search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் இருந்து 3-வது கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
    X

    தமிழ்நாட்டில் இருந்து 3-வது கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

    • தமிழக பாரதிய ஜனதா தலைவராக பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பதவியை ஏற்கனவே மத்திய அரசு வழங்கியது.
    • தமிழகத்தில் 3-வது நபராக சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவராக பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பதவியை ஏற்கனவே மத்திய அரசு வழங்கியது. அவர் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக பணியாற்றி வருகிறார்.

    அவரை தொடர்ந்து இல.கணேசனும் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் மணிப்பூர் மாநில கவர்னராக பணியாற்றி வந்தார். தற்போது தமிழகத்தில் 3-வது நபராக சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    Next Story
    ×