என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CP Radhakrishnan"
- கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.
- 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது
கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கடந்த 1998-ல் வெற்றி பெற்றது.
பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.பி. ஆனார். தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். சுப்பையனை எதிர்த்து 4,49,269 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது.
இதையடுத்து 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.
2004 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனிடம் தோல்வி அடைந்தார். 2014-ல் 4-வது முறையாக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து 2-ம் இடத்தை பிடித்தார்.
பின்னர் 2019-ல் பா.ஜ.க. சார்பில் 5-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கோவை தொகுதியில் பா.ஜ.க. வென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது. ஆனால் இந்த முறை தி.மு.க., அ.தி.மு.க.வும் தனித்தனியாக களம் காண்கின்றன. இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. இதில் அண்ணாமலை வெற்றிக்கணக்கை தொடங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
- தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார்.
புதுடெல்லி:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை அவர் இந்த பொறுப்புகளை வகிப்பார்.
தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதை தொடர்ந்து அதே பதவியை கவனிக்கும் பொறுப்பு மற்றொரு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்த வல்லி அம்பிகா சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
- மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகில் புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி அம்பிகாசமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ராம பிரானும், அகத்திய மாமுனிவரும் வழிபட்ட கோவிலாகும். இக்கோவிலில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்ய வந்தார்.
கோவில் நிர்வாகி வி.ஆர்.சிவராமன் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக திரண்டு பூரண கும்பம் மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். வருவாய் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார். அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த கோவிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் முக்கிய விவரங்கள் அடங்கிய இணையதளத்தை கவர்னர் தொடங்கி வைத்து அந்த இணையதளம் மூலம் கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். 3 மணி நேரம் இந்த கோவிலில் கவர்னர் இருந்தார். அர்ச்சனையும் செய்தார்.
விவேகானந்தா பள்ளி மாணவிகள் 108 பேர் சிவனின் பெருமையை விளக்கும் நாட்டிய நடனம் ஆடினார்கள். தொடர்ந்து ருத்ர தாண்டவ நிகழ்ச்சியும் நடந்தது.
- ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
- சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
சேலம்:
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.
சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கவர்னர் கேட்கிறார்.
- நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.
ஈரோடு:
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு வந்தார். முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஜார்கண்ட் மாநில மக்கள் அணுகுமுறை அருமையாக உள்ளது. 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் மக்களை சந்தித்து உள்ளேன். 8 ஆயிரம் தரை வழி போக்குவரத்து பயணம் செய்துள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற்றம் அடையும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தலைத்து ஒங்கவும், முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நாடு முன்னேற்றம் அடைய அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும்.
தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கவர்னர் கேட்கிறார். இந்த கவர்னரை போன்று இதுவரை தமிழகத்திற்கு கவர்னர் கிடைக்கவில்லை. நீட் தேர்வு மாற்றி அமைக்க வேண்டும் என தி.மு.க. விரும்பினால் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டுமே தவிர கவர்னர் மீது குறை சொல்லக்கூடாது.
தமிழக அரசு எந்த மசோதாவை அனுப்பினாலும் கவர்னர் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. அரசியல் சாசனத்திற்கு உட்பட தான் இருந்தால் மட்டுமே கவர்னர் ஒப்புதல் தருவார்.
இந்திய தண்டனை சட்டத்தின் பெயருக்கு எவ்வளவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களோ அந்த அளவிற்கு ஆதரவும் உள்ளது. மேலும் நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை.
- ராஜீவ் காந்தி தேசிய தலைவராக தான் இந்த மண்ணில் இறந்தார்.
கோவை:
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. அரசு காலம் காலமாக ஒன்றைத்தான் செய்து வருகிறது. தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதும், தவறான முன்னுதாரணங்களை உதாரணமாக காட்டி மேலும் மேலும் தவறுகளை செய்வதும் தான் திமுக அரசின் சாதனையாக உள்ளது.
கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை. அராஜகம் செய்பவர்களின் கைகளில் அடங்கிப் போகிற மாநிலமாக ஆகிவிடுமோ என்ற அச்சம் நல்லுணர்வு படைத்த அத்தனை தமிழ் நெஞ்சங்களிலும் இருக்கிறது.
ராஜீவ் காந்தியை கொன்றவர்களை கட்டி அணைத்தார். அப்போது அவர் ஒரு செய்தி சொல்கிறார். எந்தத் தவறு இன்றைக்கு நாம் செய்கிறோமோ, அந்த தவறு மீண்டும் நம்மை வந்து தாக்கும். அதுதான் கர்மா. இன்றைக்கு ஸ்டாலின் எந்த தவறுகளை செய்கின்றாரோ அந்த தவறுகளுக்குரிய விலையை அவர் நிச்சயமாக கொடுக்க வேண்டியது இருக்கும்.
ராஜீவ் காந்தி என்பவரை காங்கிரஸ் தலைவராக பார்க்க கூடாது. அவர் தேசிய தலைவராக தான் இந்த மண்ணில் இறந்தார். காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் உணவுகள் வீணாவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அதை தருவதற்கு அரசு முயல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- நடிகர் ரஜினி சமீபத்தில் இமயமலைக்கு சென்றிருந்தார்.
- இவர் பயணம் நேற்றுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிக ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.
சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார். இவரின் இமயமலை பயணம் நேற்றுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினி, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
- பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார்.
- ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ராஞ்சி:
தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். மேலும், அவர் கவர்னராக பொறுப்பேற்க ஜார்க்கண்ட் சென்றார். இந்நிலையில், ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஹெமந்த் சோரன், அமைச்சரவை மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.
- ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- சென்னையில் இருந்து விமானத்தில் ராஞ்சி புறப்பட்டு சென்றார்.
சென்னை :
ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். இதற்காக நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ராஞ்சி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது வைத்து உள்ள பாசத்துக்கு தந்துள்ள பெருமைக்குரிய பரிசாக இதை பார்க்கிறேன். உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் பெருமையை உலகம் உணர்கின்ற வகையில் அங்கு வாழும் ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றுவதுதான் குறிக்கோளாக இருக்கும். ஜார்கண்ட்- தமிழகம் இடையே பாலமாக இருக்க பதவி ஏற்றபின் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது திட்டமிட்ட செயல் அல்ல.
- தேர்தல் பிரசாரத்துக்கு ஓ.பன்னீர்செல்வதை அழைப்பதும், அழைக்காததும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு
சென்னை:
ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து டி.ஜெயக்குமார் அழைக்கப்பட்டு இருந்தார்.
ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ந்து கூறிவரும் ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்கவில்லை. இதனால் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருப்பதாக அவரது ஆதரவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தங்கள் தலைவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு உரிய மரியாதை தரவில்லை என்று பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்தினார். ஆனால் இரு தரப்பையும் சந்தித்து பேசி ஓ.பன்னீர்செல்வம் அணியை வாபஸ் பெற வைத்தார் அண்ணாமலை.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஆனால் எடப்பாடி தரப்பிலிருந்து யாரும் அவரை அழைக்கவில்லை.
டெல்லி பா.ஜனதா தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தும் தமிழக பா.ஜனதா தன்னை கை விடுவதாக அதிருப்தியில் உள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் அவரை அண்ணாமலை அப்படி அழைப்பதில்லை என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையமோ அல்லது சுப்ரீம் கோர்ட்டோ அங்கீகரிக்காத நிலையில் அவரை மட்டும் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்து வருவதாகவும் இது திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை அவமதிப்பதாகவே நினைப்பதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகிறார்கள்.
20-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதாவது:-
இப்போது ஈரோட்டில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் தான் கவனம் செலுத்த வேண்டும்.
சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது திட்டமிட்ட செயல் அல்ல. அப்படி பார்த்தால் எங்கள் கூட்டணியில் இருக்கும் மேலும் சில கட்சி தலைவர்களைகூட அழைக்கவில்லையே.
தேர்தல் பிரசாரத்துக்கு ஓ.பன்னீர்செல்வதை அழைப்பதும், அழைக்காததும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு. அதேபோல் பிரசாரம் செய்வதும், செய்யாததும் ஓ.பன்னீர் செல்வத்தின் முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
- யாருக்கு எந்த பொறுப்பு எப்போது கிடைக்கும் என்பதை நாம் அறியமுடியாது.
- கவர்னர் பொறுப்போ அல்லது எந்த பொறுப்பாக இருந்தாலும் கிடைத்த பொறுப்பின் மூலம் நாம் சரியாக சமுதாயத்திற்காக பணியாற்ற வேண்டும்.
கோவை:
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கவர்னராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட சமயம் திருப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் இருந்தார். கவர்னராக நியமிக்கப்பட்டதும் தனது தாயாரிடம் ஆசி பெற்றார்.
தகவல் அறிந்து பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டில் திரண்டு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை சென்னை செல்வதற்காக திருப்பூரில் இருந்து கார் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஆளுநர் பதவி எனக்கு கிடைத்துள்ளதை மகத்தான ஒரு மரியாதையாகவும், தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன்.
நாம் என்ன தான் தொடர்ந்து அரசியலில் உழைத்து கொண்டிருந்தாலும், நாம் நினைக்கிற திசையில் நமது அரசியல் பயணம் இருப்பது இல்லை.
யாருக்கு எந்த பொறுப்பு எப்போது கிடைக்கும் என்பதை நாம் அறியமுடியாது. எனவே கவர்னர் பொறுப்போ அல்லது எந்த பொறுப்பாக இருந்தாலும் கிடைத்த பொறுப்பின் மூலம் நாம் சரியாக சமுதாயத்திற்காக பணியாற்ற வேண்டும். எனது அரசியல் பயணமானது அந்த வகையில் தான் இருந்து வந்திருக்கிறது.
பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தமிழ் மீதும், தமிழகத்தின் மீதும், தமிழ் கலாசாரம், இலக்கியம், பண்பாட்டின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர். அதன் வெளிப்பாடு தான் தமிழகத்தை சேர்ந்த 3 தமிழர்கள் வெவ்வேறு மாநில கவர்னர்களாக பணியாற்றும் அரிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதற்காக பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பொதுவாக குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும். அது நியாயமானதும் கூட தான். அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் நாம் மனவலிமையோடு மேற்கொண்டால் எல்லாம் காணாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
- தமிழக பாரதிய ஜனதா தலைவராக பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பதவியை ஏற்கனவே மத்திய அரசு வழங்கியது.
- தமிழகத்தில் 3-வது நபராக சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா தலைவராக பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பதவியை ஏற்கனவே மத்திய அரசு வழங்கியது. அவர் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக பணியாற்றி வருகிறார்.
அவரை தொடர்ந்து இல.கணேசனும் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் மணிப்பூர் மாநில கவர்னராக பணியாற்றி வந்தார். தற்போது தமிழகத்தில் 3-வது நபராக சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்