search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபி ராதாகிருஷ்ணன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
    • தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

    அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை அவர் இந்த பொறுப்புகளை வகிப்பார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதை தொடர்ந்து அதே பதவியை கவனிக்கும் பொறுப்பு மற்றொரு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்த வல்லி அம்பிகா சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகில் புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி அம்பிகாசமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ராம பிரானும், அகத்திய மாமுனிவரும் வழிபட்ட கோவிலாகும். இக்கோவிலில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்ய வந்தார்.

    கோவில் நிர்வாகி வி.ஆர்.சிவராமன் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக திரண்டு பூரண கும்பம் மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். வருவாய் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார். அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த கோவிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் முக்கிய விவரங்கள் அடங்கிய இணையதளத்தை கவர்னர் தொடங்கி வைத்து அந்த இணையதளம் மூலம் கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். 3 மணி நேரம் இந்த கோவிலில் கவர்னர் இருந்தார். அர்ச்சனையும் செய்தார்.

    விவேகானந்தா பள்ளி மாணவிகள் 108 பேர் சிவனின் பெருமையை விளக்கும் நாட்டிய நடனம் ஆடினார்கள். தொடர்ந்து ருத்ர தாண்டவ நிகழ்ச்சியும் நடந்தது.

    • ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
    • சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    சேலம்:

    சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.

    சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.

    சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கவர்னர் கேட்கிறார்.
    • நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு வந்தார். முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஜார்கண்ட் மாநில மக்கள் அணுகுமுறை அருமையாக உள்ளது. 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் மக்களை சந்தித்து உள்ளேன். 8 ஆயிரம் தரை வழி போக்குவரத்து பயணம் செய்துள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற்றம் அடையும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தலைத்து ஒங்கவும், முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நாடு முன்னேற்றம் அடைய அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும்.

    தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கவர்னர் கேட்கிறார். இந்த கவர்னரை போன்று இதுவரை தமிழகத்திற்கு கவர்னர் கிடைக்கவில்லை. நீட் தேர்வு மாற்றி அமைக்க வேண்டும் என தி.மு.க. விரும்பினால் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டுமே தவிர கவர்னர் மீது குறை சொல்லக்கூடாது.

    தமிழக அரசு எந்த மசோதாவை அனுப்பினாலும் கவர்னர் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. அரசியல் சாசனத்திற்கு உட்பட தான் இருந்தால் மட்டுமே கவர்னர் ஒப்புதல் தருவார்.

    இந்திய தண்டனை சட்டத்தின் பெயருக்கு எவ்வளவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களோ அந்த அளவிற்கு ஆதரவும் உள்ளது. மேலும் நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜார்க்கண்ட் மக்கள் சிறப்பாகவும், எளிமையாகவும் வாழ்கின்றனர்.
    • இந்தியாவிலேயே அதிக தாது சுரங்கம் ஜார்க்கண்டில் தான் இருக்கிறது.

    திருப்பூர்:

    பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தற்போது சொந்த ஊரான திருப்பூருக்கு வந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜார்க்கண்ட் மக்கள் சிறப்பாகவும், எளிமையாகவும் வாழ்கின்றனர்.பெரிதாக ஆசைப்படுவதில்லை.ஆசைப்படாததால் மகிழ்ச்சிகரமாக வாழ்கின்றனர். சிறு, குறு தொழில்கள் அங்கு குறைவு. பெரிய இரும்பு ஆலைகள் இருந்தும், சுரங்கம் இருந்தும் மக்கள் பின்தங்கியுள்ளனர்.மரங்களை தெய்வமாக வணங்கும் உயர்ந்த கலா சாரம் உள்ளது. மரங்களுக்காக பெரிய பண்டிகை கொண்டாடுவதை பார்த்து அசந்து போனேன்.

    இந்தியாவிலேயே அதிக தாது சுரங்கம் ஜார்க்கண்டில் தான் இருக்கிறது. தங்கம், வைர சுரங்கம் தவிர மற்ற சுரங்கங்கள் அதிகம் உள்ளன.அனைவருக்கும் இந்தி தெரிந்துள்ளது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு குழு மக்களுக்கும் தனித்தனி மொழி இருக்கின்றன.

    தி.மு.க.,வை பொறுத்த வரை, பல்வேறு நிலையில், பலவகை நிலைப்பாட்டை எடுக்கும் கட்சி. மது இல்லாத தமிழகம் இருந்தால் மாநில வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. மதுவிலக்கால் 6 மாதம் அல்லது ஓராண்டு மட்டும் அரசுக்கு சிரமமாக இருக்கும். அதன்பின் ஜி.எஸ்.டி., வரி வருவாய் வாயிலாக நிலைமை சீராகி விடும். மது பழக்கத்தால் சாதாரண மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. சாராய ஆலை அதிபர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.

    பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற சிந்தனையை நோக்கி ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும். பெண்களுக்கு சரியான உரிமை கிடைக்க பொது சிவில் சட்டம் அவசியம். குறிப்பாக பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார்.
    • ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    ராஞ்சி:

    தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். மேலும், அவர் கவர்னராக பொறுப்பேற்க ஜார்க்கண்ட் சென்றார். இந்நிலையில், ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

    ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார்.

    இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஹெமந்த் சோரன், அமைச்சரவை மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.

    • ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • சென்னையில் இருந்து விமானத்தில் ராஞ்சி புறப்பட்டு சென்றார்.

    சென்னை :

    ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். இதற்காக நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ராஞ்சி புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது வைத்து உள்ள பாசத்துக்கு தந்துள்ள பெருமைக்குரிய பரிசாக இதை பார்க்கிறேன். உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் பெருமையை உலகம் உணர்கின்ற வகையில் அங்கு வாழும் ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றுவதுதான் குறிக்கோளாக இருக்கும். ஜார்கண்ட்- தமிழகம் இடையே பாலமாக இருக்க பதவி ஏற்றபின் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது திட்டமிட்ட செயல் அல்ல.
    • தேர்தல் பிரசாரத்துக்கு ஓ.பன்னீர்செல்வதை அழைப்பதும், அழைக்காததும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு

    சென்னை:

    ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து டி.ஜெயக்குமார் அழைக்கப்பட்டு இருந்தார்.

    ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ந்து கூறிவரும் ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்கவில்லை. இதனால் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருப்பதாக அவரது ஆதரவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தங்கள் தலைவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு உரிய மரியாதை தரவில்லை என்று பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்தினார். ஆனால் இரு தரப்பையும் சந்தித்து பேசி ஓ.பன்னீர்செல்வம் அணியை வாபஸ் பெற வைத்தார் அண்ணாமலை.

    இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஆனால் எடப்பாடி தரப்பிலிருந்து யாரும் அவரை அழைக்கவில்லை.

    டெல்லி பா.ஜனதா தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தும் தமிழக பா.ஜனதா தன்னை கை விடுவதாக அதிருப்தியில் உள்ளார்.

    ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் அவரை அண்ணாமலை அப்படி அழைப்பதில்லை என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையமோ அல்லது சுப்ரீம் கோர்ட்டோ அங்கீகரிக்காத நிலையில் அவரை மட்டும் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்து வருவதாகவும் இது திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை அவமதிப்பதாகவே நினைப்பதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகிறார்கள்.

    20-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதாவது:-

    இப்போது ஈரோட்டில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது திட்டமிட்ட செயல் அல்ல. அப்படி பார்த்தால் எங்கள் கூட்டணியில் இருக்கும் மேலும் சில கட்சி தலைவர்களைகூட அழைக்கவில்லையே.

    தேர்தல் பிரசாரத்துக்கு ஓ.பன்னீர்செல்வதை அழைப்பதும், அழைக்காததும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு. அதேபோல் பிரசாரம் செய்வதும், செய்யாததும் ஓ.பன்னீர் செல்வத்தின் முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாருக்கு எந்த பொறுப்பு எப்போது கிடைக்கும் என்பதை நாம் அறியமுடியாது.
    • கவர்னர் பொறுப்போ அல்லது எந்த பொறுப்பாக இருந்தாலும் கிடைத்த பொறுப்பின் மூலம் நாம் சரியாக சமுதாயத்திற்காக பணியாற்ற வேண்டும்.

    கோவை:

    தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கவர்னராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட சமயம் திருப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் இருந்தார். கவர்னராக நியமிக்கப்பட்டதும் தனது தாயாரிடம் ஆசி பெற்றார்.

    தகவல் அறிந்து பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டில் திரண்டு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை சென்னை செல்வதற்காக திருப்பூரில் இருந்து கார் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஆளுநர் பதவி எனக்கு கிடைத்துள்ளதை மகத்தான ஒரு மரியாதையாகவும், தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன்.

    நாம் என்ன தான் தொடர்ந்து அரசியலில் உழைத்து கொண்டிருந்தாலும், நாம் நினைக்கிற திசையில் நமது அரசியல் பயணம் இருப்பது இல்லை.

    யாருக்கு எந்த பொறுப்பு எப்போது கிடைக்கும் என்பதை நாம் அறியமுடியாது. எனவே கவர்னர் பொறுப்போ அல்லது எந்த பொறுப்பாக இருந்தாலும் கிடைத்த பொறுப்பின் மூலம் நாம் சரியாக சமுதாயத்திற்காக பணியாற்ற வேண்டும். எனது அரசியல் பயணமானது அந்த வகையில் தான் இருந்து வந்திருக்கிறது.

    பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தமிழ் மீதும், தமிழகத்தின் மீதும், தமிழ் கலாசாரம், இலக்கியம், பண்பாட்டின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர். அதன் வெளிப்பாடு தான் தமிழகத்தை சேர்ந்த 3 தமிழர்கள் வெவ்வேறு மாநில கவர்னர்களாக பணியாற்றும் அரிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதற்காக பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    பொதுவாக குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும். அது நியாயமானதும் கூட தான். அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் நாம் மனவலிமையோடு மேற்கொண்டால் எல்லாம் காணாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். 

    • தமிழக பாரதிய ஜனதா தலைவராக பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பதவியை ஏற்கனவே மத்திய அரசு வழங்கியது.
    • தமிழகத்தில் 3-வது நபராக சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவராக பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பதவியை ஏற்கனவே மத்திய அரசு வழங்கியது. அவர் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக பணியாற்றி வருகிறார்.

    அவரை தொடர்ந்து இல.கணேசனும் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் மணிப்பூர் மாநில கவர்னராக பணியாற்றி வந்தார். தற்போது தமிழகத்தில் 3-வது நபராக சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    • சி.பி. ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும்.
    • தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், மணிப்பூர் கவர்னராக பதவி வகித்து வந்தார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர கவர்னராக இருந்த பகத் சிங் கோஷி யாரி, வயது மூப்பு காரணமாக கவர்னர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.

    இதேபோல் லடாக் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூரும் ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார்.

    இதையடுத்து இந்த 2 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் சில கவர்னர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநில கவர்னர் பதவியுடன் ஒரு சில மாநிலங்களின் கவர்னராக கூடுதல் பதவியும் வகித்து வந்தனர்.

    இதனால் அந்த மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

    இதையடுத்து இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவில் 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் மகாராஷ்டிரா மற்றும் லடாக் கவர்னர்களின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவர் தமிழக பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, கட்சிக்காக அயராது உழைத்து அந்த கட்சியில் பல்வேறு உயரிய பொறுப்புகளையும் அவர் வகித்து உள்ளார்.

    பல்வேறு மாநில தேர்தல்களுக்கும் பொறுப்பாளராக கட்சியால் நியமிக்கப்பட்டு, அதிலும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அவர் ஆற்றிய அந்த பணிக்காக தற்போது மத்திய அரசு கவர்னர் பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளது.

    சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். இவரது மனைவி பெயர் சுமதி. இவருக்கு ஹரி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். ராதாகிருஷ்ணன் பி.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவர் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் படித்தார். விவசாய பணியிலும் தீவிரம் ஆர்வம் காட்டினார்.

    பாரதிய ஜனதா கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்க்க கடுமையாக பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.

    இவர் கோவை பாராளுமன்ற தொகுதியில் 5 முறை போட்டியிட்டுள்ளார். இதில் 1998 மற்றும் 1999-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல்களில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    1998 தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 தேர்தலில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.

    சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழக பாரதிய ஜனதா தலைவராகவும் பணியாற்றி உள்ளார். மாநில தலைவராக இருந்த காலத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார். தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்கவும், வலுப்படுத்தவும் இந்த யாத்திரை ஊக்கமாக கருதப்பட்டது.

    சமீபத்தில் அவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினராகவும், கேரள மாநில பாரதிய ஜனதா பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். 2016 முதல் 2019 வரை அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார்.

    ஜார்கண்ட் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று அல்லது நாளைக்கு பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    விரைவில் அவர் ஜார்க்கண்ட் சென்று அந்த மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்று கொள்ள உள்ளார். ஜார்கண்டின் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜனதா கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், மணிப்பூர் கவர்னராக பதவி வகித்து வந்தார். தற்போது அவர் நாகலாந்து கவர்னராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அறிவித்தார்.

    • தமிழிசை சவுந்தர ராஜன் வாழ்த்து செய்தியில் கவர்னராக தனது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
    • சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநில கவர்னராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், நான் பெரிதும் போற்றும் சி.பி.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கவர்னராக தனது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஜார்க்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்ட, பா.ஜனதா மாநில முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதேபோல் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ×