என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜார்க்கண்ட் புதிய கவர்னராக பதவியேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்18 Feb 2023 11:12 AM GMT
- பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார்.
- ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ராஞ்சி:
தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். மேலும், அவர் கவர்னராக பொறுப்பேற்க ஜார்க்கண்ட் சென்றார். இந்நிலையில், ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஹெமந்த் சோரன், அமைச்சரவை மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X