search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியிருப்புகள்"

    • அரசு சார்பில் ரூ.165 கோடி மதிப்பில் 1744 குடியிருப்புகள் வழங்கப்பட்டது.
    • முதல்-அமைச்சருக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

    மதுரை

    தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக பொருளா தாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கும் வகையில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டம் பொதுமக்க ளிடையே மிகுந்த வரவேற் பையும், பேராதரவையும் பெற்றுள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் ஒரு பொதுத்துறை நிறுவனமாக தொடங்கப் பட்டது.

    வெறும் குடிசை வீடு களை கான்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொடுப்பது மட்டும் இந்த வாரியத்தின் நோக்கம் கிடையாது. அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு, நல்ல வாழ்வியல் சூழல், நல்ல குடிநீர், மின்சாரம் தொடங்கி அனைத்து வகை யான வசதிகளும் கிடைக்கச் செய்வதும்தான். இந்த வாரி யத்தின் மூலம் இதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் உத்தரவின் படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர், "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதுப்பொழிவுடன் செய லாற்றி வருகிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பாக மதுரை மாவட்டத்தில் கருத்தப் புளியம்பட்டி, ஆத்திக்குளம், ராஜாக்கூர் என 3 திட்டப் பகுதிகளில் மொத்தம் ரூ.165.47 கோடி மதிப்பீட்டில் 1,744 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக மேலூர் நகராட்சிக்குட்பட்ட கருத்தப்புளியம்பட்டி திட்டப் பகுதியில் ரூ.84.20 கோடி மதிப்பீட்டில் 912 அடுக்குமாடி குடியிருப்பு களும், மதுரை மாநகராட்சிக் குட்பட்ட ஆத்திக்குளம் திட்டப்பகுதியில் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இராஜாக்கூர் திட்ட பகுதியில் ரூ.50.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 512 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கும்.

    இதில் கருத்தப்புளி யம்பட்டி திட்டப் பகுதியில் உள்ள ஒவ்வொரு குடியி ருப்பும் 400 சதுர அடி அள விலும், ஆத்திக்குளம் திட்டப்பகுயில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் 374 சதுர அடி அளவிலும், ராஜாக்கூர் திட்டப்பகுயில் உள்ள ஒவ்வொரு குடியி ருப்பும் 406.19 சதுர அடி அளவிலும் கட்டப்பட்டு உள்ளன.

    அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளிய லறை, மற்றும் கழிவறை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆத்திக்கு ளம் திட்டப் பகுதியில் உள்ள குடியி ருப்பில் வசிக்கும் மனோ கரன்- முத்து லட்சுமி கூறுகையில், நாங்கள் இரு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் கடந்த 20 வருடங்க ளாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருகிறேன். நாங்கள் குடியி ருந்து வந்த வீடு 10x10 என்ற அளவு முறையில் இருந்த தால் குழந்தைகளுடன் வசிப்பது மிகவும் சிரமமாக இருந்து வந்தது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருபவர்களும் பல்வேறு வசதிகளுடன் கூடிய வீட்டில் வாழ வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தந்துள்ளார்.

    இங்கு அனைத்து வசதி களும் உள்ளன. இதற்காக முதல்-அை அனைத்து அடுக்குமாடி குடியிருப்பு களிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமைய லறை, குளியலறை, மற்றும் கழிவறை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தினை செயல்ப டுத்திய முதலமைச்சருக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வசிக்கும் மக்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றனர்.

    ஆத்திக் குளம் திட்டப் பகுதியில் உள்ள குடி யிருப்பில் வசிக்கும் சரவணன் - ஜெய பாரதி தம்ப தியினர் கூறுகை யில், எங்களுக்கு 3 குழந்தை கள் உள்ளனர். நான் சலவை தொழில் செய்து வருகிறேன். நாங்கள் கடந்த 20 வருடங்களாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருகி றேன். நாங்கள் குடியிருந்த வீடுகள் பழுதடைந்து விட்ட தால், முதலமைச்சர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் சார்பாக அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி தந்துள்ளார். புதிதாக வழங்கப்பட்டு இந்த வீட்டில் போதிய இடவசதியோடு விசாலமாக உள்ளது. நமக்கென்று ஒரு புதிய வீடு என்று நினைக்கும்போது உள்ளூர மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

    • பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.
    • பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அருவங்காடு:

    குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது பாதிப்புகளும் அதிகரித்து உள்ளது.

    பர்லியாறு அருகே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள ஆண்டனி என்பவர் வீட்டின் மீது பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.

    அப்போது குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியில் வந்ததால் அனை வரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலை மையிலான வன குழுவினர் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர்.

    மேலும் மலைப்பாதையில் தொடர்மழை அவ்வப்போது வெயில் என கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதால் எந்த நேரத்திலும் மலைப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக சென்று வர வேண்டும் எனவும் மற்றும் மண் சரியும் அபாயம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்தும், குடியிருப்புகளில் மண் சுவர்கள் சாய்ந்தும் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்ததுடன் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதில் காந்திநகர் பகுதியில் மண் திட்டு சரிந்து விழுந்ததால் அங்குள்ள குடியிருப்பு அந்தரத்தில் தொங்கி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி சிதம்பரம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து இங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தவுடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    • திருவாடானை அருகே சமத்துவபுரத்தில் தொடக்கப்பள்ளி, குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சமத் துவபுரம் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையாக கழிவுநீர் மற்றும் வடிகால் கால்வாய் வசதிகள் அமைக்காததால் தற்போது பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக வீடுகளுக் குள்ளும் வீடுகளை சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் குடியிருக்க முடியாமல் அப்பகுதி மக் கள் பரிதவித்து வருகின்ற னர். மேலும் அங்குள்ள குழந்தைள் மற்றும் பெரிய வர்கள் ஏராளமானோர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். மேலும் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்துள்ளதால் மாணவர் கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் கண்துடைப் பிற்கு மட்டுமே வந்து பார் வையிட்டு செல்வதாகவும் எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி,2-வது வார்டு எவெரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக ரூ.20 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நிலத்தடி நீர் மாசு, தொற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதால் குப்பைகளை தரம்பிரிக்கும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நடைபெறும் இடம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர், ஜெகன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள், குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரியும் கடும்வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.
    • ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.

    சென்னை:

    பழமைவாய்ந்த எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    இந்த மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.

    இதையொட்டி முதல் கட்டமாக ரெயில் நிலையத்தை அளவீடு செய்து காந்தி இர்வின் சாலை அருகே உள்ள ரெயில்வே குடியிருப்புகள், பின்புறம் பூந்தமல்லி சாலையில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான குடியிருப்புகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து ரெயில்வே கட்டிட சிவில் என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:-

    மறுசீரமைப்பு பணிக்காக வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காந்தி இர்வின் சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 45 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி சாலையில் 120-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    அடுத்தகட்டமாக மற்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

    1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டரில் கட்டிடம் அமைய உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    பயணிகள் வருகை, புறப்பட்டு செல்வதற்கான தனி இடமும், நடை மேம்பாலம், காத்திருப்பு அறை, வாகன காப்பகங்கள், நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.

    ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும். மல்டி பிளக்ஸ் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தற்போதுள்ள ரெயில்வே பார்சல் பகுதி ரெயில்வே கட்டிடமாகவும் மாற்றப்படுகிறது. எதிர் காலங்களில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு கட்டிட பணிகள் நடந்து வருகிறது.

    இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் தடையின்றி பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்பட விமான நிலையத்தை போல அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது. இந்த பணிகள் 3 வருடத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து மறியல்.
    • கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை ஊராட்சி, கண்ணன்மேடு கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து பாமணி இ.சி.ஆர். சாலையில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோதி பாஸ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், பாமணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, கொக்கலாடி ஊராட்சி மன்ற தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கோபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.பி சுந்தர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மறியில் ஈடுப்பட்டோர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    காமராஜ் எம்.எல்.ஏ. சந்திப்பு

    இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார். இதில் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் டி.சி. சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×