search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் இடம் ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    கோவில் இடம் ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    • கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • சம்பந்தப்பட்ட இடத்தில் தனி நபர்கள் இரவோடு இரவாக வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை தெற்கு புற வழிச்சாலை மேலப்பாளையம் குறிச்சி சந்திப்பு பகுதியில் 20 சென்ட் இடம் உள்ளது. இதனை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக தகவல் வந்தது.

    ஆக்கிரமிப்பு

    இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்கள் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என கூறி இருந்த னர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    சாலை மறியல்

    இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட இடத்தில் தனி நபர்கள் வேலி அமைத்ததாக கூறப்படு கிறது. இதை அறிந்த அப்பகுதியினர் தெற்கு புறவழிச்சாலையில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து சம்பந்தப் பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அது கோவிலுக்கு சொந்த மான இடம் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வேலி அமைத்த வர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என துணை கமிஷனர் சீனி வாசன் உறுதி அளித்தார்.இதைத்தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கண்ணாடி உடைப்பு

    இதற்கிடையே மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 லோடு ஆட்டோக்களின் கண்ணாடி கள் உடைக்கப்பட்டிருந்தது.

    இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடைத் தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×