search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trains stop"

    • 1 மணி நேரம் வரை தாமதமாக சென்றன
    • பயணிகள் அவதி

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது.

    காட்பாடி அடுத்த திருவலத்தை கடந்து சென்றபோது சரக்கு ரெயிலின் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் திடீரென உடைந்தது.

    இதனால் ரெயில் பெட்டிகள் தனித்தனியாக கழன்றது. இதனைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    இதுகுறித்து காட்பாடி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

    திருவலம் அருகே சரக்கு ரெயிலின் கப்ளிங் உடைந்து தண்டவாளத்தில் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் திருவலத்திற்கு முன்பாக பயணிகள் ெரயில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தை தாண்டி நடு வழியில் நிறுத்தப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த ெரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சரக்கு ரெயிலில் உடைந்த கப்ளிங்கை சரி செய்து பெட்டிகளை இணைத்தனர். இதையடுத்து சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதனால் சுமார் ஒரு மணி நேரம் காட்பாடி-சென்னை மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் அந்த நேரத்தில் அரக்கோணம், சென்னை மார்க்கமாக சென்ற மற்ற ரெயில்களும் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக சென்றன.

    எழும்பூர் நோக்கி வந்த அனந்தபுரி மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

    அடையாறில் தங்கி இருந்த அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனி ரெயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

    திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயிலில் அவர் தடா சென்று பின்னர் மீண்டும் தனி ரெயிலில் சென்னை திரும்ப பயணத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. அவர் பயணம் செய்வதற்காக தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் தனி ரெயில் திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

    ஆனால் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரசும், திருவனந்தபுரத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரசும் எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 7 மணிக்கு தாம்பரம் நிலையம் வந்து சேர்ந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட சிக்னல் கொடுக்கப்படவில்லை.

    வெங்கையாநாயுடு செல்ல வேண்டிய தனி ரெயில் புறப்பட தாமதம் ஆனதால் முத்துநகரும், அதனை தொடர்ந்து வந்த அனந்தபுரி எக்ஸ்பிரசும் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டன. தனி ரெயில் எழும்பூர், சென்ட்ரல் வழியாக செல்ல வேண்டும் என்பதால் அதே வழித்தடத்தில்தான் முத்துநகரும், அனந்தபுரியும் வர வேண்டியது இருந்தது. இதனால் 2 ரெயில்களும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டன.

    மேலும் எழும்பூர் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டால் அந்த வழியாக தனி ரெயில் செல்ல வழி கிடையாது என்பதால் தென் மாவட்ட ரெயில்கள் இரண்டையும் தாம்பரத்தில் நிறுத்தி விட்டனர்.

    துணை ஜனாதிபதி பயணம் தாமதம் இல்லாமல் தொடங்கி இருக்குமானால் முத்துநகர், அனந்தபுரி ரெயில்கள் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. ஆனால் அவர் செல்லக்கூடிய தனி ரெயில் 7.50 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது. அதனால் தாம்பரத்தில் நிறுத்தப்பட்ட 2 ரெயில்களிலும் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    சிலர் மின்சார ரெயில்களில் ஏறி வீட்டிற்கு சென்றனர். வயதானவர்கள், குழந்தையுடன் வந்தவர்கள் மட்டுமே அந்த ரெயில்களில் காத்து கிடந்தனர்.
    ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் 5 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் இருந்து மொரப்பூர் இடையேயான தண்டவாளம் பராமரிப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் இன்று காலை ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காக்கங்கரை என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதிகாரிகள் உடனடியாக அந்த மார்க்கமாக வந்த டாடா நகர் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், ஐதராபாத் - எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ், சாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்பட 5 ரெயில்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியிலேயே நிறத்தப்பட்டது.

    ரெயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்தனர்.

    பின்னர் 5 ரெயில்களும் 1 மணி நேர காலதாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றன. ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை கண்டு பிடித்து சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    ×