search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transport officers"

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு வருகிறது.
    • காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    ஈரோடு, 

    ஈரோட்டில் அவ்வப்போது வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் புகாரை தொடர்ந்து பஸ்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன தணிக்கை செய்யப்பட்டது.

    சுற்றுச்சூழல் விஞ்ஞானி தனபால், கருணாசாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார், கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர் 105 அரசு மற்றும் தனியார் பஸ்களை சோதனை யிட்டனர்.

    அதில் 40 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர்ஹா ரன்கள்) கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அனைத்து பஸ் டிரைவர்களுக்கும் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என அறிவு றுத்தப்பட்டது. மீண்டும் காற்று ஒலிப்பான் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    குடியாத்தம் அருகே அரசு பஸ் சரியாக இயக்காமல் தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் இருந்து பரதராமிக்கு காலை நேரங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பஸ்பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தனியார் பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

    இன்று காலை குடியாத்தம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர் கீழே விழுந்து காயமடைந்தார்.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கணவாய் மோட்டூரில் சாலை மறியல் செய்தனர்.

    அரசு பஸ்களை இயக்காமல் தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உதவி செய்வதாக குற்றம் சாட்டினர்.

    பரதராமி போலீசார் அங்கு சென்று அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    ராஜபாளையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி அந்த ஆட்டோ, வேனை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் விதிகளை மீறுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    காந்தி சிலை, ரெயில்வே பீடர் சாலை மற்றும் மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும், பள்ளி கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், தனியார் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் சோதனை நடைபெற்றது.

    50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நடைபெற்ற சோதனையில், தகுதி சான்று இல்லாமல் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ மற்றும் தனியார் சுற்றுலா வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 6 ஆட்டோக்கள் மற்றும் புகை சான்று, முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் விதிகளை மீறி இயக்கிய 7 சுற்றுலா வாகனங்கள் மற்றும் வேன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    ×