search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
    X

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஸ்ரீகாளிகாபுரம் கிராமம் உள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இங்கு உள்ளன. இவர்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ் துளை கிணற்றில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த 4 மாதமாக ஆழ் துளை கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ காளிகாபுரம் பெண்கள் சோளிங்கர்-வீரமங்கலம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலுக்கான காரணம் குறித்து பெண்கள் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களாக இங்கு குடிநீர் கிடைக்க வில்லை. பஞ்சாயத்து, தாசில்தார் அலுவலகங்களில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×