என் மலர்
நீங்கள் தேடியது "Egmore railway station"
- கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
- முன்பதிவில்லா டிக்கெட் வினியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது.
சென்னை:
சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர், சென்ட்ரலுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் காலை, இரவு என எப்போதும் இந்த ரெயில் நிலையங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
இங்கு பயணிகள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய எழும்பூரில் 8 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தது. அதேபோல் சென்ட்ரல் நிலையத்தில் 10 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டன. இதன் மூலம் பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு கவுண்ட்டர்கள் மூடப்பட்டது. தானியங்கி டிக்கெட் எந்திரம், செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் சில கவுண்டர்கள் மூடப்பட்டது.
கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதே போல முன்பதிவில்லா டிக்கெட் வினியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது.
இதனால் டிக்கெட் எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. ரெயிலை தவற விடும் நிலை உருவாகிறது. மேலும் முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும் பல பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:-
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
ரெயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க கூட்டம் எப்போதும் அலைமோதும். அவசர பயணமாக செல்லும் பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து அதிகஅளவில் பயணம் செய்வார்கள்.
தற்போது முன்பதிவில்லா டிக்கெட் மைய கவுண்டர்கள் குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பெரும் சிரமப்படுகிறார்கள்.
டிக்கெட் வாங்க வரிசையில் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட் கவுண்டர்களில் விரைவில் ஊழியர்களை கூடுதலாக உடனடியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் முன்பதிவு டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகள் எளிதில் பெற முடியும்.
தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் இருந்தாலும் அதில் ஒரே நேரத்தில் டிக்கெட் பெற வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதியை குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் பெறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ரெயில் டிக்கெட்டை பயணிகள் சிரமம் இல்லாமல் பெற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
அடையாறில் தங்கி இருந்த அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனி ரெயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.
திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயிலில் அவர் தடா சென்று பின்னர் மீண்டும் தனி ரெயிலில் சென்னை திரும்ப பயணத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. அவர் பயணம் செய்வதற்காக தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் தனி ரெயில் திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.
ஆனால் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரசும், திருவனந்தபுரத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரசும் எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 7 மணிக்கு தாம்பரம் நிலையம் வந்து சேர்ந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட சிக்னல் கொடுக்கப்படவில்லை.
வெங்கையாநாயுடு செல்ல வேண்டிய தனி ரெயில் புறப்பட தாமதம் ஆனதால் முத்துநகரும், அதனை தொடர்ந்து வந்த அனந்தபுரி எக்ஸ்பிரசும் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டன. தனி ரெயில் எழும்பூர், சென்ட்ரல் வழியாக செல்ல வேண்டும் என்பதால் அதே வழித்தடத்தில்தான் முத்துநகரும், அனந்தபுரியும் வர வேண்டியது இருந்தது. இதனால் 2 ரெயில்களும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டன.
மேலும் எழும்பூர் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டால் அந்த வழியாக தனி ரெயில் செல்ல வழி கிடையாது என்பதால் தென் மாவட்ட ரெயில்கள் இரண்டையும் தாம்பரத்தில் நிறுத்தி விட்டனர்.
துணை ஜனாதிபதி பயணம் தாமதம் இல்லாமல் தொடங்கி இருக்குமானால் முத்துநகர், அனந்தபுரி ரெயில்கள் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. ஆனால் அவர் செல்லக்கூடிய தனி ரெயில் 7.50 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது. அதனால் தாம்பரத்தில் நிறுத்தப்பட்ட 2 ரெயில்களிலும் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
சிலர் மின்சார ரெயில்களில் ஏறி வீட்டிற்கு சென்றனர். வயதானவர்கள், குழந்தையுடன் வந்தவர்கள் மட்டுமே அந்த ரெயில்களில் காத்து கிடந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் மாயவன்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் கூறினார்.

இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியாததால் எழும்பூர் ரெயில்வே போலீசில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
முகிலன் கடத்தப்பட்டதாக அச்சப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து துன்புறுத்தலாம் என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
எனவே முகிலனை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின்போதும் இதுபோல் முகிலன், சதீஷ் ஆகியோர் திடீரென மாயமானார்கள். பின்னர் 3 நாட்கள் கழித்து முகிலனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். #SterlitePlant #Mukilan
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது. டி.எம்.எஸ். -வண்ணாரப்பேட்டை வரை விரைவில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.
தற்போது மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது.
இந்த நிலையில் மீனப்பாக்கத்தில் உள்ள உள்நாடு, வெளிநாடு விமான நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரலில் உள்ள எக்ஸ்பிரஸ் நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகாலையில் வருகின்றனர். இந்த பயணிகளை கவரும் வகையில் மெட்ரோ ரெயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விமானம் ரெயில் நிலைய பயணிகள் வசதிக்காக விரைவில் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நீட்டிக்கப்பட உள்ளது.
இது குறித்து விரைவில் முறைப்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது. #MetroTrain
சென்னை:
தமிழக விவசாயிகளில் ஒரு பிரிவினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தால் டெல்லி போலீசார் திணறிப் போனார்கள். பல நாட்களாக நீடித்த இந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் பங்கேற்றன.
டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.
பின்னர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட் பாரத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இருப்பினும் விவசாயிகள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கமலை வரவேற்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். விவசாயிகளிடம் போராட்டம் குறித்து கமல் கேட்டறிந்தார்.
பின்னர் விவசாயிக்ள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
நீங்கள் கேட்டிருக்கும் கோரிக்கைகள் நியாயமனது தான் அரசால் நிறைவேற்ற முடிந்ததுதான். நீங்கள் அனைவரும் இதேபோல் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையால் தான் டெல்லியில் இவ்வளவு கூட்டத்தை கூட்ட முடிந்தது.
உங்கள் மொழி விவசாயம். எங்களால் முடிந்தவரை உங்களோடு தோள் கொடுத்து உங்கள் கோரிக்கைகளுக்காக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர வழியே இல்லை. புயலும், வெள்ளமும் மட்டுமே தேசிய பேரிடர் அல்ல. பஞ்சமும் தேசிய பேரிடர்தான்.

நாங்களும் உங்கள் குடும்பம்தான். உங்கள் தொழில் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் கையால் வாங்கி சாப்பிடுகிறோம். அதற்கு மரியாதை செலுத்தத்தான் இங்கு வந்தேன். அரசு விவசாயிகளின் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்போது கெஞ்சி கேட்கிறோம். எப்போதும் இப்படியே நிலைமை இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் நாடு தழுவிய அளவில் விவசாய கடன்களை ரத்து செய்வது, விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிப்பது, உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அறவழி போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு உண்டு.
நேற்று வரை கஜா புயல் பாதித்த பகுதிகளில் தான் இருந்தேன். எங்கள் குரல் எதிர்க் கட்சிகளின் குரல் அல்ல. மக்களின் குரலாக பார்க்க வேண்டும். 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை. குடி தண்ணீர் வசதி இல்லை. மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
இன்னும் ஒரு கிராம நிர்வாக அதிகாரிகள் கூட போய் பார்க்கவில்லை. நாங்கள் போன பல இடங்களில் மக்கள் ஆத்திரத்தில் கண்ணீர் அஞ்சலி என்று வைத்திருந்ததை பார்த்தோம்.
நாங்கள் அரசை விமர்சிக்க வில்லை. பணிகளை துரிதப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. அதைத்தான் சொல்கிறோம். இதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். சேத விவரங்களை கூட இருந்த இடத்தில் இருந்தே சேகரித்ததாகத்தான் நான் கருதுகிறேன். மத்திய அரசு இடைக்காக நிவாரணம் வழங்கி இருப்பதற்கு நன்றி.
விவசாயிகள் டெல்லியில் போராடிய விதம் தவறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது சரியல்ல. விவசாயிகள் பசியோடு இருக்கிறார்கள். பசிக்காக போராடுபவர்களும் இப்படித்தான் போராட வேண்டும், அப்படித்தான் போராட வேண்டும் என்று சொல்ல முடியாது.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் அவலங்களை நேரில் பார்த்து வந்தவன் நான். அங்குள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள். அதற்கான கால அவகாசம் இல்லை. உடனே தள்ளுபடி செய்வதுதான் நல்லது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதி முழுவதுமாக மீண்டு வருவதற்கு இன்னும் 7 ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகள் எழும்பூரில் இருந்து இன்று மதியம் செல்லக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் செல்வதற்கு முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் விவசாயிகள் தொடர்ந்து சில மணிநேரம் எழும்பூர் ரெயில் நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டி இருந்தது. அதுவரை போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டதால் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து அனைத்து விவசாயிகளையும் ஒரே ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். #ayyakannu #FarmerStruggle #KamalHassan
சென்னை:
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் இணைந்து டெல்லியில் 2 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பங்கேற்றனர்.
அவர்கள் போராட்டம் முடிந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அய்யாகண்ணு தலைமையில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட் பாரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ரெயிலில் திருச்சிக்கு செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர். அதில் பாதிபேருக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகி இருந்தது. மற்றவர்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆக வில்லை. அவர்களுக்கும் டிக்கெட் கன்பார்ம் செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினோம். டெல்லியில் நிர்வாணமாக ஓடியும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். நாங்கள் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தியதற்கு காரணம் இருக்கிறது.
விவசாய கடன்களை கட்ட முடியாமல் திணறிய விவசாயிகளின் வீடுகளுக்கு வங்கி அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தனர். வங்கி கடன்களை கட்டாத விவசாயிகளின் வீட்டு பெண்களை மானபங்கம் செய்ய வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் பேசினார்கள். அதனால்தான் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தினோம்.
நாங்கள் போராட்டம் நடத்தி 1 வருடம் ஆகிவிட்டது. ஆனால் எங்களின் போராட்டத்துக்கு மோடி செவி சாய்க்க வில்லை.
1 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது ஒரு மூலைக்கும் போதாது. விவசாயிகள் மேலும் மேலும் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
புயலால் சரிந்த தென்னை மரங்களுக்கு குறைவான இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்தி வழங்க வேண்டும். #FarmerStruggle #Delhifarmerprotest
சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் தண்டவாள பாயிண்ட் பராமரிப்பு பணி நள்ளிரவு முதல் நடைபெற்றது. இந்த பணியை அதிகாலைக்குள் முடிப்பதற்கு தொழில் நுட்ப பணியாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் அந்த பணி நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. பணியை முடிக்க நேரம் நீடித்ததால் எழும்பூர் நிலையத்திற்கு வரும் ரெயில்கள் உள்ளே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
சேலம் எக்ஸ்பிரஸ், பாண்டியன், மலைக்கோட்டை ஆகிய ரெயில்கள் வந்து சேர்ந்தன. அதன் பின்னர் வந்த தென்மாவட்ட ரெயில்கள் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. தண்டவாளத்தை பிரித்து ஒவ்வொரு பிளாட்பாரத்திற்கும் ரெயில்களை அனுப்பக் கூடிய ‘பாயிண்ட்’ சரி செய்யும் பணி முடிப்பதற்கு நேரம் அதிகமானதால் ரெயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கூடுவாஞ்சேரியிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் காட்டாங்கொளத்தூரிலும், ராமேஸ்வரம், பொதிகை, முத்துநகர், அனந்தபுரி ஆகிய ரெயில்கள் வழியிலும் நிறுத்தப்பட்டன.
ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்ட பின்னர் எப்போது புறப்படும், எதற்காக நிறுத்தப்பட்டது என்ற எந்த தகவலையும் நிர்வாகம் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து விட்டு மின்சார ரெயிலில் ஏறி தாம்பரம், எழும்பூருக்கு சென்றனர்.
நெல்லை எக்ஸ்பிரசில் 150 மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்தனர். அவர்களை அந்த ரெயிலில் வந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கி மின்சார ரெயிலில் ஏற்றி விட்டனர். தாம்பரம் ரெயில் நிலையத்திலும் அவர்களை பாதுகாப்பாக இறக்கி விட்டனர்.
இதற்கிடையில் பராமரிப்பு பணி விரைவாக முடிக்கப்பட்டு ரெயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டன. ஆனாலும் வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் எழும்பூர் வந்து சேர்ந்தன. இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். #EgmoreRailwayStation #TrainsDelayed
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் 2190 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பார்சலில் அனுப்பப்பட்டிருந்த இந்த இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது அது அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதனை தொடர்ந்து இறைச்சி அனைத்தையும் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.
எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பார்சல்களில் இருந்தவை தோல் உரிக்கப்பட்ட நாயின் தோற்றத்தில் நீண்ட வாலுடன் காணப்பட்டது. இதையடுத்து வெளி மாநிலத்தில் இருந்து நாய்களை அடித்து கொன்று அதனை பார்சலில் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.
இந்த நாய் இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் ஆடு மற்றும் மாட்டுக் கறியுடன் கலந்து சமைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
சென்னைவாசிகளை பொருத்தவரையில் பெரும்பாலானோர் வார இறுதி நாட்களில் அசைவ ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகவே வைத்துள்ளனர். குறிப்பாக மட்டன் பிரியாணியை ஓட்டல்களில் பலர் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் மாட்டுக் கறி உணவும் சென்னையில் விருப்ப உணவு போலவே ஆகிவிட்டது.
துரித உணவகங்களிலும், ஓட்டல்களிலும் மாலை நேரங்களில் மாட்டுக்கறியை (சில்லி பீப்) விரும்பி சாப்பிடுவர்கள் அதிகம். இதுபோன்ற அசைவ பிரியர்களுக்கு நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக இனி, அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்குதானோ? என்கிற எண்ணமும் மக்கள் மனதில் பரவலாக தோன்றி உள்ளது.
சென்னையில் நாய் இறைச்சி பிடிபட்டதாக வெளியான தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் பரபரப்பாகவே பரப்பப்பட்டு வருகிறது. இது பொது மக்கள் மத்தியில் ஓட்டல்களில் பரிமாறப்படுவது நாய்கறி தானோ? என்கிற சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. மட்டன் பிரியாணியில் தெரியாத அளவுக்கு நாய் கறி கலக்கப்படுவதாகவும், இதனால் அது வெளியில் தெரிய வாய்ப்பு இல்லை என்றும் பேசப்படுகிறது.

அதில் பொது மக்களின் பீதியை அடக்கும் வகையில் தகவல்கள் இருக்குமா? இல்லை நாய் இறைச்சி தான் என்று உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று வெளியாக உள்ள அறிக்கையில் அதற்கான விடை கிடைத்து விடும்.
இதற்கிடையே நாய்க்கறி தொடர்பாக சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுடன் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது. #DogMeat #DogMeatinChennai
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நோக்கி சென்ற சிர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர் வந்தது.
அந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை கண்டனர். அந்த பை குறித்து விசாரித்தபோது யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது அந்த பைக்குள் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கூறுகையில், “இந்த ஆண்டு(2018) இதுவரை ரூ.25 லட்சம் மதிப்பிலான 187 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கஞ்சா பையை கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மனைவி சுவர்ணலதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கி தனது மனைவியுடன் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இதையடுத்து, தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லைக்கு திரும்ப அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6-ந்தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருவரும் புறப்பட்டனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருக்கையில் (இரவு 7.40 மணி) சுவர்ணலதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் அலறி துடித்தார். இதனால் அவரது கணவர் செய்வதறியாது திகைத்தார்.
இதையடுத்து உடன் இருந்த சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ரெயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியின் உதவி மையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து உதவி மையத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தயாராக இருந்தனர். இரவு 7.55 மணிக்கு ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரை வந்தடைந்தது.
இதையடுத்து அங்கு தயாராக இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீசார் சுவர்ணலதா இருந்த ரெயில் பெட்டிக்கு விரைந்தனர்.
குழந்தை பிறக்க சில நொடிகளே இருந்த காரணத்தால், அந்த ரெயில் பெட்டியிலேயே சுவர்ணலதாவுக்கு பிரசவம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. எனவே அந்த ரெயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட உடனடி சிகிச்சை காரணமாக சில நிமிடங்களிலேயே சுவர்ணலதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் சக பயணிகள் உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர். பயணிகள் சிலர் தாங்கள் வைத்திருந்த இனிப்புகளை பிறருக்கு வழங்கினர்.
அதனை தொடர்ந்து தாயையும், சேயையும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பத்திரமாக ரெயில் பெட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் பயணிகள் அனைவரும் இசக்கி-சுவர்ணலதா தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளை கூறினர்.
அப்போது, தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவிய மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில் பாதுகாப்பு படையினருக்கு இசக்கி நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.
இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் சுவர்ணலதாவை ‘ஸ்டிரெச்சரில்’ வைத்து தூக்கி ரெயில் நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
சுவர்ணலதாவுக்கு பிரசவம் பார்த்ததன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு செல்லவேண்டிய ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. #EgmoreRailwayStation #Delivery #PregnantWoman
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அனூப், சரோஜ்குமார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது எழும்பூர் வந்த திருக்குறள் மற்றும் காச்சிகூடா எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பொது பெட்டிகளில் மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை தனிப்படையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 37 மூட்டைகளில் இருந்த 900 கிலோ ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை அண்ணாநகர் உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.