோணம் சாலையில் மறியல் செய்தனர். பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராம லிங்கம், அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print