search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்கப்பள்ளி-குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி
    X

    சமத்துவபுரம் பள்ளியில் தேங்கியிருக்கும் மழை நீர்.

    தொடக்கப்பள்ளி-குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

    • திருவாடானை அருகே சமத்துவபுரத்தில் தொடக்கப்பள்ளி, குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சமத் துவபுரம் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையாக கழிவுநீர் மற்றும் வடிகால் கால்வாய் வசதிகள் அமைக்காததால் தற்போது பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக வீடுகளுக் குள்ளும் வீடுகளை சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் குடியிருக்க முடியாமல் அப்பகுதி மக் கள் பரிதவித்து வருகின்ற னர். மேலும் அங்குள்ள குழந்தைள் மற்றும் பெரிய வர்கள் ஏராளமானோர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். மேலும் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்துள்ளதால் மாணவர் கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் கண்துடைப் பிற்கு மட்டுமே வந்து பார் வையிட்டு செல்வதாகவும் எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×